மூன்றுவரித் திரைப்படங்கள்

31 Aug 2010 · சுரேகா சுந்தர்

ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..!

தம்பி கிழித்தான் கோட்டை!
அண்ணி தாண்டினாள் கோட்டை!
அண்ணன் விட்டான் கோட்டை!


இதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்!



படித்து கிராமம் சென்றான்!
ஊருக்காக நின்றான்!
பங்காளியைக் கொன்றான்!

----

பொய்யாய் வேலை வைத்தியம்!
பொதுவாய் கட்டிப்புடி வைத்தியம்!
மருத்துவமனைக்கே வைத்தியம்!

-----


பத்துபேரும் பினாமி!
கிருமிதான் எனிமி!
எனிமி கொல்ல சுனாமி!

-----
சேர்த்துவைத்த நட்புக்கு வலி!
நட்பினால் காதல் பலி!
மீண்டும் பிரிந்தால் பொலி!

------
ஆசையாய் இலவசப் படிப்பு !
ஆதிகேசவனால் இடிப்பு !
கள்ளப்பணத்தால் முடிப்பு!



பொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்!
படங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க!!

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →