முதல் பாகத்துல இதுதான் நடந்தது...!
ம்..சொல்லு...நைன் ...செவன்...எய்ட்....நைன்....போர்......ம்
அட...இந்த நம்பரோட ஆரம்ப நம்பரெல்லாம் நம்ப நம்பர் மாதிரியே இருக்கே...!ன்னு நினைச்சு வியக்க ஆரம்பிச்சேன். அடுத்த நம்பர் என்னவா இருக்கும்ன்னு லேசா .ஆரம்பிச்ச ஆர்வம் தீப்பிடிக்க ஆரம்பிச்சது...
சொல்லு..கேக்குது கேக்குது...! பீப்...பீப்...பீப்...
சார் சார்....ஒரு ரூபா காயின் இருக்குமா?
ட்டொய்ங்க்!
லைன் கட்டாயிடுச்சு!
அடக்கடவுளேன்னு சொல்லிக்கிட்டே...எக்ஸ்க்யூஸ்மீ சார்..ன்னு பக்கத்து ஜூஸ் கடைக்காரரிடம் அஞ்சு ரூபாய்க்கு ஒன் ருப்பீ காயின் குடுங்கன்னு கேட்டு வாங்கி...
மறுபடியும் முயற்சியைத்தொடர்ந்தார்...! ம்..மறுபடியும் சொல்லுப்பா... 97894....அப்புறம்..நைன்...மறுபடியும் நைனா..? சரி..சரி...செவன்..
அட...நம்ப சீரீஸ்லயே உள்ள ஆளா இருப்பார் போல இருக்கே...நமக்கும் இந்த நம்பர்லதானே வருது...கடைசி மூணு நம்பர் வேறவா இருக்கும்! ன்னு நினைச்சுக்கிட்டே கவனிக்க...
ஓ...பைவ்...த்ரீ...ஒன் னா....சரிப்பா..ரொம்ப தேங்ஸ்ப்பா...!
(இந்த இடத்தில் ஒண்ணு நினைச்சேன்...அதான் கடைசி பாரா...)
சார்.. ரொம்ப தேங்ஸ்ன்னாரு! அது கெடக்கட்டும் என்ன விஷயம் ன்னேன். ஒரு நம்பர் வாங்கினேன் சார்..!
அவரைச்சந்திக்கணு்ம்னாரு!
அதான் கேட்டேன் ...என்ன விஷயமா..ன்னேன்!
ஏன் சார் கேக்குறீங்க!
இல்ல...நீங்க பாக்க வந்தது என்னத்தான்...நீங்க வாங்கின நம்பர் என்னுதுதான்..!
_____________________________________________________________________________________
நான் இதைத்தான் நினைச்சேன்..
அடங்கொக்காமக்கா....இவ்வளவு நேரம் இவர் போராடி கேட்டு வாங்கினது என் நம்பரைத்தானா? என்னப் பாக்கத்தான் வந்திருக்காரா...?...உலகம் சுருங்கிருச்சுன்னு நினைச்சோம்...அதுக்காக இப்புடியா சுருங்கணும்?