அப்படியாவது தண்டனையை.....காப்பாற்றலாம்.!

05 Jan 2008 · சுரேகா சுந்தர்

இந்தப்பதிவு போடும் எண்ணமே இல்லை! இந்த செய்தியை படிக்கும்வரை !


தர்மபுரி' வழக்கு ! மூவரின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு-

இதைப்படிச்சவுடனேயே இன்னும் கொதிப்பு அதிகமாகுதுங்க!


1.முதலில் இந்த வழக்கு எடுத்துக்கொண்ட காலமே மிக அதிகம்.

2. குற்றவாளிகள் முழுமையாக இனம்கண்டபின்னர் உடனே தீர்ப்பு அளித்திருக்கலாம்.

3. பொது இடத்தில் நடந்த,(பலரும் பார்த்த) ஒரு நிகழ்வுக்கு இன்னும் என்ன மறு விசாரணைகள்?

4. தன்னுடைய சொந்த கட்சியில் தன் பலத்தையும் - பார்! பஸ்ஸெல்லாம் எரிச்சேன்னு சொல்லி தலைமையிடம் சீட்டு கேட்கவும் பயன்பட்ட ஒரு அடிப்படை சுயநல,
கயமை,,காட்டுமிராண்டி,பொறுக்கித்தனத்துக்கு இவ்வளவு நாளே அதிகம்.இந்த தண்டனையே கம்மி. ஆனா இதைவிட பெரிய தண்டனை இந்தியாவில் இல்லையே !

5. ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது.

6. இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

7.அதுனால, இடையில் ஒரு நிரபராதி மாட்டினால் கூட பரவாயில்லை. ஆயிரம் குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். அப்பதான் இந்த சமூகத்தில் வாழும் தகுதியே நமக்கு வரும்.

8.தூக்குதண்டனை வேண்டாமென்று கூறும் யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்து அப்புறம் எதிரியை விடுவிக்க இவர்களே முயலுவார்களா? -அந்த வலி , வலித்தால் மட்டுமே புரியும் வலி.!

9.காலம் கடந்த நீதி, இப்போ மறுக்கப்பட்ட நீதி ஆகிடுமோன்னு அச்சமா இருக்கு.!

10. ஆனா, இவர்கள் விடுவிக்கப்பட்டால் , இறந்த பெண்களின் குடும்பத்தினரே முயன்று அவர்களை நடுரோட்டில் கொல்லுவார்கள். அந்த வழக்கில், கொன்றவர்கள் தூக்குதண்டனையால் சாவார்கள். (ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர் நஷ்டம் ! இந்த சட்ட பிறழ்வால்)

நாம் ஒன்று செய்யலாம்..தண்டனையை உறுதி செய்யச்சொல்லி உயர்நீதிமன்றம், ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பலாம்.! மின்னஞ்சலாம்.!

அப்படியாவது...தண்டனையை.....காப்பாற்றலாம்.!

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →