சமீப காலமா...பதிவுலகத்துல பாத்துக்கிட்டிருந்தேன்..ஒருத்தர் பதிவு போட்டுட்டு. அது சம்பந்தமா 4 பேரை தொடரச்சொல்றது !
அட..இது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இருக்கேன்னு பாத்தேன்.
ஆனா...வேடிக்கை பாத்தவனை கூத்தாடச்சொன்னமாதிரி...புதுகைத்தென்றல்..என்னைய இதுல இழுத்துவுட்டுப்புட்டாங்க!
சாதாரணமாவாவது ஏதாவது ரைம்ஸ் ஞாபகம் இருக்கும்! இப்ப சுத்தமா இல்லை! அப்துல் ரகுமான் ஒரு கவிதை எழுதியிருப்பாரு.
நான் மழைக்குக்கூட
பள்ளிக்கூடத்தில்
ஒதுங்கவில்லை!
ஒரு நாள் ஒதுங்க
நேரிட்டபோது கூட
மழையைத்தான்
ரசித்துக்கொண்டிருந்தேன்...!
அதுமாதிரி...எனக்கு இந்த pre-KG அனுபவமெல்லாம் கிடையாது. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு ..பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த பாட்டுக்கள்னா....!
1.தேனினிமையிலும்
ஏசுவின் நாமம்
திவ்யமதுரமாமே!
2. பெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே!
(ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்)
3. அதோ பார் ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு?
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு?
எழுதப்படிக்க சொன்னாரு!
( இதையும் எலியப்புடிக்க சொன்னாருன்னு மாத்திப்பாடி வாங்குப்பட்டிருக்கேன்)
4. இங்கிலீஷ் பாட்டு...?
ஜாக் அண்ட் ஜில்
வென்ட் அப் த ஹில்............தான்..( ஒரு பையனும் பொண்ணும் கையில ஒரு வாளியை வச்சுக்கிட்டு கிணத்துப்பக்கத்துல நிக்கிறமாதிரி படம் போட்டிருக்கும்)
இதுக்கே...மூளை கசங்கிப்போய்..அயர்ன் பண்றமாதிரி ஆகிடுச்சு..
அடுத்து யாரைக்கூப்புடறது?
ஏதாவது தள்ளுபடி உண்டுங்களா?
முயற்சி பண்றேன்.
1. தம்பி
2. ஸ்டாக் சிவா
3. துளசி கோபால்
4. குசும்பன்