
ரோடு போட்ட மவராசன்
பாதி ரோட்டை போட்டுப்புட்டு
மீதி ரோட்டை தனக்கும்,
லஞ்சம்வாங்கி நாய்களுக்கும்
போட்டுக்குடுத்துப்புட்டு
மழை பேஞ்ச மறுநாளே
பல்லிளிக்க வச்சுப்புட்டான்.

பல்லிளிச்ச ரோட்டில்
போராடிப்போராடி
நாத்தெல்லாம் நட்டு
நாத்தமடிக்க வச்சபின்னே
அவனுக்கு அப்பனான
ஒரு ஒப்பந்தக்காரன்
பள்ளமடைக்கும் பணி வாங்கி
ஜல்லியடிச்சுக்கிட்டிருக்கான்.
அடைக்கும் பள்ளத்திலேயே
அரைகுறையா விட்டுப்புட்டு
அலட்டிக்காம வேலைபாக்கும்
கேடுகெட்டவங்களை வச்சா
வல்லரசா ஆகப்போறோம்!?
அய்யா அப்துல் கலாம்!
ஒருதடவை இந்தப்பக்கம்
வந்துத்தான் பாருங்களேன்.
ஒப்பந்தம் எப்படி
வேலை பாக்குதுன்னு தெரியும்.
இது ரொம்ப நாள் கதையில்ல!
நேத்து நான் வந்தப்ப நின்னு
எடுத்த போட்டோ!
இதை மட்டும் செய்ய நான்
ஈனப்பிறவி இல்ல!
எல்லா பத்திரிகைக்கும்
எழுதியாச்சு நகலோட!
எவனுமே போடலைன்னா
என்ன பண்ண சின்னவன் நான்!
அதுனால இங்கயும் என்வீட்டில்
பதிஞ்சு வச்சேன்.
உச்சகட்ட லச்சணம்
என்னன்னு தெரியுங்களா?
இதுதான் இந்தியாவின்
தேசிய நெடுஞ்சாலை!
கண்ணுமண்ணு தெரியாம
கொள்ளை அடிக்கறது
கயவாளிக்கனவான்களுக்கு
கைவந்த கலை போல!
அட...நாசமத்துப்போவாய்ங்களா!
நாண்டுக்கிட்டு சாவுங்கடா!
அடுத்த தலைமுறையை
அழுகாம காப்பாத்த !