அப்துல்லா என்ன செய்தார்?

28 Sep 2008 · சுரேகா சுந்தர்

எவ்வளவோ
கையில் இருந்தும்
செய்ய மனமில்லாதவர்கள் மத்தியில்
ஒரு சதுரங்க வீராங்கனைக்கு
சகஜமாக உதவிகள் செய்து
எங்கள் அத்துனை பேரின் மனத்திலும்
அழியா இடம்பிடிக்கும்
அப்துல்லாவே!

நீங்கள் என்றென்றும்
அன்புடன்
நட்புடன்
அளவில்லா செல்வத்துடன்
நீண்ட ஆயுளுடன்
நிறைவான மகிழ்ச்சியுடன்
ஆரோக்கிய உடல்நிலையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!

அத்தனை வாழ்க ! வும்
உங்களுக்காகவும்
இன்னும் உங்கள்
உதவிக்காகக்காத்திருக்கும்
இயலாதவர்களுக்காகவும்!

இறையருள் என்றும்
உங்களிடம் நிலைக்கட்டும்!
இயற்கையும் உங்களுக்கு
எல்லாமும் அளிக்கட்டும்!




நண்பர் புதுகை அப்துல்லா....
திராவிடமும், கம்யூனிசமும் என்ற
தலைப்பில் அற்புதமான கட்டுரை ஒன்றை
எழுதியிருந்தார்.
அதில் வெண்பூவின் பின்னூட்டத்தில்
இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிரதிபலிப்புதான் இந்தப்பதிவு!


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →