திருவிழான்னு வந்தா....!

06 Apr 2008 · சுரேகா சுந்தர்

இன்று ஊருக்குப்பக்கத்தில் ஒரு கிராமத்திருவிழா.!
எப்பவும்போல, கேமிராவுடன் போனதால் சிக்கிய
காட்சிகள் இவை!

 


கிளி எடுத்துத்தரும்
சீட்டைப்பாத்து
கிழவி குரலில்
டேப் ரெக்கார்டர்
பலன் சொல்ல,
வண்டியை போத்தியிருக்கும்
வாசகங்கள்
சிரிப்பை வரவழைக்க
பக்கத்துக்கடைக்காரர்
பீட்டர் இங்க்லாண்ட்
வாடிக்கையாளரை எதிர்பார்த்து..!
(அவரிடம் ஒரு சட்டை வாங்கினேன்)




 

திடீர்க்கடைகளில்
திடீர் பக்தியும், திடீர் படிப்பும்..
சிறந்த நெட்வொர்க்கும்!
(இளையராஜா பாடல்கள் வாங்கினேன்)

 




இந்த கோபுரங்களுக்குப்பின்னே
எத்தனை
கடன்கள்,
கவலைகள்,
எதிர்பார்ப்புகள்!
கோபுரங்கள்
அழிந்தால்தான்
வீட்டில்
மகிழ்ச்சி வரும்.
(சீனிக்காராச்சேவு வாங்கினேன்)


சத்தியமாய் எனக்காக இல்லை!

 வாழ்க்கை மீதுள்ள  இவர்களது
நம்பிக்கைக்காக!


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →