இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
எதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.!! “ உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” ! ” பக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்! கமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன் வந்த புதிது! நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன். கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது. பிறகு.. மாசறு பொன்னே வருக! எனக்கு மிகவும் பிடித்த பாடலானது.
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்.. பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கி
மூலைக்கு வேலையா? வேளையா?? :)
ReplyDelete1. F S S
2 .
3. anything
4. a normal rectangle will have 3 sides
இதுக்கு பதில் போட்டுட்டு சொல்லுங்க. வந்து பார்த்துக்குவேன்.
ReplyDeleteசுரேகா,
ReplyDelete1. F S S
2. add one small line to one plus sign and make it 4
3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்
ik keelvikalai valaiyil annmaiyil engo paarthean endra unmaiyayum sollividukiraen
முரளி said...
ReplyDelete//மூலைக்கு வேலையா? வேளையா?? :)//
வாங்க..வாங்க!
மூளை - Brain
வேலை - work
வேளை - time
Its time to Brain work.. அதுதான்.. :)
//
1. F S S
2 .
3. anything
4. a normal rectangle will have 3 sides
//
சூப்பர்..எல்லாம் புலியா இல்ல இருக்கீங்க!
மாதங்கி said...
ReplyDelete//1. F S S
2. add one small line to one plus sign and make it 4
3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//
கலக்கிட்டீங்க!
சூப்பர்.
அவ்வளவுதான்..எனக்கு 2வது பதிவுக்கு வேலையே இல்லை!
1.
ReplyDelete2.545+5=550(add a small line to + to make it 4)
3.anything
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்
பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.
ILA(a)இளா said...
ReplyDelete//1.
2.545+5=550(add a small line to + to make it 4)
3.anything
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//
சூப்பருங்கண்ணா.. முதல் பதில் மட்டும்..F S S
//பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.//
அட...ஆமா..நான்பாட்டுக்கும் லூசுத்தனமா முன்னாடியே.திரையை விலக்கிட்டேன்.
ஸாரிண்ணா..இது தோணவே இல்லை.
அதுக்குத்தான் இளா அண்ணன் வேணும்கிறது!
எல்லா பதிலும் சொல்லிப்புட்டாங்களேப்பா.
ReplyDeleteநீ இவ்ளோ பழைய பார்வர்ட் மெயில கேட்டா எப்பிடி!?!?
yeannappa nadakkuthu yinga yintha comment parrthuthaan yeanakku muulaikkuvealai
ReplyDeletesurekaa!
ReplyDeleteyenna achu unga brainakku?....
question paper koodave answer sheetum release anathal.... appadie braina
waste pannama.......