அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்!
அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார்.
'அய்யா காசு குடுங்கய்யா!'
ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை செய்யலாமில்ல?
'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!'
அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா?
நல்லா பாக்குறேன் அய்யா
'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார்.
கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...?
ம். 18 ரூவா இருக்குங்க!
சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல?
சரிங்கய்யா..!
என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று!
உடனே ஒரு உள்ளூர் நண்பருக்கு செல்பேசியில் பேசி , பத்து ரூபாய் வாங்கிக்கொள்கிறார். இப்போது அவர் கையில் இருப்பது 15 ரூபாய்.!
ஒரு போன் வருகிறது. அய்யா..! நான் கீரமங்கலத்திலேருந்து சீனிவாசன்
பேசுறேன்.
சொல்லுங்க!
உங்ககிட்டதான் நம்ம வீடு கட்டும்போது தேக்கு மரம் வாங்கினேன்..இப்ப நம்ம சகலை வீட்டுக்கும் அதேமாதிரி.2 தேக்கு மரம் வேணுங்கய்யா!
சரி! தந்துட்டா போச்சு! ஒரு மரம் 25000 ரூவா ஆகும்! கிளையெல்லாம் கிடைக்காது.! நடுமரம் மட்டும்தான் தருவேன் பரவாயில்லயா?
தெரியுங்கய்யா.! எப்ப வாங்கிக்கலாம்?
உங்களுக்கு எப்ப வேணும்?
இன்னைக்கு கிடைச்சாக்கூட பரவாயில்லங்கய்யா?
அப்படியா? அப்ப ஒரு லாரியை எடுத்துக்கிட்டு கீரமங்கலத்துலயே காத்திருங்க..! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்க வரேன். ! தோட்டத்துக்குப்போய் வெட்டிக்கலாம்.!
என்று கூறிவிட்டு...
கண்டக்டர்...கீரமங்கலம் ஒண்ணு குடுங்க! என்று 13 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறார்.
இப்போது அவர் கையில் இருப்பது 2 ரூபாய்.!
கீரமங்கலம் சென்று சீனிவாசனை சந்தித்து மரம் வெட்டும் ஆட்களுடன் லாரியில் சென்று தேக்குமரங்களை வெட்டிக்கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மீண்டும் இரண்டு மரக்கன்றுகளை , வெட்டியவர்களை விட்டே நடச்சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த தொகையான ரூபாய் 50000த்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குள்
நுழைகிறார்.!
அப்போது சொல்கிறார்..
நான் வளத்த மரங்கள்தான் எனக்கு ஆதாரம்...2 ரூபாயோட பஸ்ஸில் வந்தவனுக்கு....50000ரூபாயோட காத்திருக்குதுங்க என் புள்ளைங்க! இந்த மரங்க! இதுங்களை இத்தனை ஆண்டுகளா வளக்குறதுனாலதான். அதுங்க என்னை வளக்குதுங்க! -இப்படி சிலாகித்துப்பேசுகிறார்.!
அவர்...தங்கசாமி!
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடியைச்சேர்ந்த இவர்...கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்ப்பதையே ஒரு தவமாகச் செய்துவருகிறார். தன் பெயரான தங்கசாமி என்பதையே மரம் தங்கசாமி என்று எல்லோரும்அழைக்கும்படி, ஊருக்கு மரங்களால் புகழ்சேர்த்தவர்!
தன் சொந்த நிலத்தில் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு அவற்றை, குழந்தைகளை விட அற்புதமாய் பராமரித்து.. அவைகளே உலகம் என்று வாழ்ந்து வருபவர்.!
மரத்தைப்பற்றி பேச ஆரம்பித்தால், ' இத்தனை தகவல்களா?' என்று வியக்க வைப்பவர்!
அவரைப்பார்க்க வருபவர்களுக்கு அவர் தரும் முதல் மரியாதை.. ஒரு மரக்கன்றும் .,.அதை நடும் இடமும் காட்டி...நம் கைகளாலேயே நட வைத்து ஒரு நோட்டில் எழுதி அதனைப் பதிவு செய்வது.!
இங்கு 100க்கும் மேற்பட்ட வகை மரங்களை வளர்ப்பதாகச்சொன்னார்.
செஞ்சந்தனம் மரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.!
சந்தன மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன...!
தேக்கு மரங்கள் சிலிர்த்து நிற்கின்றன! ( எல்லா மரங்களையும் நேர்க்கோட்டில் வளர்ப்பது எப்படி என்றுசொல்லித்தந்தார்)
..அய்யா! இதுங்களோட மதிப்பு யாருக்குமே தெரியல.! சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்ல!சாதாரணமா பாத்து வளத்ததுக்கு..ஒரேநாளில்ஐம்பதாயிரம் ரூவா யாரு குடுப்பா? இந்த மரங்கள் குடுக்கும்ங்க!
நான் கிராமத்தான்...என்று ஆரம்பித்து.,பல்கலைக்கழகமாணவர்களுக்கு, 3 மணி நேரம்
வகுப்பெடுக்கும் அளவுக்கு யதார்த்தமான பேச்சு நடை!எளிமை! இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்யுதுன்னு...
இவரைப் பார்த்து தாராளமாகச் சொல்லலாம்..!
இவரைப்பார்க்கச்சென்றபோது....இன்னொரு அதிர்ச்சிகாத்திருந்தது..!
ஆம்...இவர்...கடவுளை கண்முன்னேகாட்டினார்..அது...........
(தொடரும்)
அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார்.
'அய்யா காசு குடுங்கய்யா!'
ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை செய்யலாமில்ல?
'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!'
அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா?
நல்லா பாக்குறேன் அய்யா
'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார்.
கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...?
ம். 18 ரூவா இருக்குங்க!
சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல?
சரிங்கய்யா..!
என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று!
உடனே ஒரு உள்ளூர் நண்பருக்கு செல்பேசியில் பேசி , பத்து ரூபாய் வாங்கிக்கொள்கிறார். இப்போது அவர் கையில் இருப்பது 15 ரூபாய்.!
ஒரு போன் வருகிறது. அய்யா..! நான் கீரமங்கலத்திலேருந்து சீனிவாசன்
பேசுறேன்.
சொல்லுங்க!
உங்ககிட்டதான் நம்ம வீடு கட்டும்போது தேக்கு மரம் வாங்கினேன்..இப்ப நம்ம சகலை வீட்டுக்கும் அதேமாதிரி.2 தேக்கு மரம் வேணுங்கய்யா!
சரி! தந்துட்டா போச்சு! ஒரு மரம் 25000 ரூவா ஆகும்! கிளையெல்லாம் கிடைக்காது.! நடுமரம் மட்டும்தான் தருவேன் பரவாயில்லயா?
தெரியுங்கய்யா.! எப்ப வாங்கிக்கலாம்?
உங்களுக்கு எப்ப வேணும்?
இன்னைக்கு கிடைச்சாக்கூட பரவாயில்லங்கய்யா?
அப்படியா? அப்ப ஒரு லாரியை எடுத்துக்கிட்டு கீரமங்கலத்துலயே காத்திருங்க..! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்க வரேன். ! தோட்டத்துக்குப்போய் வெட்டிக்கலாம்.!
என்று கூறிவிட்டு...
கண்டக்டர்...கீரமங்கலம் ஒண்ணு குடுங்க! என்று 13 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறார்.
இப்போது அவர் கையில் இருப்பது 2 ரூபாய்.!
கீரமங்கலம் சென்று சீனிவாசனை சந்தித்து மரம் வெட்டும் ஆட்களுடன் லாரியில் சென்று தேக்குமரங்களை வெட்டிக்கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மீண்டும் இரண்டு மரக்கன்றுகளை , வெட்டியவர்களை விட்டே நடச்சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த தொகையான ரூபாய் 50000த்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குள்
நுழைகிறார்.!
அப்போது சொல்கிறார்..
நான் வளத்த மரங்கள்தான் எனக்கு ஆதாரம்...2 ரூபாயோட பஸ்ஸில் வந்தவனுக்கு....50000ரூபாயோட காத்திருக்குதுங்க என் புள்ளைங்க! இந்த மரங்க! இதுங்களை இத்தனை ஆண்டுகளா வளக்குறதுனாலதான். அதுங்க என்னை வளக்குதுங்க! -இப்படி சிலாகித்துப்பேசுகிறார்.!
அவர்...தங்கசாமி!
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடியைச்சேர்ந்த இவர்...கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்ப்பதையே ஒரு தவமாகச் செய்துவருகிறார். தன் பெயரான தங்கசாமி என்பதையே மரம் தங்கசாமி என்று எல்லோரும்அழைக்கும்படி, ஊருக்கு மரங்களால் புகழ்சேர்த்தவர்!
தன் சொந்த நிலத்தில் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு அவற்றை, குழந்தைகளை விட அற்புதமாய் பராமரித்து.. அவைகளே உலகம் என்று வாழ்ந்து வருபவர்.!
மரத்தைப்பற்றி பேச ஆரம்பித்தால், ' இத்தனை தகவல்களா?' என்று வியக்க வைப்பவர்!
அவரைப்பார்க்க வருபவர்களுக்கு அவர் தரும் முதல் மரியாதை.. ஒரு மரக்கன்றும் .,.அதை நடும் இடமும் காட்டி...நம் கைகளாலேயே நட வைத்து ஒரு நோட்டில் எழுதி அதனைப் பதிவு செய்வது.!
இங்கு 100க்கும் மேற்பட்ட வகை மரங்களை வளர்ப்பதாகச்சொன்னார்.
செஞ்சந்தனம் மரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.!
சந்தன மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன...!
தேக்கு மரங்கள் சிலிர்த்து நிற்கின்றன! ( எல்லா மரங்களையும் நேர்க்கோட்டில் வளர்ப்பது எப்படி என்றுசொல்லித்தந்தார்)
..அய்யா! இதுங்களோட மதிப்பு யாருக்குமே தெரியல.! சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்ல!சாதாரணமா பாத்து வளத்ததுக்கு..ஒரேநாளில்ஐம்பதாயிரம் ரூவா யாரு குடுப்பா? இந்த மரங்கள் குடுக்கும்ங்க!
நான் கிராமத்தான்...என்று ஆரம்பித்து.,பல்கலைக்கழகமாணவர்களுக்கு, 3 மணி நேரம்
வகுப்பெடுக்கும் அளவுக்கு யதார்த்தமான பேச்சு நடை!எளிமை! இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்யுதுன்னு...
இவரைப் பார்த்து தாராளமாகச் சொல்லலாம்..!
இவரைப்பார்க்கச்சென்றபோது....இன்னொரு அதிர்ச்சிகாத்திருந்தது..!
ஆம்...இவர்...கடவுளை கண்முன்னேகாட்டினார்..அது...........
(தொடரும்)