மூன்று வரித்திரைப்படங்கள்

02 Mar 2011 · சுரேகா சுந்தர்


திரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக.....

சேவல் சண்டையில் குருவின் அடிமை!
அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை!
காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை

இவனின் தொழிலே திருட்டு!
போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு!
அவராய் மாறி வில்லனை மிரட்டு!

ஊர்சுற்றி லூட்டி அடித்தான்
டுட்டோரியலில் தொழில் படித்தான்
காதலியைக் கைப்பிடித்தான்!


பொது இடத்தில் வெட்டுண்ட கை
போலீஸால் தேடப்படும் மெய்!
பழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்!





கண்டுபிடித்ததை பின்னூட்டமிடுங்கள்

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →