இப்ப வங்கிகள் பக்கம் வருவோம்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு!
ஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை! எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்..!
அதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலையில் பொறுப்பு விழுந்துச்சு! அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை! அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க! ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க !
இதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக்காரு.. நீ என்ன கண்ணாடி போட்டிருக்க...உன் வீட்டில் ஏன் ஆறு பேர் இருக்கீங்கன்னு ஏதாவது சொத்தைக் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க ஆரம்பிச்சாங்க! அப்ப இது வங்கி மேலாளர்கள் தப்பும் இல்லை. அந்த வங்கி அந்த லட்சணத்தில், அரசாங்கத்தோட அறிவுறுத்தலின் பேரில் சும்மா உலுலுவாங்காட்டிக்கும் கடன் கொடுக்குறமாதிரி இங்கொண்ணும் , அங்கொண்ணுமா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கு! அதிகாரிகளும் அதைக் கண்டுக்கிறதில்லை. உண்மையிலேயே.. இதுவரை கொடுக்கப்பட்ட கல்விக்கடன் எதிலயும் எந்த வங்கிக்கும் விருப்பமே இல்லைங்கிறது, அந்தந்த உயரதிகாரிகளோட கருத்து!
அதுக்கும்மேல ஒண்ணு இருக்கு....நம்ம கடன் வாங்குற பெருமக்கள்...சரி.. நீ படிக்கணும்னு ஆசைப்படுற..! தனியாரில்தான் சீட் கிடைக்குது...! அவுங்களுக்கு பீஸ் கட்டணும்..! அதுவும் சரி! அதுக்காகத்தான் வங்கில ரொம்ம்ம்ம்ப போராடி கடன் வாங்குற! அந்தக்கடனைக்கொண்டாந்து காலேஜுலயும் கட்டியாச்சு! அதுக்கப்புறம்.........???? இனிமே என்ன கவலை...படிக்கவேண்டியதில்லைன்னு நினைச்சுக்கிட்டு...சரியா படிக்காம...50-60% மார்க் எடுத்துட்டு, ஏதாவது ஒரு சுமாரான வேலைல ஒட்டிக்கிட்டு வாங்கின கல்விக்கடனுக்கு வாய்தா சொல்லிக்கிட்டு...அப்புறம் என்னிக்காவது ஒருநாள்.. கல்விக்கடன் வாங்கி நொடிச்சுப்போயிட்டேன். அதைத்தள்ளுபடி பண்ணனும்னு ரோட்டுக்கு வந்து போராடுவான். ஆனா அதே சமயம் அந்தக் கல்விக்கடனை நல்லபடியா பயன்படுத்தி நல்ல வேலைல சேந்து அதைக்கட்டின பையன் இளிச்சவாயனாய்டுவான். மேலும் அவன் தம்பிக்கு கல்விக்கடன் கிடைக்காம போயிடும்.
ஆக... ஒரு தீர்வு தேடிப்போகும்போது எல்லாத்தரப்பும் இறங்கி வரணும். அரசாங்கம் ஒரு வரையறை வைக்கணும். 90 சதவீதத்துக்கு மேல் மார்க் வாங்கியிருக்கியா? ஏழையா? அப்ப எந்த காலேஜ்ல வேணும்னாலும் சேந்துக்க! நான் கல்விக்கட்டணத்தை பாத்துக்குறேன். நீபாட்டுக்கும் படிங்கணும்.
அடுத்து 70-90 எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கு வட்டியில்லாக்கடன் ! அடுத்த 10 வருஷத்தில் அதை அடைக்கணும்னு எந்த நிபந்தனையும் இல்லாம குடுக்கணும். ஒரே ஒரு நிபந்தனை..அதை கண்டிப்பா தள்ளுபடி பண்ணச்சொல்லி கேக்கமாட்டேன்னு சொல்லணும்.
அடுத்து 50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க ! நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..
ஆனா..என்ன ஒரு சோகம்னா...நோக்கத்தை விட்டுட்டு வேற ரூட்டைப்பிடிச்சுப்போய் எங்கயாவது முட்டிக்கிட்டு நிக்கிறதுதான் நம்ம நாட்டோட தலையெழுத்து...! கல்விக்கடன் தப்பிச்சுருமா என்ன?