விஸ்வரூபம்
எடுத்திருக்கும் பிரச்னையை கமல் மிகச்சரியாகத்தான் கையாண்டுகொண்டிருக்கிறார். அவரது
DTH ஒளிபரப்பு சிந்தனை மிகவும் சிறப்பானது. தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால்தான்,
ஒரு கலை மட்டுமல்ல… ஒரு சமூகமே நன்கு வளரும். அதைப் புரிந்துகொள்ளாமல் குய்யோ முறையோ
என்று கதறும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு விரலை கமலை நோக்கிக் காட்டும்போது மற்ற
விரல்கள் தங்களை நோக்கித்தான் இருக்கின்றன என்று மறுப்பதற்கில்லை.
உண்மையிலேயே,
தமிழ் சினிமாவின் இப்போதைய வியாபார ரோலர் கோஸ்டர் நிலைக்கு, திரையரங்குகள்தான் காரணம்.!
அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது. மேலும்,
அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆபத்தை வரவழைக்கும். இப்போது கமல் எடுத்திருக்கும்
முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை. ஒருபக்கம்
திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், மறுபக்கம் திரையரங்குகள் தங்கள் அடாவடி
டிக்கெட் கட்டணத்தால் இரசிகர்களை உள்ளே வரவிடாமல் திண்டாடவைக்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டேயிருந்தால்,
ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் யுக்திகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவேண்டியதுதான்
காலத்தின் கட்டாயம்.
திரையரங்கு
உரிமையாளர்கள், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது என்பதற்காக, நீ வேறு எங்கும் படத்தை
ஒளிபரப்பக்கூடாது என்று வம்பிழுப்பது முட்டாள்தனம். திருட்டு டிவிடிக்குக் காரணமே இவர்கள்தான்.
தியேட்டர்களிலிருந்துதான் பிரிண்ட் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அதுவும்,
கேமராவில் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துவிட்டு, ஒலியை மட்டும் நேரடியாக DTS மிக்ஸரிலிருந்து
திருடித்தான் டிவிடி வருகிறது. அந்தத் திருட்டை ஒழிக்க வக்கில்லாத திரையரங்கு உரிமையாளர்கள்,
நேர்மையாக ஒரு மனிதன் வேறு முறையில் மக்களிடம் தன் படைப்பைக் கொண்டு சேர்த்தால், குதிப்பதில்
நியாயமே இல்லை. திரையரங்கு உரிமையாளர்கள் திருட்டு டிவிடி வராது என்று உறுதி அளிக்க
இயலாத பட்சத்தில் , கமலின் வியாபரத்தில் தலையிட அருகதையே கிடையாது.
உண்மையில், இன்றைய சூழலில், தமிழ் சினிமாவை வீழ்த்துவதில் திரையரங்குகளுக்குத்தான் பங்கு அதிகமாயிருக்கிறது. கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்த் திரையுலகை, கமலை, திரை சார்ந்த வியாபாரத்தை நேசிப்பவர்கள் அனைவரும், அதை ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
உண்மையில், இன்றைய சூழலில், தமிழ் சினிமாவை வீழ்த்துவதில் திரையரங்குகளுக்குத்தான் பங்கு அதிகமாயிருக்கிறது. கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்த் திரையுலகை, கமலை, திரை சார்ந்த வியாபாரத்தை நேசிப்பவர்கள் அனைவரும், அதை ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
கமல்
சார் நீங்க செய்வது சரிதான்..! நீங்க முன்னாடி போங்க! …பின்னாடியே வரோம். அவங்களும்
வருவாங்க!
_______________________________________________________________
எக்ஸ்பிரஸ்
அவென்யூவில் ஒரு விளையாட்டு உலகம் இருக்கிறதாம். அங்கும் கார்டு சிஸ்டத்தைக் கொண்டுவந்து
அதில் 20 ரூபாய் வசூலித்து அடாவடி செய்துகொண்டிருக்கிறார்களாம். இந்திய உணவு அல்லது
பொழுதுபோக்குச் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இவர்களது உள்கணக்கு
வசதிகளுக்காக வாடிக்கையாளர்களை அடாவடி செய்கிறார்கள். இந்த முறை மொத்தமாகப் போய் கேட்கலாம்
என்று எண்ணம். இவர்கள் செய்யும் அநியாயத்தை நாம்தான் தட்டிக்கேட்கவேண்டும். இதற்காக
தேவதூதன் யாரும் பிறந்து வந்துவிடமாட்டான். இது போன்ற சாத்தான்களுக்கு நாமே போதும்.!!
கரம் கோர்க்க விரும்புபவர்கள் kettaalkidaikkum@gmail.com க்கு ஒரு மெயிலைத் தட்டிவிடுங்கள். தேதியும்
நேரமும் தனியே அறிவிக்கப்படும்.
ஒன்று மட்டும் நிச்சயம்.. தன்னெதிரே நடக்கும்
தவறுகளைத் தட்டிக்கேட்காத சமுதாயம் நாசமாய்ப் போவதை யாராலும் தடுக்க முடியாது.
___________________________________________________________________________
ஜெயா
ப்ளஸ்ஸில் கற்றல் அழகு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதில். ஒவ்வொரு மேற்படிப்புத்
துறைகளின் உண்மையான தன்மையை ஆராய இருக்கிறது. உதாரணமாக, ஏரோநாட்டிக் பொறியியல் படித்தால்,
பைலட் ஆகலாம் என்று பரவலாக எண்ணம் இருக்கிறது. ஆனால், அது படித்தால், விமான உற்பத்தி
அல்லது பழுதுபார்த்தலில்தான் வேலை கிடைக்கும். அதுவும் அதனுள் பல்வேறு உட்பிரிவுகள்
உள்ளன. ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்று ஒன்று உள்ளது. அது படித்தால், செயற்கைக்கோள் தயாரிப்பில்
பங்குபெறலாம். அதுதவிர ஏவியானிக்ஸ் என்ற படிப்பு இருக்கிறது. அது படித்தால் மட்டுமே,
விமான கட்டுப்பாட்டுக் கருவிகள் தயாரிப்பில்
பங்கெடுக்கமுடியும். இதில் முதுகலைப் படிப்புகள் முடித்தவர்கள் பல்வேறு சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்று
பல்வேறு படிப்புகளைப் பற்றியும், அதன் பாடத்திட்டங்கள், வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு
பற்றிய உண்மைத் தகவல்களை அந்தக் கல்லூரிகளுக்கே சென்று , செயல்முறை விளக்கத்துடன் புரியவைப்பதுதான்
நிகழ்ச்சியின் நோக்கம். ஒளிபரப்பு நாளும், நேரமும் விரைவில்…
வரும்
திங்களிலிருந்து, மக்கள் தொலைக்காட்சியில், காலை 8:48க்கு ஒளிபரப்பாகும் ஊருக்கு உரைப்போம்
என்ற நிகழ்ச்சியில், சில நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கன்ஃப்யூஷியஸ், லியோ டால்ஸ்டாய் புத்தகங்கள், வீரத்தேவன் வரலாறு போன்றவை அடக்கம்.. அது அறிமுகமா,? படுத்தலா?
என்று பார்த்தபிறகுதான் தெரியும்.
