புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்! விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தேர்வுநிலைப்பேரூராட்சியாக இருந்து, இப்போது தாலுகா தலைமையிடமாக மாறியிருக்கிறது.
புதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று! இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும்
சிறிய நரியாற்றுப்பாலம்! அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில்! இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்! அவர் பெயர் சின்னக்கருப்பர்!
இந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில்! அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.!
புதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான் எங்கள் வீடு இருந்தது.
ஊரின் மையப்பகுதியாக இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பிற்கு அரசாங்கம் என்ன பெயர் வைத்திருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதன் பெயர் - சீனிகடை முக்கம்! புதுக்கோட்டையிலிருந்து ஒரு சாலை ஊருக்குள் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணம் வழியே ஒரு சாலை , புதுக்கோட்டை சாலையை இந்த சீனிகடை முக்கில்தான் சந்திக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து இடையாத்தி வழியாக இன்னொரு சாலையும் இந்த முக்கில்தான் சந்திக்கும். இவை மூன்றும் சேர்ந்து நான்காவது திசையில் பேருந்து நிலையம் நோக்கி பயணிக்கும்.
ஊர்க்கடைசியில் பேருந்து நிலையம். அதன் எதிரிலேயே காவல் நிலையம். அதன் அருகிலேயே அரசினர் மேல்நிலைப்பள்ளி. பள்ளிக்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம்! சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள்! நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள்! பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க!
ஊருக்குள் பல்வேறு லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன. 1980 களிலேயே ஊருக்குள் த.சு.லூ.தி (தமிழ்நாடு சுவிசேஷ லூத்திரன் திருச்சபை - TELC) பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பகுதியிலேயே வள்ளுவர் திடல். பெரிய பேச்சரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் இங்குதான் நடக்கும். அதற்குப்பின்னால் பங்களா குளம்! பிறகு ஒரு அரசாங்கத் தொடக்கப்பள்ளி. ஆனால் அதை சிறப்பாக நடத்திய ஆசிரியர் திரு.செங்கமலம் என்பவரது பெயரால் செங்கமலம் ஸ்கூல் என்றே வழங்கப்பட்டு வந்தது.
சின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது! டிஇஎல்சி அழுவுது'! என்று பாடித்திரிந்ததுண்டு!
அந்த ஊரில்தான் TELC பள்ளியின், முதல் வகுப்பில் என்னை சேர்த்துவிட்டார்கள். அப்போது பெற்றோர் கலியாப்பட்டியிலேயே இருந்தனர். நானும், என் அத்தை மகனும் தாத்தா, பாட்டியுடன் இருந்தோம்.
அந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அது நடந்தது.
(தொடரும்)
புதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று! இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும்
சிறிய நரியாற்றுப்பாலம்! அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில்! இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்! அவர் பெயர் சின்னக்கருப்பர்!
இந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில்! அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.!
புதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான் எங்கள் வீடு இருந்தது.
ஊரின் மையப்பகுதியாக இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பிற்கு அரசாங்கம் என்ன பெயர் வைத்திருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதன் பெயர் - சீனிகடை முக்கம்! புதுக்கோட்டையிலிருந்து ஒரு சாலை ஊருக்குள் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணம் வழியே ஒரு சாலை , புதுக்கோட்டை சாலையை இந்த சீனிகடை முக்கில்தான் சந்திக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து இடையாத்தி வழியாக இன்னொரு சாலையும் இந்த முக்கில்தான் சந்திக்கும். இவை மூன்றும் சேர்ந்து நான்காவது திசையில் பேருந்து நிலையம் நோக்கி பயணிக்கும்.
ஊர்க்கடைசியில் பேருந்து நிலையம். அதன் எதிரிலேயே காவல் நிலையம். அதன் அருகிலேயே அரசினர் மேல்நிலைப்பள்ளி. பள்ளிக்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம்! சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள்! நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள்! பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க!
ஊருக்குள் பல்வேறு லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன. 1980 களிலேயே ஊருக்குள் த.சு.லூ.தி (தமிழ்நாடு சுவிசேஷ லூத்திரன் திருச்சபை - TELC) பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பகுதியிலேயே வள்ளுவர் திடல். பெரிய பேச்சரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் இங்குதான் நடக்கும். அதற்குப்பின்னால் பங்களா குளம்! பிறகு ஒரு அரசாங்கத் தொடக்கப்பள்ளி. ஆனால் அதை சிறப்பாக நடத்திய ஆசிரியர் திரு.செங்கமலம் என்பவரது பெயரால் செங்கமலம் ஸ்கூல் என்றே வழங்கப்பட்டு வந்தது.
சின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது! டிஇஎல்சி அழுவுது'! என்று பாடித்திரிந்ததுண்டு!
அந்த ஊரில்தான் TELC பள்ளியின், முதல் வகுப்பில் என்னை சேர்த்துவிட்டார்கள். அப்போது பெற்றோர் கலியாப்பட்டியிலேயே இருந்தனர். நானும், என் அத்தை மகனும் தாத்தா, பாட்டியுடன் இருந்தோம்.
அந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அது நடந்தது.
(தொடரும்)