மூட்டை முழுவதும் முரண்பாடு!

28 Apr 2008 · சுரேகா சுந்தர்



இயற்கை சீரழிகிறது
மரங்களை வெட்டாதீர்கள்
அவைகள் இல்லையென்றால்
அவனியே இல்லை!
எழுதிவிட்டு
புன்னகைத்தான்
கவிஞன் !

எதுகை மோனையுடன்
மரம் காப்பாற்ற
கவிதை எழுதிய
காகிதமும்
மரம்தான் என்பதை
லாவகமாய்
மறந்து..!

இனி எதில் எழுதினால்
மரம் காக்கலாம். ?
நீ கவிதை எழுதுவதைக் குறை!
நிறைய மரங்கள் மூச்சு விடும்.

*********************

அரசு மதுக்கடையில்
அமிலக்காரமாய்
அருந்திவிட்டு
வண்டியில் போனால்
பிடிக்கிறார்கள்
குடித்துவிட்டு
ஓட்டினேனாம்!

அப்ப எதுக்குய்யா
பார் வச்சு
குடிக்க
பக்குவமா சொல்றீங்க!
குடிச்சவன்
வீட்டுக்கு
உருண்டுக்கிட்டா
போவான்?

************************

பையனை
கடத்தி
அப்பனுக்கு
செல்லில் பேசினா
பிடிச்சுருவான்னு
பயந்து
லெட்டரில் எழுதி
அனுப்பி வச்சேன்
மகனைப்பாத்து
சொன்னேன்
ஒங்க அப்பனிடம்
கொண்டு கொடு!
பயந்துக்கிட்டு
பணம் குடுப்பான்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →