இதுதான் லட்சியம்னு முடிவெடுத்துட்டா..அதுக்கப்புறம் அதை நோக்கிய பயணம்தான் நம் கண்ணுக்கு தெரியணும்.
சின்ன வயசுலேயே கார்கள்மேலயே கவனத்தை வச்சு..அதுதான் வாழ்நாள் லட்சியம்னு இருந்த ஹென்றி போர்டுதான் Ford ங்கிற கார் கம்பெனியையே உருவாக்கினாரு.!
சினிமாதான் உலகம்னு 9 வயசுலேருந்து கனவுகண்டுக்கிட்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் உலகமே வியக்குற அளவுக்கு ஜுராசிக் பார்க்ன்னு படம் எடுத்தாரு!
ஒருநாள் இந்த உலகத்தையே தன் வார்த்தைகளால் கட்டிப்போடலாம்னு சிறுவயதிலேயே நினைச்சதால்தான் கண்ணதாசன் சிறந்த கவிஞரா ஆனாரு!
அமைதிப்படை படத்துல...ஒரு நாயோட சண்டை போட்டு தேங்காய் பொறுக்குறவரா இருக்கும் சத்யராஜிடம் , மணிவண்ணன் கேப்பாரு..உன் லட்சியம் என்னன்னு, அதுக்கு அவரு..பக்கத்தில இருக்குற அரண்மனைய வாங்கணும் னுவாரு.! அதுக்கு மணிவண்ணன் சிரிச்சுட்டு...இதெல்லாம் நடக்குற காரியமான்னுவாரு..அப்ப சத்யராஜ் சொல்வார். முடியும்னு நெனச்சுத்தானுங்கண்ணா..நிலாவுல கால் வச்சாங்க..! நம்ம முடியாதுன்னு நினைச்சதாலதான் இன்னும் நிலாச்சோறே ஊட்டிக்கிட்டிருக்கோம். அதே மாதிரி அந்த அரண்மனையை அடைஞ்சிடுவார் சத்யராஜ்.
நம்மள்ல பாதி பேர் தோல்வி பற்றிய பயத்துலயே லட்சியங்களை அமைச்சுக்கறதில்லை! ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித்தோற்றுப்போவது எவ்வளவோ மேல்!
ஆனா சிலபேர் அடுத்தவுங்க லட்சியத்தில் குளிர்காயப் பாப்பாங்க!
மொக்கச்சாமிக்கு ஒரு நண்பர் இருந்தார்..அவர் திருவனந்தபுரம் போறதுக்காக கிளம்பிக்கிட்டிருந்தார். அவர் வீட்டுக்கு போன மொக்கச்சாமி..திருவனந்தபுரமா போறீங்க?ன்னார்.
ஆமா ன்னார் நண்பர். அப்படின்னா அப்படியே குற்றாலத்தில் இறங்கிட்டு போகலாமே ன்னார்.
இல்லயே அங்க போற ப்ளான் இல்லயேன்னார் நண்பர்.
இல்லல்ல குற்றாலத்துல சீசன் நல்லா இருக்காம். அதுவுமில்லாம அருவில குளிக்கிறது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமான்னார் மொக்கச்சாமி.!
இல்ல..நான் வேற ரூட்ல போலாம்னு பாக்குறேன்னு இழுத்தார் நண்பர்..
நம்ம ஆளு விடலை.! இதுக்காக ஒருதடவை போகமுடியாது. அப்படியே போய்ட்டு வாங்களேன். ரொம்ப நல்லா இருக்கும். இதுமாதிரி வாய்ப்பெல்லாம் இழக்கக்கூடாது ன்னு ஏத்திவிட்டார்.
நண்பரும் கன்வின்ஸ் ஆகி ஒரு வழியா..சரி..நீங்க சொல்றது கூட சரிதான். ! அப்படியே குற்றாலத்துக்கும் போய்ட்டே வந்துடறேன்னார்.
அப்ப..கண்டிப்பா குற்றாலம் போறீங்கள்ல..! ன்னார் மொக்கச்சாமி.!
ஆமான்னார். நண்பர்..
அப்படின்னா..நீங்களா குற்றாலம் போறேன்னதால சொல்றேன்...! குற்றாலத்தில் என் தங்கச்சி வீடு இருக்கு..! போறப்ப அங்க இந்த ஊறுகா பாட்டிலை குடுத்துடுங்க ன்னார்.. இப்பதான் நண்பருக்கு புரிஞ்சுது...மொக்கச்சாமியோட வில்லத்தனம்.!
முயற்சிகள் தோற்கலாம். முயற்சிக்கத்தோற்கலாமான்னு சொல்லுவாங்க! அது போலத்தான். எடுத்த லட்சியத்துக்காக எதைவேணும்னாலும் இழக்கத்தயாரா இருக்கணும் அப்பதான்..அந்த இலக்கு பத்தின பார்வை நமக்கு கூர்மையாகும். தொடர் வெற்றிகள்தான் நிரந்தர சாதனைக்கு வழி வகுக்கும்.
இந்த ஜென்மத்துல சாதிக்கவேண்டாம் அடுத்த ஜென்மத்துல சாதிச்சுக்கலாம்னு எதையாவது விட்டுட்டுப்போகமுடியுமா சொல்லுங்க!
அதான் ரொம்ப வேதனைப்பட்டு பாரதியார் சொல்லுவாரு!
தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று
பிறர் வாடப்பல செயல்கள் செய்து
நரைகூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல
வீழ்வேனென்று நினைத்தாயோ!
தினம் சாப்பிட்டு சாப்பிட்டு , ஊர்க்கதையெல்லாம் பேசிப்புட்டு, பிரச்னைகள்ல சிக்கிக்கிட்டு , அடுத்தவுங்களை கஷ்டப்படுத்தி, அப்படியே வயசாகி செத்துப்போகும் மத்தவுங்க மாதிரி நான் விழுந்துட மாட்டேன்ன்னாரு..
அதே மாதிரி சாதிச்சுட்டும் போனாரு..!
எந்த லட்சியமா இருந்தாலும். அதுல உங்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தா போதும்ங்க ! ஏன்னா..இந்த உலகம்..நீங்கள் உயரும்வரை..வேடிக்கைதான் பார்க்கும்.
வெற்றியடைஞ்சதுக்க்ப்புறம்தான் தூக்கிவச்சு கொண்டாடும்.
போராடுற வரை 'அய்யோ வீண்முயற்சி' ன்னு சொல்றவுங்க...ஜெயிச்சப்புறம் அடடா..விடாமுயற்சி' ன்னு சொல்லுவாங்க!
இன்னிக்கு வரைக்கும் எந்த லட்சியமும் இல்லாம இருந்தாக்கூட பரவாயில்ல...இப்ப முடிவெடுங்க..! உங்க லட்சியம் நிச்சயம் வெல்லும்! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சின்ன வயசுலேயே கார்கள்மேலயே கவனத்தை வச்சு..அதுதான் வாழ்நாள் லட்சியம்னு இருந்த ஹென்றி போர்டுதான் Ford ங்கிற கார் கம்பெனியையே உருவாக்கினாரு.!
சினிமாதான் உலகம்னு 9 வயசுலேருந்து கனவுகண்டுக்கிட்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் உலகமே வியக்குற அளவுக்கு ஜுராசிக் பார்க்ன்னு படம் எடுத்தாரு!
ஒருநாள் இந்த உலகத்தையே தன் வார்த்தைகளால் கட்டிப்போடலாம்னு சிறுவயதிலேயே நினைச்சதால்தான் கண்ணதாசன் சிறந்த கவிஞரா ஆனாரு!
அமைதிப்படை படத்துல...ஒரு நாயோட சண்டை போட்டு தேங்காய் பொறுக்குறவரா இருக்கும் சத்யராஜிடம் , மணிவண்ணன் கேப்பாரு..உன் லட்சியம் என்னன்னு, அதுக்கு அவரு..பக்கத்தில இருக்குற அரண்மனைய வாங்கணும் னுவாரு.! அதுக்கு மணிவண்ணன் சிரிச்சுட்டு...இதெல்லாம் நடக்குற காரியமான்னுவாரு..அப்ப சத்யராஜ் சொல்வார். முடியும்னு நெனச்சுத்தானுங்கண்ணா..நிலாவுல கால் வச்சாங்க..! நம்ம முடியாதுன்னு நினைச்சதாலதான் இன்னும் நிலாச்சோறே ஊட்டிக்கிட்டிருக்கோம். அதே மாதிரி அந்த அரண்மனையை அடைஞ்சிடுவார் சத்யராஜ்.
நம்மள்ல பாதி பேர் தோல்வி பற்றிய பயத்துலயே லட்சியங்களை அமைச்சுக்கறதில்லை! ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித்தோற்றுப்போவது எவ்வளவோ மேல்!
ஆனா சிலபேர் அடுத்தவுங்க லட்சியத்தில் குளிர்காயப் பாப்பாங்க!
மொக்கச்சாமிக்கு ஒரு நண்பர் இருந்தார்..அவர் திருவனந்தபுரம் போறதுக்காக கிளம்பிக்கிட்டிருந்தார். அவர் வீட்டுக்கு போன மொக்கச்சாமி..திருவனந்தபுரமா போறீங்க?ன்னார்.
ஆமா ன்னார் நண்பர். அப்படின்னா அப்படியே குற்றாலத்தில் இறங்கிட்டு போகலாமே ன்னார்.
இல்லயே அங்க போற ப்ளான் இல்லயேன்னார் நண்பர்.
இல்லல்ல குற்றாலத்துல சீசன் நல்லா இருக்காம். அதுவுமில்லாம அருவில குளிக்கிறது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமான்னார் மொக்கச்சாமி.!
இல்ல..நான் வேற ரூட்ல போலாம்னு பாக்குறேன்னு இழுத்தார் நண்பர்..
நம்ம ஆளு விடலை.! இதுக்காக ஒருதடவை போகமுடியாது. அப்படியே போய்ட்டு வாங்களேன். ரொம்ப நல்லா இருக்கும். இதுமாதிரி வாய்ப்பெல்லாம் இழக்கக்கூடாது ன்னு ஏத்திவிட்டார்.
நண்பரும் கன்வின்ஸ் ஆகி ஒரு வழியா..சரி..நீங்க சொல்றது கூட சரிதான். ! அப்படியே குற்றாலத்துக்கும் போய்ட்டே வந்துடறேன்னார்.
அப்ப..கண்டிப்பா குற்றாலம் போறீங்கள்ல..! ன்னார் மொக்கச்சாமி.!
ஆமான்னார். நண்பர்..
அப்படின்னா..நீங்களா குற்றாலம் போறேன்னதால சொல்றேன்...! குற்றாலத்தில் என் தங்கச்சி வீடு இருக்கு..! போறப்ப அங்க இந்த ஊறுகா பாட்டிலை குடுத்துடுங்க ன்னார்.. இப்பதான் நண்பருக்கு புரிஞ்சுது...மொக்கச்சாமியோட வில்லத்தனம்.!
முயற்சிகள் தோற்கலாம். முயற்சிக்கத்தோற்கலாமான்னு சொல்லுவாங்க! அது போலத்தான். எடுத்த லட்சியத்துக்காக எதைவேணும்னாலும் இழக்கத்தயாரா இருக்கணும் அப்பதான்..அந்த இலக்கு பத்தின பார்வை நமக்கு கூர்மையாகும். தொடர் வெற்றிகள்தான் நிரந்தர சாதனைக்கு வழி வகுக்கும்.
இந்த ஜென்மத்துல சாதிக்கவேண்டாம் அடுத்த ஜென்மத்துல சாதிச்சுக்கலாம்னு எதையாவது விட்டுட்டுப்போகமுடியுமா சொல்லுங்க!
அதான் ரொம்ப வேதனைப்பட்டு பாரதியார் சொல்லுவாரு!
தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று
பிறர் வாடப்பல செயல்கள் செய்து
நரைகூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல
வீழ்வேனென்று நினைத்தாயோ!
தினம் சாப்பிட்டு சாப்பிட்டு , ஊர்க்கதையெல்லாம் பேசிப்புட்டு, பிரச்னைகள்ல சிக்கிக்கிட்டு , அடுத்தவுங்களை கஷ்டப்படுத்தி, அப்படியே வயசாகி செத்துப்போகும் மத்தவுங்க மாதிரி நான் விழுந்துட மாட்டேன்ன்னாரு..
அதே மாதிரி சாதிச்சுட்டும் போனாரு..!
எந்த லட்சியமா இருந்தாலும். அதுல உங்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தா போதும்ங்க ! ஏன்னா..இந்த உலகம்..நீங்கள் உயரும்வரை..வேடிக்கைதான் பார்க்கும்.
வெற்றியடைஞ்சதுக்க்ப்புறம்தான் தூக்கிவச்சு கொண்டாடும்.
போராடுற வரை 'அய்யோ வீண்முயற்சி' ன்னு சொல்றவுங்க...ஜெயிச்சப்புறம் அடடா..விடாமுயற்சி' ன்னு சொல்லுவாங்க!
இன்னிக்கு வரைக்கும் எந்த லட்சியமும் இல்லாம இருந்தாக்கூட பரவாயில்ல...இப்ப முடிவெடுங்க..! உங்க லட்சியம் நிச்சயம் வெல்லும்! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!