நேர்மைன்னா என்னங்க?

24 Dec 2007 · சுரேகா சுந்தர்

நேர்மை என்றால் என்ன?

-அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.

ஏன் ஒவ்வாது..?

-ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள் இருக்கும்.
கொஞ்சம் அடிப்படையாக சிந்திப்போம்.

ஒருவர் நேர்மையானவராக இச்சூழலில் இருந்தால், அவரை 'புதிய ஜந்து' மாதிரி பார்க்கிறோம். ஆனால் , கொடுமை என்னவென்றால், மனிதனின் பொதுவான குணங்களில் ஒன்றுதான் நேர்மை..!

நம் அனைவருக்கும் (பெரும்பான்மையாக) 18 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களாக இருப்போம். நகர வீதிகளில் சிறப்பாக ஓட்டிச்சென்றிருப்போம்.நம்மில் எத்தனைபேரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறது?நம்மை யாரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியதில்லை என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் நாம்
வாங்குவதில்லை. ஏன்..? நேரமில்லை.. என்போம். ஆனால் எத்தனையோ நேரங்களை வீணாக செலவழித்திருப்போம்.
இந்நிலையில் ஒரு நெரிசல் மிகுந்த சாலையில் , நல்ல வேகத்தில் செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்தால், அவரிடம் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பார்ப்பதும் , அவரிடத்தில் கையூட்டு கொடுத்து நகர நினைப்பதும்தான் நடக்கும். இதுதான் லஞ்சத்தை ஊக்குவிக்கும் நேர்மையை மீறிய கயமைத்தனம்.!இங்குதான் பிறக்கிறது நேர்மையின்மை! நம்மால் ஒருவர் லஞ்சம் வாங்குவதை தட்டிக்கேட்க முடியாது. ஏனெனில் நாமும் தவறு செய்தவர்தான்..!நாம் யாருக்குமே பயப்படாமல் தவறுகளை தட்டிக் கேட்க துணிந்துவிட்டோமென்றால் நேர்மையானவர் ஆகிவிட்டோம் என்று அர்த்தம்.! ஏனெனில் எதிராளி குறைகூற நம்மிடம் ஒரு
தவறும் இருக்காது.!ஆகவே நேர்மையை உண்மைகொண்டே ஆரம்பிக்கமுடியும்..தைரியமாக உண்மை கூறப்பழகவேண்டும். நாம் கண்டிப்பாக பொய்கூறமாட்டோம் என்று எதிராளி எண்ணவேண்டும். மேலும் நம் சமூகம், அரசு ஆகியவை கூறும் நியாயமான செயல்களை அதே முறைப்படி பின்பற்றவேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டியிருக்காது. அதையும் மீறி தவறு நடந்தால்...

ரவுத்திரம் பழகவேண்டியதுதான்...!

"என் ஒருவனால் இந்த உலகை, நாட்டை , ஊரை , கிராமத்தை,

தெருவை, ஏன் என் குடும்பத்தைக்கூட மாற்றமுடியாது என்ற அவநம்பிக்க்கு அடிமையாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம். நேர்மை பழகிப்போய் அதன் ருசி கண்டுவிட்டால் அப்புறம் ஒரு கூட்டமே அதனை பயிற்சிசெய்யும். அப்போது பார்த்தால் அனைத்தும் மாற ஆரம்பிக்கும்.!  அனைவரும் நேர்மையாகிவிட்டோம் என்ற முடிவுக்கு விரைவில் நாம் வந்துவிடுவோம்.பயத்தின் அடிப்படையே நேர்மையின்மைதான்.! நேர்மை பழகிப்போனபின் பார்த்தால் நம் பலம் நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.!

முதலில் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதி பூணுவோம்..!

ஏனெனில் நாமெல்லாம் பூனைத்தோல் போர்த்திய புலிகள்!
பூனைத்தோலை உதறி புலியென்று உணருவோம். !  


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →