மகிழ்துக்கம்...!


மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!

இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு!




கவிதை இதுதான்..!


காணாமல் போன
தோழியைத் தேடும் முயற்சியில்
காவலர்கள் வந்து
பார்க்கச்சொன்ன,
விபத்தில் இறந்த பெண்ணை
அடையாளம் காட்டும்
அந்த விநாடியில்
அவளில்லை என்று
சொல்லும்வரை
பரிதவித்த மனம்
அகமகிழ்ந்தாலும்
அடுத்து
யாரோ ஒருவனுக்கு
அந்தப் பெண்ணை
’அவள்தான்!’
என்று கூறவேண்டியதன்
அவலம் கொஞ்சம்
அதிகமாகவே கனத்தது.

நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

Comments

  1. //அடுத்து
    யாரோ ஒருவனுக்கு
    அந்தப் பெண்ணை
    ’அவள்தான்!’
    என்று கூறவேண்டியதன்
    அவலம் கொஞ்சம்
    அதிகமாகவே கனத்தது.//

    மிக யோசித்த வரிகள். கவிதை அழகு....

    யூத்புல் விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. கவிதை அருமை சுரேகா. இதயம் தொட்டு பேசும் வரிகள். பதிவுக்கு நன்றி, விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். உங்களை பற்றிய வரிகளில் மதம் குறித்து பாரதியின் வரிகளை சொல்லியிருக்கிறீர்கள். எனது மதம் என்ற கவிதையை கொஞ்சம் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி
    இவன் வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

    ReplyDelete
  3. அன்பின் சுரேகா

    கவிதை அருமை - கடைசி வரிகள் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சிகள்

    நல்வாழ்த்துகள் சுரேகா
    இளமை விகடனில் வந்ததற்கு பாராட்டுகள்

    ReplyDelete
  4. //அடுத்து
    யாரோ ஒருவனுக்கு
    அந்தப் பெண்ணை
    ’அவள்தான்!’
    என்று கூறவேண்டியதன்
    அவலம் கொஞ்சம்
    அதிகமாகவே கனத்தது.//

    இதுக்கு பேருதான் நெஞ்சை நக்கறதா??
    அவ்வ்வ்வ்
    :)


    கவிதை நல்லாருக்குண்ணா!

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!
    இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு

    //

    இதுலெயெல்லாம் திருப்தி ஆயிறாதீங்க. எனக்குத் தெரியும் உங்க ரேஞ்ச் என்னன்னு :)

    ReplyDelete
  7. Title super!
    வாழ்த்துக்கள்...

    sayu.

    ReplyDelete
  8. நன்றி க.பாலாசி

    நன்றி வி.என்.தங்கமணி அவர்களே!

    ReplyDelete
  9. நன்றி சீனா அய்யா!

    ReplyDelete
  10. வாப்பா..சிவா..!

    அதானே பாத்தேன் !


    :)

    ReplyDelete
  11. நன்றி bxbybz அவர்களே!

    ReplyDelete
  12. வாங்க அப்துல்லா ஜி!

    இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் ரணகளமாகிக்கிடக்கு! :))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !