ஊடலே யுத்த காரணி...!

இந்தியாவில் இப்பொழுது கால்சென்டர்கள் அதிகமாகி
விட்டது. குமாரசாமி உள்ளே சென்றதும் ஆடம்
ஆகிவிடுகிறான். மாதவியோ - மிஷல்....
இப்படியே போகும் வாழ்க்கையில்..உலகின் ஏதோவொரு
மூலையிலிருக்கும் ஒருவருக்கு பதில் சொல்லிக்கொண்டு
வசவுகளைவாங்கிக்கொண்டு வாழும் இவர்களால் என்னன்ன
நேரலாம் என்பதன் கற்பனை..!

இது ஒரு கவி(க்க)தை !


அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில்
இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்!
அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள்
அனகோண்டாவாக மாற...
ஆனந்துக்கும் , அகிலாவுக்கும்
ஆரம்பமானது சண்டை..!

அடிப்படைக்காரணம்.?
நேரமாகிவிட்டது இன்னும்
காலுறையைக்காணவில்லையாம்!
யாருக்கு பொறுப்பு என்று
பாப்பையா இல்லா பட்டிமன்றம்!

தடித்த வார்த்தைகளை
தவ்விப் பிடித்துக் கொண்டு
தகராறை முற்றவிட்டு
கணவனும் மனைவியும்
கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் !

நிறுவனத்தில் நுழைந்து
தன் இருக்கைவந்து
' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு
அழைப்புக்காய் காத்திருக்கிறான்.!

'என்னமாய் பேசிவிட்டாள் !'
துடிக்கிறது உதடுகள்..
முதல் அழைப்பு வந்ததுமே
பதில்சொல்ல விழையும் முன்'
கேட்பவனின் கேள்வியில்
கடுகளவு கோபம்!
'உன் நிறுவன மடிக்கணிணியில்
இப்படி ஒரு பிரச்சனை!'
என்னவென்று விளக்கவேண்டிய
இவன் பதிலும் இனிமையில்லை.!

இவன் பொறுமையெல்லாம்
எப்போதோ போய்விட்டது!
அதை எடுத்து மடித்துக்கொண்டு
அவள் காலை சென்றுவிட்டாள்

இது தெரியா எதிராளி
எதிர்க்கேள்வி கேட்டுவைக்க
எரிந்து விழுந்து முழங்குகிறான்..
"என்னய்யா ஆட்கள் நீங்கள்?
இது கூடத்தெரியாமல்?
என் உயிரை வாங்குகிறீர்?"

பேச்சுவார்த்தை தடிக்கிறது.
அவன் பேச
இவன் பேச
ஆத்திரம் அதிகம் பேச
மொத்ததில் அவ்வழைப்பு
மூர்க்கமாய் முடிகிறது !

முடிந்த அழைப்புக்குப்பின்
முகம்தாங்கி சிந்தித்து
எவனோ ஒருவன்
இன்றுவந்து
என் வாயில் சிக்கினானே
என்னவெல்லாம் பேசிவிட்டேன்
என்று எண்ணி மாய்ந்து போனான்!

அது...
வேறொரு நாடு!
அதிபர் மாளிகையின் அவசரக்கூட்டம்!
இராணுவத்தளபதி
அவர்தன் செயலரை
அச் செய்தி தயாரா?
என்று அவசரமாய் கேட்டுவைக்க
'அய்யா ! அத்தகவலெல்லாம்
இந்த மடிக்கணிணியில் போட்டு
மறக்காமல் எடுத்து வைத்தேன்'!

அந்தக் கணிணியிலே
ஏதோ கோளாறு!
கோளாறு சரிசெய்யும்
நிறுவனத்தை தொடர்பு கொண்டால்
மரியாதை இல்லாமல்
ஒரு மனிதன் பேசுகிறான்..!"
என்று கூறி வருந்தி நிற்க,

'அதுவெல்லாம் தெரியாது.
எனக்குடனே சரியாகி
கூட்டத்தில் காட்டவேண்டும்.!
அதிபர் முன்னிலையில்
என் கவுரவம் சரிந்துவிடும்.
ஏதாவது செய்து
சரியாகக் கொணருங்கள்!
என்றந்தத் தளபதியும்
எடுத்தெரிந்து பேசிவிட..

நிறுவனத்தை தொடர்புகொள்ள
நேரமில்லை செயலருக்கு,
அலுவலகத்தில் வேலைபார்க்கும்
ஆண்டனியைக்கூப்பிட்டு
காகிதத்தின் குறிப்புகளை
அவசரப்படியெடுத்து
அனுப்பிவிட்டார்
தளபதிக்கு!

தவறான தகவலென்றே
தெரியாமல் தளபதியும்
அதிபரிடம் எடுத்துவைக்க..!
அவர் தந்த விபரப்படி
அயல்நாட்டின் மீது
அபாண்டம் ஏறிநிற்க

அதிபரும்;
"எடுக்கிறேன் பார் நடவடிக்கை !"
என்றுலகில் சீறிவைக்க

தொடங்கியது யுத்தம்!
யுத்ததில் பல நாடும்
தன்படையை அனுப்பிவைக்க,
உலகமே இருதரப்பாய்
உடைந்து நிற்கிறது.

போர்க்களம் கண்ட நாட்டில்
சீறிப்பாயும் குண்டுகளை
சி என் என் காட்டும்போது

அத்தனை செய்திகளையும்
அகிலாவின்
அரவணைப்பில்
தொலைக்காட்சியில்
இரசிப்பது....

நமது  

ஆனந்த்.!!!!      

(இதுக்கு இன்னொரு முடிவுத்தொடுப்பும் இருக்கு....அடுத்த பதிவுல    .....அதுதான்..!)


Comments

  1. நிதர்சனத்தை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆஹா, என்னதொரு கற்பனை. எங்கேயோ தொட்டு எங்கோயோ எடுத்திட்டுப் போயி ஒரு உலக யுத்தத்தில முடிச்சுட்டியே தம்பீ...

    நெறைய டுவிஸ்ட் எல்லாம் கொடுக்கிறீயே, அந்த வித்தையை எனக்கும் கத்துக் கொடேன்...

    அடுத்தப் பாகம் எப்போ...?

    ReplyDelete
  3. வசன கவிதை! வார்த்தைகள சுழட்டி போட்டு பந்தாடறிங்க, எதுகை மோனையெல்லாம் எகிறுது. டீ. ஆர் சொந்தக்காரரா நீங்க?

    ReplyDelete
  4. பேனைப் பெருமாளாக்கி ...

    ReplyDelete
  5. //புதுகைத் தென்றல் said...

    நிதர்சனத்தை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்.//

    ஆமாங்க..நடந்தாலும் நடக்கலாம்..!

    ReplyDelete
  6. //ஆஹா, என்னதொரு கற்பனை. எங்கேயோ தொட்டு எங்கோயோ எடுத்திட்டுப் போயி ஒரு உலக யுத்தத்தில முடிச்சுட்டியே தம்பீ...//

    ச்சும்மா ஒக்காந்து யோசிப்போம்ல..!

    //நெறைய டுவிஸ்ட் எல்லாம் கொடுக்கிறீயே, அந்த வித்தையை எனக்கும் கத்துக் கொடேன்...//

    அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா..எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான்..!

    ReplyDelete
  7. தம்பி said...

    //வசன கவிதை! வார்த்தைகள சுழட்டி போட்டு பந்தாடறிங்க, எதுகை மோனையெல்லாம் எகிறுது. டீ. ஆர் சொந்தக்காரரா நீங்க?//

    அதெல்லாம் இல்லீங்க..
    ஆமா...இது வாழ்த்தா இல்ல வசவா?

    ReplyDelete
  8. தருமி said...

    //பேனைப் பெருமாளாக்கி ...//


    தங்கள் வருகைக்கு நன்றி சார் !

    அடிக்கடி வாங்க..!

    ஒரே வரியில் விமர்சனம். நச் சுன்னு இருக்கு!
    அதுக்குத்தான் நீங்களெல்லாம் வரணும்ங்கறது..!

    ReplyDelete
  9. வார்த்தைப் பின்னல்...நிகழ்ச்சிக் கோர்வை..அருமை சுரேகா..

    ReplyDelete
  10. //அதெல்லாம் இல்லீங்க..
    ஆமா...இது வாழ்த்தா இல்ல வசவா?
    //

    அவரு இப்டிதாங்க குழப்பமா எதாச்சிம் பண்ணி நம்மையும் குழப்புவாரு.. கண்டுக்காதீங்க.

    ReplyDelete
  11. பாசமலர் சொன்னது..

    //வார்த்தைப் பின்னல்...நிகழ்ச்சிக் கோர்வை..அருமை சுரேகா..//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..!


    இராம்/Raam said...

    கலக்குறீங்க.... :)


    எல்லாம் உங்களையெல்லாம் பாத்துதான்..!


    காயத்ரி said...

    //அவரு இப்டிதாங்க குழப்பமா எதாச்சிம் பண்ணி நம்மையும் குழப்புவாரு.. கண்டுக்காதீங்க.//

    நீங்களும் புரிஞ்சுக்கிட்டீங்களா...? :-)

    அடிக்கடி வாங்க.!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !