ஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்

22 Jul 2008 · சுரேகா சுந்தர்




இதெல்லாம் இங்க இருக்கும் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள்....ஆனா அலுவலகங்கள் !?  :(

இங்கு ஆயிரக்கணக்கான தாவரங்கள் வளர்ப்பதும், அதை ஆராய்ச்சி செய்வதும்..  தமிழகத்தில் பண்ணை வளத்தை பெருக்கவும் உருவாக்கப்பட்டு...இன்று இந்த அளவில் இருக்கு!

இதையெல்லாம் காணச்சகிக்காம அரசாங்கத்துக்கு ஒரு மாதிரியா லெட்டரும் போட்டு விட்டுட்டேன்.....!

அய்யா என்ன நினைச்சு ஒரு விஷயத்த ஆரம்பிக்கிறீங்க! அதை ஏன் அப்புறம் அம்போன்னு விட்டுடுறீங்க!  
எங்க அடுத்த தலைமுறையெல்லாம் இப்படி ஒரு பண்ணை 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதுன்னு வரலாறுல படிக்கவா? எவ்வளவு அழகான பகுதி! இதை இன்னும் மேம்படுத்தினா...இந்த மாவட்டத்துக்கான சுற்றுலா வருமானத்தை சர்வசாதாரணமா வாங்கித்தரும் போல இருக்கே!ன்னு புலம்பித்தள்ளிட்டேன்.

அவுங்களுக்கு போட்டோ எல்லாம் அனுப்பலை! கெடுத்தவுங்களுக்குத் தெரியாதா ...அதை எப்படிக்கெடுத்தோமுன்னு? அதை படம் போட்டு வேற விளக்கணுமாக்கும் !? :)

இதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையோட நிலைமை!

இதுதான் அந்த அழகான சாலை! (சூப்பரா பராமரிச்சிருக்க வேண்டியது ! )

ஆனா ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சுச்சு..!

அந்த அழகான அண்ணா பண்ணை
இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது..!
கடைசில பால் ஊத்தக்கூட ஆள் இல்லாம
போகப்போவுது!
அதுக்கு முன்னாடி ஏதாவது வைத்தியம் பாத்தாத்தான் உண்டு.!
இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா, 
இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க 
எல்லா கயவாளிக்கனவாண்களும் !
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →