காலையிலிருந்து
கிடைக்காத
உணவுக்காக
காடெங்கும் தேடிவிட்டு
நிழலுக்கு நின்றிருந்த
மரத்துக்கு
காகமொன்று வந்தது.
வாயினில் வடை!
பாடச்சொல்லி நான் கேட்க,
வடை எனக்கு அருகில்விழ,
தயவு செய்து கொடுத்துவிடு!
கேட்ட காகத்திடம்
வந்து எடுத்துக்கொள் என்றேன்.
கீழே வந்த காகத்தை
வினாடி பிசகாமல்
அடித்து உண்டேன்.
எவன் தின்பான் வடையை?
அதுவும் காகத்தின் எச்சிலை!
டிஸ்கி:
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை,
கவிதையா அரைச்சுப்பாத்தேன்...ஹி..ஹி..