புன்னகைத் தூக்கு!

22 Mar 2010 · சுரேகா சுந்தர்




ஊரோரப்
புளியமரத்தில்
தூக்கில் தொங்குவேன்
நான் !

அழுதரற்றிக்
கால்பிடித்து
கழுத்திறுகல்
உறுதிசெய்து
என்
இறப்பில்
மகிழ்வான்
அவன்!

பக்கத்தில்
கண்ணீருடன்
பதைபதைப்பாள்
அவள்!
பத்தாம் நாள்
காரியத்திற்கு
பத்துநாள் இருக்கிறதே?

அதுவரை
அவள் வீட்டில்
ராத்தங்க
விடாமல்
செய்துவிட்ட
மகிழ்வொன்று
புன்னகையாய்
வெளிவந்து
என்
நாக்கை நீட்டும்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →