டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3

காட்சி 5 - அரண்மனை அந்தப்புரம்
( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி)

புவன் : இளவரசி ! இளவரசி!

இளவரசி : யாரது?

புவன் : நான் தான் புவன்! தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள்.

இளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் ! (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம்?. கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே!

புவன் இளவரசி..இளவரசி!

இளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன? என்ன?

புவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன்.

இளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே நின்றுவிட்டது.

புவன் சரி..கொண்டுவாருங்கள் ! பார்த்துத்தருகிறேன்.

(இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்)



இளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..! என்ன குற்றம் செய்தீர்கள்..!

புவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை ! தங்கள் தந்தை செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டேன் அவ்வளவுதான்.

இளவரசி என் தந்தையைப்பற்றி என்னிடமே குறை கூறுகிறீர்களா? அவர் என்ன குற்றம் செய்தார்!?

புவன் நீங்கள் கோபித்துக்கொள்கிறீர்கள். வேண்டாம் விட்டுவிடுங்கள்.

இளவரசி சரி..சரி..சும்மா சொன்னேன்...விஷயத்தைச்சொல்லுங்கள்

புவன் தங்கள் தந்தையின் தவறான கொள்கைகளால், நாட்டில் விவசாயமே கிட்டத்தட்ட இல்லை! நீர் விலைகொடுத்து வாங்குகிறோம். உணவுப்பொருட்களின் விலையோ பல ஆயிரங்களில் உள்ளது.

இளவரசி மின்னணு சாதனங்களும், வாகனங்களும்தான் மிகவும் விலை மலிவாகக்கிடைக்கிறதே! சென்ற ஆண்டுகூட விமானத்தின் விலையை சாமனியர்களும் வாங்கும் வண்ணம் 1லட்ச ரூபாய்க்குக் கொண்டு வந்து விட்டார் என் தந்தையார்.

புவன் இளவரசி! நீங்கள் தெரிந்து பேசுகிறீர்களா? தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை! நீங்கள் கூறும் சாதனங்களையும், வாகனங்களையும் சமையல் செய்து உண்ணமுடியாது அல்லவா?

இளவரசி புரிகிறது. உங்களைச் சீண்டிப்பார்த்தேன். என் தந்தையின் இந்த முடிவுகளில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்..ஆமாம்.இதில் உங்கள் குற்றம் எங்கே வருகிறது?

புவன் அதான்... சொல்லவந்தேன். உணவுப்பொருட்களை வாங்கவே முடியாமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், வருமான வரியை 80 சதவீதமாக்கி வாழவே வழியில்லாமல் செய்துவிட்டார். என்னால் கிடைக்கும் வருவாயில் என் வயதான பெற்றோருடன் வாழமுடியவில்லை. ஆகவே வருமான வரி கட்டமுடியாது என்றேன்.

இளவரசி ஓ...அப்படியா? உங்கள் சிரமம் எனக்குப்புரிகிறது. ஆனால் நாடே இந்த நிலையில்தானே உள்ளது.

புவன் அதற்குத்தான் ஒரு யோசனை சொல்ல வந்தேன். அதற்குள் என்னை பேசவிடாமல் செய்து இந்த தண்டனை கொடுத்துவிட்டார்.

இளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள்.? என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன். உங்கள் பிரச்னைகளை தந்தையாரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி உங்களை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்.

புவன் மிக்க நன்றி ! நீங்கள் இவ்வளவு நல்லவராக இருப்பீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இளவரசி!

இளவரசி நீங்களும் ஒரு நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருக்கிறீர்களே அதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது..ஆமாம்...நம்நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?

புவன் அதுவா...! இப்போதே தரிசு நில மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும். மீண்டும் மரங்களைக்கொண்டுவர நாட்டுக்கு ஒரு காடு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயப்படிப்புகளுக்கு அரசு உதவித்தொகை தரவேண்டும். நீர் ஆதாரங்களைப்பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவற்றைச்செய்தால் கண்டிப்பாக மீண்டும் நம் இயற்கை வளங்களை நாம் அடையலாம்.

இளவரசி ஓ..நல்ல யோசனையாக இருக்கிறதே..! நானும் இன்று அதுபற்றிய தகவல்களைத்தான் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த லேப்டாப் மூச்சை விட்டுவிட்டது.

புவன் அது மூச்சுவிட்டதும் நல்லதற்குத்தான். இல்லையென்றால் உங்களை நான் சந்தித்திருக்க முடியாது.

இளவரசி அதைத்தான் நானும் சொன்னேன்.

புவன் இதோ உங்கள் லேப்டாப் தயாராகிவிட்டது.

இளவரசி பரவாயில்லை. நல்ல அருமையான கணிப்பொறி வல்லுநர்தான் நீங்கள்..! பேசிக்கொண்டே சரி செய்துவிட்டீர்களே?

புவன் உங்கள் முன்னால் இதெல்லாம் சாதாரணம் இளவரசி!

இளவரசி அது என்ன இளவரசி!? பெயர்சொல்லித்தான் கூப்பிடுங்களேன்...விண்டோ மகாலெஷ்மி என்று அழகாக!

புவன் அதில்லை..! நீங்கள் இளவரசி! நான் ஒரு சாதாரணன்!

இளவரசி ஆனால் நீங்கள் என் இதயத்தில் குடியிருக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆகவே இனி சாதாரணன் என்று சொல்லாதீர்கள்.

புவன் என்னது? கண்டதும் காதலா?....!!!

:) (இதே கொலைவெறியுடன் ,தொடரும்)

Comments

  1. கண்டதும் காதலா? அடுத்த பாகத்தில் டூயட் பாடுவாங்களா?

    ReplyDelete
  2. மீண்டும் மரங்களை கொண்டு வரும் திட்டம் ஒரு வேளை மரத்தை சுத்தி டூயட் பாடுறதுக்கா இருக்குமோ???

    ReplyDelete
  3. எதிர் பார்த்த காதல் வந்திடிச்ச்ச்சி

    இனிமே குஜால்தான்

    ReplyDelete
  4. /

    இளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள்.? என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன்.
    /

    இந்த எடத்துல கட் பண்ணி அப்பிடியே சாங் போயிடறோம்
    :)))))))))))))

    ReplyDelete
  5. விண்டோ மஹாலட்சுமி எப்ப ஹாங்(ஓவர்) ஆவா??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !