கொஞ்சநாளைக்கு முன்னால சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவதை நேரில் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன். எனக்கும் மனசுக்குள்ள, இப்படிப்பட்ட தண்டனைகள் தேவைதானா? ஆனா இப்படி பண்ணினாத்தானே நம்ம ஆளுக திருந்தும்னு நடுவர் இல்லாத பட்டிமன்றமெல்லாம் ஓடிக்கிட்டிருந்தது.
சாதாரணமாகவே, இரண்டுபேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டு ஒரு பாதிப்பில் நீதி(?)மன்றம் போனால், இரண்டு பேரும் சமாதானமாகி , வக்கீலுக்கு கொடுக்க ஒன்றுமில்லைன்னு ஒரு முடிவுக்கு(!) வரும்வரை வழக்கு நடக்கும்.
இல்லைன்னா பகைவளர்ந்து அதை அடுத்த தலைமுறை எடுத்து நடத்தும்.அப்படியும் தீர்ப்பு சாதகமா இல்லைன்னா அப்பீலேய்!
எத்தனைநாளைக்குத்தான் இப்படியோ?
ஆனா நடு ஊரில் வைத்து தலையை வெட்டும் சவுதியில் , தீர்ப்புகள் சுடச்சுட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் கிடைச்சுடும். (அதுக்கு மக்கள் தொகை, குற்ற எண்ணிக்கைன்னு பல காரணங்கள் இருக்கும்.) ஆனா இங்க அப்படி இல்ல.! அதுனாலயே இதெல்லாம் நமத்துப்போயி, குற்றம் செய்தவுங்க மேல ஒரு பரிதாபத்தையே உருவாக்கிடுறாங்க நம்ம வாய்தா ராஜாக்கள்! (மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி நீதிமன்றங்களும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஓரளவுக்கு இருந்தாலும்)
இதை ஒரு நீதிபதியே சொல்லியிருக்காரு!
சவுதி அரேபியாவில் இன்னொரு நடைமுறையும் இருக்கு! தண்டனை வழங்கப்பட்டவங்களை , பாதிக்கப்பட்டவங்க மன்னித்தால் தண்டனை ரத்தாகிவிடும்.
சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் , தண்டனை வழங்கப்பட்ட குடும்பம் மன்றாடிக்கேட்டுக்கொண்டதால், பாதிக்கப்பட்ட குடும்பம் அவரை மன்னிக்க, அவருக்கு விடுதலை கிடைத்தது.
ஆனால் இன்னொரு வழக்கு- பாதிக்கப்பட்டவர்களின் பிடிவாதத்தால் -தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எனக்கு இது நியாயமாகவே படுது!
ஏன்னா...
நீண்ட நாட்களாக இழுத்து நடந்த தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு, அந்த அப்பாவி
மாணவிகளின் மரணத்துக்கு பதிலா...மரணதண்டனை வழங்குவதோட முடிஞ்சிருக்கு!
அதுக்கு மேல்முறையீடு கேட்டவுங்க...இது முன்விரோதம் காரணமாகவோ, திட்டமிட்டோ செய்யப்படலை! அதனால் தண்டனையை குறைக்கணும்னு கேட்டாங்களாம்.!(நல்லவேளை...தீர்ப்பு மேல்கோர்ட்டில் மாற்றப்படலை)
சாதாரண குடிமகனே கேட்கிறான்.! "முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?
மரணதண்டனை தேவையா இல்லையா எனும் வாதத்தைவிட, பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பமே ஒத்துக்கொண்டால்தான் அதை அப்பீலுக்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மிரட்டி ஒத்துக்க வைக்க வேற ஆரம்பிச்சுருவாங்களோ? அதையும் சமாளிச்சாகனும்)
இந்த தருமபுரி வழக்கு விஷயத்தில், இழந்த குடும்பத்தார் எப்போது அந்த (தண்டனை) நன்னாள் வரும்னு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கே பரிதாபம் ஏற்படும்வகையில் வழக்குகள் தள்ளிப்போவதுதான் சிரமம்.! தப்பு செய்தவர்களது குடும்பமும் தவித்துதான் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பண்ணித்தொலைங்கப்பான்னுட்டுதான்.!
தண்டனை நிறைவேறுமா , நிறைவேறாதா என்று இரு தரப்பும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!
இந்த தண்டனைகளுக்கும் இப்ப சோதனை ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு!
தண்டனைகளை நாம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டோமோ? அப்படி ஆரம்பித்தால் இந்தச் சமூகமே தண்டனைகளை கையில் எடுக்கும் காலம் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன்.......
சாதாரணமாகவே, இரண்டுபேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டு ஒரு பாதிப்பில் நீதி(?)மன்றம் போனால், இரண்டு பேரும் சமாதானமாகி , வக்கீலுக்கு கொடுக்க ஒன்றுமில்லைன்னு ஒரு முடிவுக்கு(!) வரும்வரை வழக்கு நடக்கும்.
இல்லைன்னா பகைவளர்ந்து அதை அடுத்த தலைமுறை எடுத்து நடத்தும்.அப்படியும் தீர்ப்பு சாதகமா இல்லைன்னா அப்பீலேய்!
எத்தனைநாளைக்குத்தான் இப்படியோ?
ஆனா நடு ஊரில் வைத்து தலையை வெட்டும் சவுதியில் , தீர்ப்புகள் சுடச்சுட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் கிடைச்சுடும். (அதுக்கு மக்கள் தொகை, குற்ற எண்ணிக்கைன்னு பல காரணங்கள் இருக்கும்.) ஆனா இங்க அப்படி இல்ல.! அதுனாலயே இதெல்லாம் நமத்துப்போயி, குற்றம் செய்தவுங்க மேல ஒரு பரிதாபத்தையே உருவாக்கிடுறாங்க நம்ம வாய்தா ராஜாக்கள்! (மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி நீதிமன்றங்களும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஓரளவுக்கு இருந்தாலும்)
இதை ஒரு நீதிபதியே சொல்லியிருக்காரு!
சவுதி அரேபியாவில் இன்னொரு நடைமுறையும் இருக்கு! தண்டனை வழங்கப்பட்டவங்களை , பாதிக்கப்பட்டவங்க மன்னித்தால் தண்டனை ரத்தாகிவிடும்.
சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் , தண்டனை வழங்கப்பட்ட குடும்பம் மன்றாடிக்கேட்டுக்கொண்டதால், பாதிக்கப்பட்ட குடும்பம் அவரை மன்னிக்க, அவருக்கு விடுதலை கிடைத்தது.
ஆனால் இன்னொரு வழக்கு- பாதிக்கப்பட்டவர்களின் பிடிவாதத்தால் -தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எனக்கு இது நியாயமாகவே படுது!
ஏன்னா...
நீண்ட நாட்களாக இழுத்து நடந்த தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு, அந்த அப்பாவி
மாணவிகளின் மரணத்துக்கு பதிலா...மரணதண்டனை வழங்குவதோட முடிஞ்சிருக்கு!
அதுக்கு மேல்முறையீடு கேட்டவுங்க...இது முன்விரோதம் காரணமாகவோ, திட்டமிட்டோ செய்யப்படலை! அதனால் தண்டனையை குறைக்கணும்னு கேட்டாங்களாம்.!(நல்லவேளை...தீர்ப்பு மேல்கோர்ட்டில் மாற்றப்படலை)
சாதாரண குடிமகனே கேட்கிறான்.! "முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?
மரணதண்டனை தேவையா இல்லையா எனும் வாதத்தைவிட, பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பமே ஒத்துக்கொண்டால்தான் அதை அப்பீலுக்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மிரட்டி ஒத்துக்க வைக்க வேற ஆரம்பிச்சுருவாங்களோ? அதையும் சமாளிச்சாகனும்)
இந்த தருமபுரி வழக்கு விஷயத்தில், இழந்த குடும்பத்தார் எப்போது அந்த (தண்டனை) நன்னாள் வரும்னு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கே பரிதாபம் ஏற்படும்வகையில் வழக்குகள் தள்ளிப்போவதுதான் சிரமம்.! தப்பு செய்தவர்களது குடும்பமும் தவித்துதான் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பண்ணித்தொலைங்கப்பான்னுட்டுதான்.!
தண்டனை நிறைவேறுமா , நிறைவேறாதா என்று இரு தரப்பும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!
இந்த தண்டனைகளுக்கும் இப்ப சோதனை ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு!
தண்டனைகளை நாம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டோமோ? அப்படி ஆரம்பித்தால் இந்தச் சமூகமே தண்டனைகளை கையில் எடுக்கும் காலம் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன்.......