ஈரோட்டில் சில நாட்களா வேலை நிமித்தமா இருக்கறதால,
சாப்பாட்டுக்கு சுத்த வேண்டியதாயிடுச்சு!
மேலும்.. நம்ம உடம்பு எதைப்போட்டாலும் தாங்குங்கிறதனாலயும்,ஒரே ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கவேண்டாம்னு நினைச்சும், பதிவுலகத்துக்கு ஈரோட்டு உணவுவிடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியும், ஊரில், ஒரு ஏரியாவை சுத்தி சுத்தி...
பேருந்து நிலையத்திலிருந்து இறங்கின உடனேயே எதிரில் தெரிவது, கண்ணன் உணவகம்...உயர்தரம்னு இப்ப எல்லாருமே போட்டுவிடுவதால். உள்ளே போனால், பார்க்க நல்லா இருக்கு !...சாப்பாடு சூப்பர்ன்னு சொல்ல முடியாது...ஓகே! உள்ளே மற்ற விஷயங்கள் அழகா இருக்கு!
ஊருக்குள்ள ஆர்.கே.வி ரோட்டில்.. இரண்டு உணவகங்கள் உள்ளன.! (எனக்குத்தெரிஞ்சு) ஒண்ணு பாரத் - உணவும், கவனிப்பும் ரொம்ப சுமார்.!அதனால் அதைப்பற்றிய விமர்சனமே வேண்டாம். ஆனால் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருப்பவர் நாம் சொல்வதை ஆமோதித்து
கேட்டுக்கொள்கிறார். அது மட்டும்தான் கூட்டல்புள்ளி (+.) :-)
அதை அடுத்து ஜோதி உணவகம் இருக்கு..! மிகவும் அருமையான உணவும், நல்ல காபியும், மனிதாபிமானமுள்ள முதலாளியும்...
அன்று முகூர்த்த நாள், காலை உணவு சாப்பிடப்போனபோது, சரியான கூட்டம் , என்னடா செய்வது என்று யோசித்து நிற்கும்போது எங்களுடன் வந்த ஒரு குழந்தைக்கு மட்டுமாவது இட்லி வாங்கிவிடலாம்னு நான் உள்ளே சமையலறைக்கு போய்விட்டேன். அங்குதான் அதன் முதலாளி நின்றிருந்தார். அவரிடம் 'இரண்டு இட்லி மட்டும் குழந்தைக்கு வேண்டும்' னு கேட்க, சரி தருகிறேன்னு. உடனே பார்சல் கட்ட ஆரம்பித்துவிட்டார். பார்சலை கையில் தந்துகொண்டே கேட்டார்..
"நீங்க சாப்பிட்டீங்களா?"
ரொம்ப சோகமா, நானும்..."இல்லங்க..கூட்டமா இருக்கு' ன்னேன்.
"அப்ப என்ன வேணும்னு சொல்லுங்க..! உங்களுக்கும் பார்சலே கட்டித்தரேன். காத்திருந்து சாப்பிடணும்னா லேட்டாயிடும்!' என்று பரிவுடன் சொன்னார்.
நினைவில் நின்றவர்!
ஆர் கே வி ரோட்டுக்கு பின்புறம்..திருச்சி கபேன்னு ஒரு பிரபல உணவகம்.முதலில் அங்க மதிய சாப்பாட்டுக்கு போய் டோக்கனை வாங்கிக்கொண்டு உட்கார இடம் தேடினால், எல்லாம் நிரம்பி இருக்கு...உள்ளே ஒரு சாப்பாட்டு அறை இருக்கு.. போங்கன்னு சொல்ல, அம்புக்குறி போட்டிருந்த பகுதியை நோக்கி நடந்தால்..முதலில். சமையலறை . அப்புறம் தண்ணீர் பிடிக்கும் பகுதி...கொஞ்சம் தள்ளி இடதுபுறம் காபி போடும் பகுதி..அதையும் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய ஹால்..! அதிலும் முழுசா வாடிக்கையாளர்கள்.! (மணிரத்னத்தின் 'குரு' படத்தில் அபிஷேக் நம்மகிட்ட பேசிட்டு மைதானத்தை பார்ப்பார்..மைதானமே மக்கள்
வெள்ளத்தால் நிரம்பி ஒரு சின்ன அதிர்வு ஏற்படுமே..அந்த அதிர்வை உணர்ந்தேன்) எங்களப்போல நின்னுக்கிட்டே இன்னும் பல பேர்.! அடேயப்பா ன்னு ஆகிப்போச்சு! ருசியான அளவு சாப்பாடுதான்.! ஆனா அந்த கூட்டம்...அப்பப்பா! அங்கு சாப்பிட்ட கேசரியும் காபியும் அற்புதம். சாப்பிட்ட எல்லோரும் சாப்பிடாத எல்லோருக்கும் பரிந்துரைக்கும் உணவகம்!
அடுத்து, ஸ்ரீதேவி மெஸ்...திருச்சி கபேக்கு மிகவும் அருகில்..2 கடை தள்ளி இருக்கும்..காலை 11 மணிக்கு போனாலும் ஏதாவது டிபன் இருக்கும். பரோட்டா நல்ல மென்மையா இருக்கும். தோசை வீட்டுத்தோசைமாதிரி..! பந்தி பரிமாறுவது மாதிரி வரிசையா மேசை போட்டு வச்சிருப்பாங்க! சாப்பாடு சுமார்தான்.! ஆனா அளவில்லா சாப்பாடு! ஒரு 25-30 வயது பையன் மிகவும் நன்றாக கவனிப்பார். ஒரு 40+ ஆளுக்கு என்ன கஷ்டமோ..! அவர் பில் கொடுத்து நாம் சாப்பிடுவது மாதிரி ஒரு அடுப்பு முகத்தோடயே அலைவார். முதலாளியிடம் சொன்னால்.. அதை ஏன் கேக்குறீங்க.! என்னால் ஒன்னும் செய்யமுடியாது. இல்லைன்னா வேலையை விட்டுட்டு போய்டுவேன்னு மிரட்டுறார்.இவுங்களை நம்பிதான் தொழில் பண்ணவேண்டியிருக்குன்னு ஒரே அழுகாச்சி!
அப்புறம் கலைமகள் பள்ளிக்கு அருகில் உள்ள சாலையில் பட்டேல் தெருவுக்கு அருகில் ஒரு சின்ன டிபன் கடை! மருத்துவமனை நோயாளிகள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள்!..காலையும் , இரவும் சரியான கூட்டம். 4 பென்ச்தான்.! டிபன் நல்ல சுவை! அதிலும் அந்த கொத்து பரோட்டா ! நைஸ் எனப்படும் ஈரோட்டு ஸ்பெஷல் தோசை ஆஹா..! மிகவும் சின்ன..ஆனால் பெரிய சுவை உள்ள உணவகம்!
அதே சாலையில் போனால்....ஒரு பிள்ளையார் கோவில் உள்ள பிரதான சாலையில் ( சாலை பேரு மறந்து போச்சு) நிறைய அசைவ உணவகங்கள் உள்ளன! அதை அடுத்து உள்ளதுதான். நளன் உணவகம்.!ஈரோட்டுவாசிகள் எத்தனைபேருக்கு இதைப்பற்றித்தெரியும்னு தெரியலை.!
முழுக்க முழுக்க சித்த மருத்துவமுறைப்படி.. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு தயாரித்து வழங்கும் கடை! கிழமைக்கு ஒரு மெனு செய்து வைத்து அதன் படி உணவிடுகிறார்கள்! நாங்கள் போனபோது வெந்தய தோசையும், ஆப்பம் தேங்காய்ப்பாலும்,
காய்கறி அடையும் சாப்பிட்டோம். அங்கு பல்வேறு மூலிகை உணவுகள் உள்ளன! அதன் நிறுவனர்.. SS மியூசிக்கில் வேலை பார்க்கிறாராம்.! 'குருஜி' என்றார்கள்.
கடைசியாக ஐஸ்கிரீம்..!
ஈரோட்டில்.SOFTY ICE CREAM PARLOUR என்ற ஒரு கடை உள்ளது. ஆஹா! என்ன ஒரு சுவை! அதையும் விஞ்சி..அதில் வாடிக்கையாளர் அமர அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள், இருக்கைகள் மற்றும் ப்ளாஸ்மா டிவி என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்..நல்ல கூட்டம் வருகிறது..குறிப்பாக காதலர்கள்!
இன்னும் சின்னச்சின்ன உணவகங்கள்ல சாப்பிட்டிருந்தாலும்..இவைதான் மனசுல நின்னது மற்றும் ஈரோட்டுக்காரங்க யாராவது இதைப்படிச்சுட்டு போய் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது!
சாப்பாட்டுக்கு சுத்த வேண்டியதாயிடுச்சு!
மேலும்.. நம்ம உடம்பு எதைப்போட்டாலும் தாங்குங்கிறதனாலயும்,ஒரே ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கவேண்டாம்னு நினைச்சும், பதிவுலகத்துக்கு ஈரோட்டு உணவுவிடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியும், ஊரில், ஒரு ஏரியாவை சுத்தி சுத்தி...
பேருந்து நிலையத்திலிருந்து இறங்கின உடனேயே எதிரில் தெரிவது, கண்ணன் உணவகம்...உயர்தரம்னு இப்ப எல்லாருமே போட்டுவிடுவதால். உள்ளே போனால், பார்க்க நல்லா இருக்கு !...சாப்பாடு சூப்பர்ன்னு சொல்ல முடியாது...ஓகே! உள்ளே மற்ற விஷயங்கள் அழகா இருக்கு!
ஊருக்குள்ள ஆர்.கே.வி ரோட்டில்.. இரண்டு உணவகங்கள் உள்ளன.! (எனக்குத்தெரிஞ்சு) ஒண்ணு பாரத் - உணவும், கவனிப்பும் ரொம்ப சுமார்.!அதனால் அதைப்பற்றிய விமர்சனமே வேண்டாம். ஆனால் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருப்பவர் நாம் சொல்வதை ஆமோதித்து
கேட்டுக்கொள்கிறார். அது மட்டும்தான் கூட்டல்புள்ளி (+.) :-)
அதை அடுத்து ஜோதி உணவகம் இருக்கு..! மிகவும் அருமையான உணவும், நல்ல காபியும், மனிதாபிமானமுள்ள முதலாளியும்...
அன்று முகூர்த்த நாள், காலை உணவு சாப்பிடப்போனபோது, சரியான கூட்டம் , என்னடா செய்வது என்று யோசித்து நிற்கும்போது எங்களுடன் வந்த ஒரு குழந்தைக்கு மட்டுமாவது இட்லி வாங்கிவிடலாம்னு நான் உள்ளே சமையலறைக்கு போய்விட்டேன். அங்குதான் அதன் முதலாளி நின்றிருந்தார். அவரிடம் 'இரண்டு இட்லி மட்டும் குழந்தைக்கு வேண்டும்' னு கேட்க, சரி தருகிறேன்னு. உடனே பார்சல் கட்ட ஆரம்பித்துவிட்டார். பார்சலை கையில் தந்துகொண்டே கேட்டார்..
"நீங்க சாப்பிட்டீங்களா?"
ரொம்ப சோகமா, நானும்..."இல்லங்க..கூட்டமா இருக்கு' ன்னேன்.
"அப்ப என்ன வேணும்னு சொல்லுங்க..! உங்களுக்கும் பார்சலே கட்டித்தரேன். காத்திருந்து சாப்பிடணும்னா லேட்டாயிடும்!' என்று பரிவுடன் சொன்னார்.
நினைவில் நின்றவர்!
ஆர் கே வி ரோட்டுக்கு பின்புறம்..திருச்சி கபேன்னு ஒரு பிரபல உணவகம்.முதலில் அங்க மதிய சாப்பாட்டுக்கு போய் டோக்கனை வாங்கிக்கொண்டு உட்கார இடம் தேடினால், எல்லாம் நிரம்பி இருக்கு...உள்ளே ஒரு சாப்பாட்டு அறை இருக்கு.. போங்கன்னு சொல்ல, அம்புக்குறி போட்டிருந்த பகுதியை நோக்கி நடந்தால்..முதலில். சமையலறை . அப்புறம் தண்ணீர் பிடிக்கும் பகுதி...கொஞ்சம் தள்ளி இடதுபுறம் காபி போடும் பகுதி..அதையும் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய ஹால்..! அதிலும் முழுசா வாடிக்கையாளர்கள்.! (மணிரத்னத்தின் 'குரு' படத்தில் அபிஷேக் நம்மகிட்ட பேசிட்டு மைதானத்தை பார்ப்பார்..மைதானமே மக்கள்
வெள்ளத்தால் நிரம்பி ஒரு சின்ன அதிர்வு ஏற்படுமே..அந்த அதிர்வை உணர்ந்தேன்) எங்களப்போல நின்னுக்கிட்டே இன்னும் பல பேர்.! அடேயப்பா ன்னு ஆகிப்போச்சு! ருசியான அளவு சாப்பாடுதான்.! ஆனா அந்த கூட்டம்...அப்பப்பா! அங்கு சாப்பிட்ட கேசரியும் காபியும் அற்புதம். சாப்பிட்ட எல்லோரும் சாப்பிடாத எல்லோருக்கும் பரிந்துரைக்கும் உணவகம்!
அடுத்து, ஸ்ரீதேவி மெஸ்...திருச்சி கபேக்கு மிகவும் அருகில்..2 கடை தள்ளி இருக்கும்..காலை 11 மணிக்கு போனாலும் ஏதாவது டிபன் இருக்கும். பரோட்டா நல்ல மென்மையா இருக்கும். தோசை வீட்டுத்தோசைமாதிரி..! பந்தி பரிமாறுவது மாதிரி வரிசையா மேசை போட்டு வச்சிருப்பாங்க! சாப்பாடு சுமார்தான்.! ஆனா அளவில்லா சாப்பாடு! ஒரு 25-30 வயது பையன் மிகவும் நன்றாக கவனிப்பார். ஒரு 40+ ஆளுக்கு என்ன கஷ்டமோ..! அவர் பில் கொடுத்து நாம் சாப்பிடுவது மாதிரி ஒரு அடுப்பு முகத்தோடயே அலைவார். முதலாளியிடம் சொன்னால்.. அதை ஏன் கேக்குறீங்க.! என்னால் ஒன்னும் செய்யமுடியாது. இல்லைன்னா வேலையை விட்டுட்டு போய்டுவேன்னு மிரட்டுறார்.இவுங்களை நம்பிதான் தொழில் பண்ணவேண்டியிருக்குன்னு ஒரே அழுகாச்சி!
அப்புறம் கலைமகள் பள்ளிக்கு அருகில் உள்ள சாலையில் பட்டேல் தெருவுக்கு அருகில் ஒரு சின்ன டிபன் கடை! மருத்துவமனை நோயாளிகள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள்!..காலையும் , இரவும் சரியான கூட்டம். 4 பென்ச்தான்.! டிபன் நல்ல சுவை! அதிலும் அந்த கொத்து பரோட்டா ! நைஸ் எனப்படும் ஈரோட்டு ஸ்பெஷல் தோசை ஆஹா..! மிகவும் சின்ன..ஆனால் பெரிய சுவை உள்ள உணவகம்!
அதே சாலையில் போனால்....ஒரு பிள்ளையார் கோவில் உள்ள பிரதான சாலையில் ( சாலை பேரு மறந்து போச்சு) நிறைய அசைவ உணவகங்கள் உள்ளன! அதை அடுத்து உள்ளதுதான். நளன் உணவகம்.!ஈரோட்டுவாசிகள் எத்தனைபேருக்கு இதைப்பற்றித்தெரியும்னு தெரியலை.!
முழுக்க முழுக்க சித்த மருத்துவமுறைப்படி.. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு தயாரித்து வழங்கும் கடை! கிழமைக்கு ஒரு மெனு செய்து வைத்து அதன் படி உணவிடுகிறார்கள்! நாங்கள் போனபோது வெந்தய தோசையும், ஆப்பம் தேங்காய்ப்பாலும்,
காய்கறி அடையும் சாப்பிட்டோம். அங்கு பல்வேறு மூலிகை உணவுகள் உள்ளன! அதன் நிறுவனர்.. SS மியூசிக்கில் வேலை பார்க்கிறாராம்.! 'குருஜி' என்றார்கள்.
கடைசியாக ஐஸ்கிரீம்..!
ஈரோட்டில்.SOFTY ICE CREAM PARLOUR என்ற ஒரு கடை உள்ளது. ஆஹா! என்ன ஒரு சுவை! அதையும் விஞ்சி..அதில் வாடிக்கையாளர் அமர அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள், இருக்கைகள் மற்றும் ப்ளாஸ்மா டிவி என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்..நல்ல கூட்டம் வருகிறது..குறிப்பாக காதலர்கள்!
இன்னும் சின்னச்சின்ன உணவகங்கள்ல சாப்பிட்டிருந்தாலும்..இவைதான் மனசுல நின்னது மற்றும் ஈரோட்டுக்காரங்க யாராவது இதைப்படிச்சுட்டு போய் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது!