அது....தவறுகளை தட்டிக்கேட்கும் மனோபாவம் !
ஒன்று யோசித்துப்பாருங்கள் !
இன்றுவரை இந்தியாவில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குண்டு வெடித்தி ருக்கிறதா?எல்லாமே பெரிய நகரங்களில்தான்..!ஏனெனில் அங்குதான் மக்கள் கூட்டம் அதிகமாக சேதமாகும் என்று கூறலாம். கிராமங்களிலும், சந்தை, திருவிழா என்று கூட்டம் கூடும் நிகழ்வுகள் உண்டே..! அங்கு குண்டு வைக்கலாமே?
வைக்கமுடியாது .! ஏன் தெரியுமா? கிராமத்து ஆட்களுக்கு தட்டிக்கேட்கும் மனோபாவம் அதிகமாக இருக்கிறது. கிராமத்துக்குள் புதிதாக ஒரு ஆள் நுழைந்தாலும், தொடர்ந்து வந்து ' நீங்க எங்க போகணும்? யாரைப்பாக்கணும் ? என்று கேட்டு ஆள் தெரியாவிட்டால் துரத்திவிடும் மனோபாவம் இன்னும் இருக்கிறது ! பக்கத்துவீட்டில் இன்று எத்தனை பேருக்கு உலை கொதிக்கிறது என்று தெளிவாகத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள் கிராமத்தில் அதிகம்! ரேஷன் கடையிலோ, அரசு மருத்துவமனையிலோ ஒரு அநீதி நடந்தால் உடனே தட்டிக்கேட்பது கிராமத்து மனிதர்கள்தான்..!
நகரம்?
சொல்லவே வேண்டியதில்லை. என் நண்பர் ஒருவரது அடுக்குமாடிக்குடியிருப்பில், எதிர்வீட்டை, திருடர்கள் சாவகாசமாக -டெம்ப்போவில் சாமான்களை ஏற்றி-காலி செய்யும் வரை எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டு , வீட்டுக்காரர்கள் வந்து குய்யோ முறையோ எனும்போது, oh! my god! என்று சர்வசாதாரணமாகக்கூறிவிட்டு சொந்த வேலைகளில் மூழ்கிவிடும் புத்திசாலிகள் இருக்கும் இடம்தான் நகரம். !அதுதான் குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதச்செயல்களை நிகழ்த்துபவர்களுக்கு சாதகமாகப்போய்விடுகிறது.
நமக்குள் எத்தனையோ சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை மையங்கள் வைத்திருந்தாலும், இதை அடுத்தவர் நன்மைக்காக செய்யவேண்டும் என்று மனதாரச் செய்யும் எண்ணம் நகரங்களில் மிகக்குறைவு!
எத்தனை நகரப்பேருந்துகளில், நடத்துநரின் அராஜகப்போக்கை தட்டிக்கேட்கும் சக பயணிக்கு ஒருவரும் ஆதரவளிக்காமல் வேடிக்கை பார்க்கும் மனநிலை இருக்கிறது? இதுவும் ஒரு வித தீவிரவாதம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?
எத்தனை வங்கிகளில் , தனக்கு ஏற்பட்ட ஒரு சேவைக்குறைபாட்டைப்பற்றி கேள்விகேட்கும் ஒரு வாடிக்கையாளரை , புழுவைப்போல் பார்க்கும் சக வாடிக்கையாளர்கள் நாம் பார்த்திருக்கிறோம்.?
அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்குறைபாட்டால் அநியாயமாக இறந்துபோன குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் ஒரு கும்பல் சாலையை மறித்து நியாயம் கேட்கும்போது, எத்தனைமுறை அவர்களிடையே கிடைக்கும் சந்துகளைப்பயன்படுத்தி வாகனங்களில் அவர்களைக்கடக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் காரணம்...நம்மிடம் நீர்த்துப்போன போராட்ட குணம்! நமக்கென்ன வந்தது? எதுக்கு இம்சை? இருக்கும் பிரச்னையே போதும்! என்ற உளுத்துப்போன சிந்தனைகள்தான் மும்பை தாக்குதல்வரை நம்மை கொண்டு நிறுத்தியிருக்கிறது. எல்லாத்தனிமனிதனுக்குள்ளும் கதாநாயகனுக்கு அவ்வப்போது வேலை கொடுத்தாலே போதும்! நகரவாசிகளுக்கு பிரச்னையே ஏற்படாது!
எப்படித்தெரியுமா?
இப்போது ஒரு வேற்று நாட்டு மனிதன் நம் அண்டை வீட்டில் குடியிருக்கிறான் என்றால், உடனே அவனை யாரென்று நேரடியாகக்கேட்டு விசாரித்து, அதிலும் சந்தேகம் கொண்டால், - உண்மையிலேயே தட்டிக்கேட்கும் மனிதர்களால் அமைந்த காவல்துறையும் இருந்தால் - காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனே அவர்களைப்பற்றிய முழுவிபரங்களையும் நோண்டினால் சுலபமாக பேரிழப்புகளைத் தவிர்க்கலாம்!
ஒன்றாகச்சேர்ந்து நலிந்தவர்களுக்கு உதவுவது என்பது வேறு!
ஒன்றாகச்சேர்ந்து தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது வேறு!
கண்முன் நடக்கும் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மண்புழுச்சமுதாயத்தில் இருந்துகொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகத்தான் அமையும்!
எப்போது எல்லாத்தவறுகளையும் நாம் தட்டிக்கேட்கவோ, தட்டிக்கேட்பவருக்கு ஆதரவாகவோ செயல்படத்துவங்குகிறோமோ, அப்போது சமூகம் பலப்படும். தீவிரவாதத்துக்கு மிகச்சரியான தீர்வாக இதுவாகத்தான் இருக்கமுடியும் என்பது எனது தாழ்மையான கருத்து!
கண்முன் நடக்கும் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மண்புழுச்சமுதாயத்தில் இருந்துகொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகத்தான் அமையும்!
எப்போது எல்லாத்தவறுகளையும் நாம் தட்டிக்கேட்கவோ, தட்டிக்கேட்பவருக்கு ஆதரவாகவோ செயல்படத்துவங்குகிறோமோ, அப்போது சமூகம் பலப்படும். தீவிரவாதத்துக்கு மிகச்சரியான தீர்வாக இதுவாகத்தான் இருக்கமுடியும் என்பது எனது தாழ்மையான கருத்து!
எந்தத்தவறையும் உடனே தட்டிக்கேட்கும் சமூகத்தில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை!
அனைவருமே நிம்மதியாக இருக்கலாம்!
அனைவருமே நிம்மதியாக இருக்கலாம்!