இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது?
இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.
என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்!
இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன்.
ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்! - நம்பளை மாத்திக்கணும் என்று நினைக்கிறார்கள்'. சிலவற்றை மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். அன்று கேட்ட சொற்பொழிவிற்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். அந்த விஷயத்தை கடைபிடித்து வாழ்வை நிதானமாக வாழாமல், சொன்ன ஆளை பூஜிக்க ஆரம்பிக்கும்போதுதான் , சும்மாக்கிடந்த ராஜசேகரனை, பரமஹம்ஸ நித்யானந்தாவாக்குகிறது உலகம்!
மேலும், சொற்பொழிவைக்கேட்டுவிட்டு, அன்று இரவே , மனைவியிடமோ, வேறு பெண்ணிடமோ காமம் பெற்றுக்கொண்டோ, குறைந்தபட்சம் மது ,சிகரெட் ஆகியவற்றில் சுகம் தேடும் பக்தனாகத்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள். ஆனால் மேடையில் காவி உடை அணிந்துகொண்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு , அந்த பக்தனுக்கு வாழ்க்கை நெறிகளைச்சொன்ன குற்றத்துக்காக புனிதன் பட்டம் கட்டிக்கொண்டு தன் சுய ஆசைகளை எல்லாம் திருட்டுத்தனமாக செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதில் அவரது தவறைவிட நம் ஆட்டுமந்தை சமூகத்தின் தவறுதான் அதிகமாக இருக்கிறது.
இந்த வயதில், வாழ்வியல் அனுபவங்கள் ஏதுமின்றி ஒருவன் கூறும் எல்லா அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தச்சமூகம், அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்..ஸ்வாமியை நேரிலேயே பாத்துவிட்டேன், ஸ்வாமி கை என்மேல் பட்டுவிட்டது! ஸ்வாமி என்னைப்பார்த்து சிரித்தார் என்று உருவ....உடல் வழிபாட்டை ஆரம்பித்து , அவனை , சராசரி மனிதர்கள் செய்யும் எந்தச்செயலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறது. பின்னர் என்ன? பூஜைகள்தான்..ஆராதனைகள்தான்! அதில் அவனுக்கு ஏற்படும் போதை , தன்னையே கடவுளாக எண்ணவைத்துவிடுகிறது. அந்த எண்ணம் வலுப்பெற்று, தலை அரித்தால் கூட பொறுத்துக்கொண்டிருந்துவிட்டு, உள்ளறைக்குள் போய் சொறிந்துகொள்ளும் அவலம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஆசிரமம் , கிளைகள், நன்கொடை , படாடோபம் என்று வரும்போது சுகம் தேடும் மனம் விழித்துக்கொள்வதில் , தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.
ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!
அவர் செய்த ஒரே தவறு! அந்த ரூமில் கேமரா இருப்பதை முழுமையாக ஆராயாமல் செயலில் ஈடுபட்டதுதான் ! :)
மற்றதெல்லாம் நம்ம தப்பு பாஸு! இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!
இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.
என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்!
இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன்.
ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்! - நம்பளை மாத்திக்கணும் என்று நினைக்கிறார்கள்'. சிலவற்றை மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். அன்று கேட்ட சொற்பொழிவிற்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். அந்த விஷயத்தை கடைபிடித்து வாழ்வை நிதானமாக வாழாமல், சொன்ன ஆளை பூஜிக்க ஆரம்பிக்கும்போதுதான் , சும்மாக்கிடந்த ராஜசேகரனை, பரமஹம்ஸ நித்யானந்தாவாக்குகிறது உலகம்!
மேலும், சொற்பொழிவைக்கேட்டுவிட்டு, அன்று இரவே , மனைவியிடமோ, வேறு பெண்ணிடமோ காமம் பெற்றுக்கொண்டோ, குறைந்தபட்சம் மது ,சிகரெட் ஆகியவற்றில் சுகம் தேடும் பக்தனாகத்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள். ஆனால் மேடையில் காவி உடை அணிந்துகொண்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு , அந்த பக்தனுக்கு வாழ்க்கை நெறிகளைச்சொன்ன குற்றத்துக்காக புனிதன் பட்டம் கட்டிக்கொண்டு தன் சுய ஆசைகளை எல்லாம் திருட்டுத்தனமாக செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதில் அவரது தவறைவிட நம் ஆட்டுமந்தை சமூகத்தின் தவறுதான் அதிகமாக இருக்கிறது.
இந்த வயதில், வாழ்வியல் அனுபவங்கள் ஏதுமின்றி ஒருவன் கூறும் எல்லா அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தச்சமூகம், அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்..ஸ்வாமியை நேரிலேயே பாத்துவிட்டேன், ஸ்வாமி கை என்மேல் பட்டுவிட்டது! ஸ்வாமி என்னைப்பார்த்து சிரித்தார் என்று உருவ....உடல் வழிபாட்டை ஆரம்பித்து , அவனை , சராசரி மனிதர்கள் செய்யும் எந்தச்செயலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறது. பின்னர் என்ன? பூஜைகள்தான்..ஆராதனைகள்தான்! அதில் அவனுக்கு ஏற்படும் போதை , தன்னையே கடவுளாக எண்ணவைத்துவிடுகிறது. அந்த எண்ணம் வலுப்பெற்று, தலை அரித்தால் கூட பொறுத்துக்கொண்டிருந்துவிட்டு, உள்ளறைக்குள் போய் சொறிந்துகொள்ளும் அவலம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஆசிரமம் , கிளைகள், நன்கொடை , படாடோபம் என்று வரும்போது சுகம் தேடும் மனம் விழித்துக்கொள்வதில் , தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.
ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!
அவர் செய்த ஒரே தவறு! அந்த ரூமில் கேமரா இருப்பதை முழுமையாக ஆராயாமல் செயலில் ஈடுபட்டதுதான் ! :)
மற்றதெல்லாம் நம்ம தப்பு பாஸு! இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!