மகிழ்துக்கம்...!

07 Nov 2009 · சுரேகா சுந்தர்


மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!

இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு!


http://youthful.vikatan.com/youth/Nyouth/sureka05112009.asp


கவிதை இதுதான்..!


காணாமல் போன
தோழியைத் தேடும் முயற்சியில்
காவலர்கள் வந்து
பார்க்கச்சொன்ன,
விபத்தில் இறந்த பெண்ணை
அடையாளம் காட்டும்
அந்த விநாடியில்
அவளில்லை என்று
சொல்லும்வரை
பரிதவித்த மனம்
அகமகிழ்ந்தாலும்
அடுத்து
யாரோ ஒருவனுக்கு
அந்தப் பெண்ணை
’அவள்தான்!’
என்று கூறவேண்டியதன்
அவலம் கொஞ்சம்
அதிகமாகவே கனத்தது.

நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →