ஒரு நல்ல காரியம்...

24 Dec 2007 · சுரேகா சுந்தர்




நேத்து (23.12.07) ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல காரியம் பண்ணினேங்க.!

ஈஷா பசுமைக்கரங்கள் சார்பா 2.5 கோடி மரங்கள் நடும் விழா கொண்டாடினாங்க.!
           
           நமக்கும் அதுல ஈடுபாடு இருக்குறதால.. அந்த விழாவில் பங்கெடுத்துக்குற வாய்ப்பு கிடைச்சதுங்க..! (நன்றியுரையெல்லாம் சொன்னோமுல்ல..)நேரா காலைல கிளம்பி அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் சுமார் 2000 மரக்கன்றுகள் நட்டோம். அதில் நான் குறைந்த பட்சம் 10% நட்டிருப்பேன். 200 மரக்கன்றுகளை ஒரு நாளில் நட்டபோது கிடைத்த திருப்தி இருக்கிறதே..!

அடடா...! அதுக்கு ஈடு இணை இல்லங்க!

     மாலையில் ஒரு விழாவுடன் இனிதே நாளை முடித்தோம். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு. S. ரகுபதி அவர்கள் வந்து நிறைய புள்ளிவிவரங்களுடன் பேசினார்கள். தமிழகத்தின் நீராதாரம் இனி பிற மாநிலங்களல்ல.. மரங்கள்தான் என்றார்.
மிகவும் மகிழ்வுடன்...இந்த மண்ணுக்கு ஏதோ செய்த திருப்தியுடன் தூங்கினேன்.
(ஆனா இதுவும் நம்மை வறட்சியிலிருந்து காப்பாற்றும் ஒரு சுயநல முயற்சிதான்..!)

நமக்கு வாழ இடம் தந்து
இயற்கை வளமனைத்தும் தந்து
உணவுப்பொருள் ஒன்றுவிடாமல் தந்த
புவியன்னைக்கு
வயிற்றில் பால் வார்க்கவேண்டாம்.
கொஞ்சம் நீர்வார்க்கவாவது
முயற்சிக்கலாம்
அதற்கு மரம் நட்டால் போதும்.!
மிச்சத்தை அவள் பார்த்துக்கொள்வாள்!

முடிஞ்சா இன்னிக்கே ஒரு மரக்கன்று நடுங்க.!
ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் கண்டிப்பா நடுங்க.!
இதுலயும் நடுவரா இருக்கலாம்.. :-)

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →