உன்னைத்தேடும் முயற்சியில்..

30 Jan 2008 · சுரேகா சுந்தர்




எழுத யத்தனிக்கும்
எல்லாக்
கவிதைகளுக்குள்ளும்
ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நீ !

உன்னைத்தேடும்
முயற்சியில்
வார்த்தை
வசப்படாமல்,
ஏதோவொன்றை
கிறுக்கவும் முடியாமல்
காகிதச்சிறையில்
சிக்கி முடிகின்றன
என் எல்லாக்
கவிதைகளும்!

எப்படியாவது
கண்டுபிடித்து
விடலாமென்று
பேனா மையை
அனுப்பினால்
அதற்கும் கரிபூசி
வெண்மையாய்
சிரித்து வைக்கிறாய்!

உன்னை
வெளியே
கொண்டுவர
அதிக வார்த்தைகளை
வீணாக்க
விரும்பவில்லை!

ஒரு அறிவிப்பு
வெளியிடுகிறேன்.
'முத்தமிடும்
நேரமிது!'
இதழ்களை
மட்டுமாவது
அனுப்பிவை!

நான் எழுதவேண்டும்.!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →