புத்தகக் காட்சி - தரிசனங்கள்



பொங்கலுக்கு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்து செல்ல முடியவில்லை. ஒய் எம் சி ஏ வில் நுழையும்போதே, பார்க்கிங்குக்கும், கண்காட்சிக்கும் இருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தெரிந்தது. எப்பொழுதும்போல், தனியாக ஒரு முறை சுற்றிவர ஆரம்பித்தேன்.

இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களும், கற்பிக்கும் கருவிகளும் அதிகம் பங்கெடுத்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற GROLIER நிறுவனம் குழந்தைகளின் அறிவூக்கம் செய்யும் பேக்கேஜைப் பற்றி பொறுமையாக விளக்குகிறார்கள். உண்மையிலேயே பயனுள்ள கல்விப் பொருட்கள்தான். ஆனால் விலை மிகமிக அதிகம். 9 வயதுச் சிறுவனுக்கான கற்றல் கருவிகள் அடங்கிய  செட் 36000 ரூபாய் சொல்கிறார்கள். எங்க ஊர்ல ஒரு வருஷ ஸ்கூல் ஃபீஸே அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். (சதி லீலாவதியில், கோவை சரளா ஹேண்ட் பேக் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தது. ஏனுங்…இந்த பேக்கு  மாட்டுத்தோல்லதானே பண்ணது.. ஆமா!   எம்புட்டு? ஜஸ்ட் ..4000 .. ….எங்கூர்ல மாடே அவ்வளவுதாங்க!)

  சில பதிப்பகங்களின் இடங்களையும், வாங்கவேண்டிய புத்தகங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டபின், மதி நிலையத்தின் ஸ்டால் எண்: 34க்கு வந்து, ‘தலைவா வா!’ புத்தகத்தின் வரவேற்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ‘இப்பதான் சார் ஒருத்தர் நண்பர்களுக்கு பரிசளிக்கணும்னு 4 புக் வாங்கிட்டுப்போறார்’ என்று விற்பனையாளர் சந்தோஷமாகச் சொன்னது, கொஞ்சம் புளகாங்கிதமாக இருந்தது. (நமக்காகச் சொல்லியிருப்பாரோ என்றும் சிந்தித்தது மனது.. இருந்தாலும் சுகமாகவே இருந்தது )

அப்படியே நான்கு அடி எடுத்துவைத்தால் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டால். வேடியப்பன் மிகவும் பிஸியாக இருந்தார். பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்தால், நாகரத்னா பதிப்பகத்தின் குகன் ஒரு பேனர் வைத்திருந்தார். அதில் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களின் படங்களும் , எழுத்தாளர்கள் பெயரும் இருந்தது. அதில் முதலில்..மக்கள் தொலைக்காட்சி புகழ், சுரேகா எழுதிய நீங்கதான் சாவி.. என்று என்னை கலாய்த்திருந்தார். J

மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு தேர் நிலைக்கு வருவதைப்போல், டிஸ்கவரி ஸ்டாலுக்கு வந்தால், கேபிளும், கே.ஆர்.பியும் இருந்தார்கள்.  அளவளாவ ஆரம்பித்தால், அதிஷா வந்தார். பட்டர்ஃப்ளை சூர்யா அண்ணனும் அங்கு இருக்க, அவருடன் பேசும்போது, அண்ணனைப் பற்றிய ஒரு பெரிய உண்மை தெரிந்தது. (அவர் அனுமதியின்றி சொல்லமுடியாது.) உண்மைத்தமிழன் அண்ணாச்சி மிகவும் டிப் டாப்பாக (அண்ணாச்சி..கவனிக்கவும்..டாப்பாக) வந்திருந்தார். கடை வாசலில் கூடிய கூட்டத்தால் வியாபாரம் பாதிக்குமோ என்று வேடியப்பன் பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட உண்மையும் அதுதான். பதிவர்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, புதிதாக அந்த ஸ்டால் பக்கம் வருபவர்கள். கடை கூட்டமா இருக்கு! அடுத்த கடையில் வாங்கிக்கலாம் என்று சென்றுவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. டிஸ்கவரியின் ஓரத்தில் இருக்கும் சந்தில் சங்கத்தைக் கூட்டும் முயற்சியை எடுக்கவேண்டும்.

  அவ்வழியே வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேபிளை வணங்கியோ, நலம் விசாரித்தோ சென்றார்கள். பிரபலமனாலே ப்ராப்ளம்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாரு வந்தார். அவருடன் நின்று ஸ்டால் பெயருடன், போட்டோ எடுத்தே ஆகவேண்டுமென்று வேடியப்பன் அடம் பிடிக்க, கே.ஆர்.பி க்ளிக்கினார். அட்டாச்மெண்ட்டாக நானும், கேபிளும் நின்றோம். இன்னும் சில நண்பர்கள் வந்தார்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அப்படியே அப்பீட்டினேன்.

வெளியில் வரும்போது, கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் லஞ்சமில்லா வேலையைப்பற்றி சிறப்பாகப் பேசி முடித்துக்கொண்டிருந்தார். அடுத்து இரயில்வே ஐஜி. திரு.ஆறுமுகம் பேசினார். ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவருமே புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.

பார்க்கிங் நோக்கி நடையைக் கட்டினேன். வழியில் பலவிதமான வஸ்துக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் சத்தமாக பேசிக்கொண்டு சென்றார்கள்.

”வருஷா வருஷம் வந்திருவேன். குறைந்தபட்சம் 100 புக் வாங்கலைன்னா தூக்கமே வராது.”

”அடேயப்பா… !!  பொதுவா எந்த எழுத்தாளர் ரொம்பப் பிடிக்கும்…?”

” மனுஷ்யபுத்திரன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். ‘துணையெழுத்து’ னு ஒரு நாவல் எழுதியிருப்பாரு…அசத்திட்டாரு மனுஷன்..!! அதைப்படிச்சதுக்கப்புறம்தான் எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமே அதிகமாச்சு! நம்ப கிழக்கு பதிப்பகம்தான் போட்டிருக்காங்க! ”

மனுஷ்யபுத்திரன் – துணையெழுத்து – நாவல் – கிழக்கு … குட் காம்பினேஷன்….!!

Comments

  1. அடாடா... தலையே சுத்திருச்சு எனக்கு. துணையெழுத்து - கிழக்கு - ம.புத்திரன் காம்பினேஷனைப் படிச்சு. நல்ல படிப்பாளிகள்! வாலுக!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கிறேன்...!! படிக்கிற உங்களுக்கே இப்படி இருந்தா.... கேட்ட எனக்கு எப்படி சுத்தியிருக்கும்...?

      Delete
  2. //
    மனுஷ்யபுத்திரன் – துணையெழுத்து – நாவல் – கிழக்கு … குட் காம்பினேஷன்….!!
    //

    :) :) :)

    ReplyDelete
  3. //வழியில் பலவிதமான வஸ்துக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள்//

    உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கவனிச்சீங்களா? :)

      Delete
  4. //அவ்வழியே வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேபிளை வணங்கியோ, நலம் விசாரித்தோ சென்றார்கள்.//

    Final Destination.

    ReplyDelete
    Replies
    1. அது....!!! ஆமா நீங்க என்ன சொல்ல வரீங்க? விதியை மாத்தமுடியாதுன்னா? :)

      Delete
  5. சுரேகாஜி,

    திவ்ய"தரிசனம்"கிடைச்சுதோ?

    //மக்கள் தொலைக்காட்சி புகழ், சுரேகா எழுதிய நீங்கதான் சாவி.. என்று என்னை கலாய்த்திருந்தார்.//

    "பூட்டு" என ஒரு புக்கு போடுங்க, அத்தினியும் மக்கள் தொலைக்காட்சியே வாங்கிடும் :-))

    பேனர் வச்சாரேனு சந்தோஷப்படாம ,பேனர் வச்சவரையே கலாய்க்குறிங்களே :-))


    // வழியில் பலவிதமான வஸ்துக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள்.//

    இதிலென்ன ஆச்சரியம் ,வஸ்த்துக்கள் விக்கத்தானே சந்தையப்போட்டிருக்காங்க, புத்தகங்கள் எல்லாம் "பண்டங்கள்"னு பப்ளிஷர் சொல்லுறப்போ , எல்லாமே வஸ்த்து தான் :-))

    ஆனால் புத்தக சந்தைக்கு வாஸ்து பார்க்காம வச்சுட்டாங்க, இடமே சரியில்லைனு ,ஊருப்பட்ட புலம்பல்கள் கேட்குது, இதனாலேயே நான் இன்னும் போகலை(போகாததற்கு எப்படிலாம் சாக்கு சொல்ல வேண்டியிருக்கு அவ்வ்வ்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்..!

      குகன் நல்ல நண்பர்...அதனால்தான்..!! :)

      Delete
  6. Replies
    1. வாங்க துளசி டீச்சர்!

      Delete
  7. // அவ்வழியே வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேபிளை வணங்கியோ, நலம் விசாரித்தோ சென்றார்கள். //

    பின்னே *தலைவர்*னா சும்மாவா....:-)))

    ReplyDelete
    Replies
    1. ஆமா..அதை மறந்துட்டேனே..!! :)

      Delete
  8. நானும் 21.01.2013 அன்று மதியம் 2.25 மணிக்கு உள்ளே சென்றுவிட்டு 3.45 மணிக்கு வெளியேறிவிட்டேன். வேறு ஒரு வேலையாக திருவாரூரிலிருந்து சென்னைக்கு சென்றிருந்ததால் பொறுமையாக கண்காட்சியை வலம் வந்து நான் பட்டியலிட்டு வைத்திருந்த புத்தகங்களை வாங்க முடியவில்லை. சென்னையில் ஒரு ஆள் நம்பிக்கை துரோகம் செய்ததால் வந்த வினை. அது பெரிய கதை. ஓரிரு நாளில் அதையும் புத்தக கண்காட்சியைப் பற்றியும் பதிவிடுவேன். (பதிவு எழுத மண்டைக்குள் ஒரு சரக்கும் இல்லை. அதனால இப்படித்தான் விஷயத்தை தேத்தணும்.)

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரண்...கட்டாயம் எழுதுங்க!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !