தலைவா, வா! என்கிற
தலைமைப் பண்புகள் பற்றியதொரு புத்தகத்தை நண்பர் சுரேகா அவர்கள் அண்மையில் எழுதி உள்ளதாகக்
கூறி எனக்கொரு பிரதி அன்புப்பரிசாக அளித்தார்.
மதி நிலையம் பதிப்பித்துள்ள
இந்த புத்தகம் ரூ.80 மதிப்பு என்றாலும் ரூ.8000 மதிப்பு பெற்று, பயிலரங்கங்களில் பெறக்கூடிய
அறிவினை வழங்கும் ஒன்று என்று படிக்கத் தொடங்கியவுடன் புரியவில்லை.
'பார்க்கலாம் என்று
எடுப்பீர்கள். படித்துமுடித்துத்தான் எழுவீர்கள்' என்று நூலாசிரியரே வக்குமூலம் சொல்லிய்ருந்தாலும்..எனது
கருத்து வேறு. ஏனெனில் இது ஒன்று சுவாரஸ்யமான காதல், சமூக நூல் அல்ல!
நாம் பார்ப்பது சில படமாக இருக்கும். வெகுசில பாடமாக இருக்கும். ‘அபியும் நானும்’ படம் போல!
நாம் கேட்பது சில
பாட்டாக மட்டும் இருக்கும். சில..வெகுசில மீண்டும் மீண்டும் கேட்டு பிரமிக்க வைத்து
மனதில் ஓடும் மந்திரமாக மாறும். ‘ ’உயிரும் நீயே உடலும் நீயே’ போல.!
சில புத்தகங்களை
படித்து ரசிக்கலாம். ரசித்துப் படிக்கலாம் (யவன ராணி)
சில புத்தகங்களை படிக்கலாம். படித்துப் பாதுகாக்கலாம்.(பொன்னியின் செல்வன் போல, மிஸ்டர்
வேதாந்தம் போல )
சில புத்தகங்களை ரசித்துப் படித்து மகிழலாம் (வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை
கவிதை நூல் போல)
சில புத்தகங்களில் மெய் மறந்து போகலாம். ( பாலகுமாரன் நூல்கள்)
சில புத்தகங்கள் நம்மை ஆச்சர்யத்தில் வீழ்த்தும். (தலைமைச் செயலகம் – சுஜாதா)
சில புத்தகங்கள்
படித்து குறிப்புகளாக நாம் பயன்படுத்தலாம். (லேனா தமிழ்வாணனின் ஒருபக்கக் கட்டுரைகள்.)
ஆனால்.. தலைவா,வா!
எனும் இந்தப் புத்தகம்
-படித்து ரசிக்கவோ,
படித்து பாதுகாக்கவோ,
படித்து மகிழவோ,
படித்து மெய்சிலிர்க்கவோ,
படித்து முடித்து தூக்கி வைத்துவிடவோ
படித்து முடித்து ஆச்சர்யப்படவோ
அல்ல.!
இது-
படித்து
மீண்டும் படித்து,
புரிந்து தெளிந்து,
புரிந்து கொண்டதை பயிற்சி செய்து,
பயிற்சி செய்து பயனடைந்து,
பயனடைந்த ஆனந்தத்தில் பிறருக்கு பரிந்துரைக்கவும்
படித்துப் புரிந்து பயனடைந்து பின் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளவும்
பிறருக்கு வாங்கிப் பரிசளிக்கவும்
அவ்வப்போது எடுத்துப் பார்த்து தெளிவு (Clarify) செய்துகொள்ளவும் (Confirm)
இந்நூலில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக யுக்திகளைப் பின்பற்றி பயன்பெறவும் (Confirm ,
Adapt & Apply) வழிகாட்டுகிற ஒரு ‘வாழ்க்கைக் கையேடு’ எனலாம். (குறிப்பாக பன்னாட்டு
சிந்தனைகளை இந்நாட்டு வழியில் எடுத்துச் சொல்கிறது)
விக்னேஷோடு (இந்த
நூலில் வரும் கதாநாயகன் 1) படிப்பவரும், சந்திரமௌலி சாரிடம் (கதாநாயகன் 2) குருப்பயிற்சியில்
இணைகிறார்கள் என்பதுதான் படிப்பவர் உணராத உண்மை.
குருப்பயிற்சி
முடிந்தவுடன் விக்னேஷ் மட்டுமல்ல.. அவனோடு (இந்நூலில்) சேர்ந்து சக பணியாளர்களும் குருப்பெயர்ச்சியால்
அடுத்த நிலைக்கு முன்னேறுகிறார்கள். உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், இப்புத்தகம்
படிப்பவரும் தலைமைப் பண்புகள் மேம்பட்டு ‘குருப்பயிற்சியும், குருப்பெயர்ச்சியும்’
அடைகிறார்கள்.
One on One
Coaching பற்றிய இந்த புத்தகம் படிப்பவரும் Just For Rs.80/-க்கு ‘ Mentoring
& Coaching’ பயிற்சியை சான்றிதழின்றி செய்து
முடிக்கிறார்கள் என்பது மிகையல்ல!
இந்த புத்தகம்
படிக்கும்போது நண்பர் சுரேகாவின் நூல் இது என்ற உணர்வு மாறி ‘ அட! சுரேகா, எவ்வளவு
அழகாக, தெளிவாக, சுலபமாக நிர்வாக யுக்திகளை, கோட்பாடுகளை, செயல்திட்டங்களை முன் வைக்கிறார்.
GREAT! என்று இந்த அட்டைப்பட காலி நாற்காலியில்
அவரை உட்கார வைத்து ‘Thank you my coach’ என்று சொல்லவைத்துவிட்டது.
Friendly வாத்தியார்
சுரேகாவிற்கு சுற்றிப்போடவேண்டும். ! அறிவு தானமிட்டவர்!
நூல்களுக்கு ஒரு
சாபம் உண்டு! அதன் விலை என்பது Paper & Printing Cost in terms of ‘FORMS’ or
No. of Pages என்பதுதான் அது! உண்மையில் உள்ளே உள்ள Contents minimum விலை ரூ.8000/-
(Minimum) மதிப்புள்ளது. அந்த விஷயங்களைப் படித்து புரிந்து, பயன்பாடாக மாற்றினால்
நாம் பெறும் மதிப்பு ரூ.80,000 to 80 லட்சம்.!
உண்மை…! வெறும் புகழ்ச்சி அல்ல!
அரிதாக வெளிவரும்
இத்தகைய புத்தகங்கள் குறைந்தபட்சம் லட்சம் பிரதிகளை விற்பனையில் எட்டவேண்டும். ஒரு
ஆயிரம் பேராவது வெற்றியாளராக மாறவேண்டும். Thank you Surekaa Sir ! வயதில் மூத்தவன்
என்பதால் வாழ்த்துகிறேன். வாழ்க!
இந்த நூல் பற்றி..இது
என் மதிப்புரை.. வாழ்த்துரை..புகழுரை..அல்ல! பயன்பாடு அடைந்த ஒருவரின் நெஞ்சார்ந்த
நன்றியுரை..!
பணிவன்புடன்
பால சாண்டில்யன்
டாக்டர். பாலசாண்டில்யன்
M.S. M.S. Ph.D
Thought Leader / Transformation Coach / Consultant / Psychologist
CEO – Vision Unlimited – www.visionunlimited.in

