Posts

Showing posts from July, 2008

கடைசி விருந்தாளி !

Image
சென்ற வாரம் ஒரு நாள் மிகச்சாதாரணமாய்த்தான் விடிந்தது . என் அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா...ஊரில் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். புதுக்கோட்டை போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டத்திற்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தைக் கொண்டு வரவேண்டுமென்று முயன்று , அதில் வெற்றியும் பெற்று—கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்த்தைத் தன் சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்கி , மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக்கி அந்தப்பகுதியில் சுமார் 120 பேருக்கு வேலையும் அளித்து கலக்கிக்கொண்டிருக்கிறார். வயது 32தான் ஆகிறது. எல்லாச்செயல்களிலும் ஒரு தெளிவு, பண விஷயத்தில் மிகவும் நேர்மை ஆகியவை நான் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கண்கூடாகக்கண்டது. யாருக்கும் பயப்படாமல் தன் மனதுக்குத்தோன்றியதை அப்படியே கூறும் விஷயத்தில் நாங்கள் இருவருமே ஒத்துப்போனதால் எங்கள் நட்பு நீடித்தது. குடும்பத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர்..! அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ....மனைவியிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அண்ணன்களிடம் மிகவும் மரியாதையாக , அன்பாக நடந்துகொளவார்... நல்ல வீடு ஒன்று தனக்காகக் கட்டவேண்டுமென்று நினைத்து ஆறு மாதத்துக்கு முன்னால் மிகுந்த பொருட்செ

எங்க ஸ்டைல் சோதனை!!!

நம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க!  அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு! ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை!    இந்த வீடியோவைப்பாருங்களேன்...! நாம ஏன் ஏறி நிக்கப்போறோம்? நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல் கேக்கறதுதான் ஞாபகத்துக்கு வருது!

இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!

புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை! புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது !   இம்மாவட்ட எல்லைக்குள் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்..புதுக்கோட்டை மாவட்டம் என்று தன் முகவரியில் போட்டுக்கொள்வதில்லை.    புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம்.   புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருக்கும் மாத்தூர் தொழிற்பேட்டையின் அனைத்து தொழிற்சால

ஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்

Image
இதெல்லாம் இங்க இருக்கும் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள்....ஆனா அலுவலகங்கள் !?  :( இங்கு ஆயிரக்கணக்கான தாவரங்கள் வளர்ப்பதும், அதை ஆராய்ச்சி செய்வதும்..  தமிழகத்தில் பண்ணை வளத்தை பெருக்கவும் உருவாக்கப்பட்டு...இன்று இந்த அளவில் இருக்கு! இதையெல்லாம் காணச்சகிக்காம அரசாங்கத்துக்கு ஒரு மாதிரியா லெட்டரும் போட்டு விட்டுட்டேன்.....! அய்யா என்ன நினைச்சு ஒரு விஷயத்த ஆரம்பிக்கிறீங்க! அதை ஏன் அப்புறம் அம்போன்னு விட்டுடுறீங்க!   எங்க அடுத்த தலைமுறையெல்லாம் இப்படி ஒரு பண்ணை 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதுன்னு வரலாறுல படிக்கவா? எவ்வளவு அழகான பகுதி! இதை இன்னும் மேம்படுத்தினா...இந்த மாவட்டத்துக்கான சுற்றுலா வருமானத்தை சர்வசாதாரணமா வாங்கித்தரும் போல இருக்கே!ன்னு புலம்பித்தள்ளிட்டேன். அவுங்களுக்கு போட்டோ எல்லாம் அனுப்பலை! கெடுத்தவுங்களுக்குத் தெரியாதா ...அதை எப்படிக்கெடுத்தோமுன்னு? அதை படம் போட்டு வேற விளக்கணுமாக்கும் !? :) இதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையோட நிலைமை! இதுதான் அந்த அழகான சாலை! (சூப்பரா பராமரிச்சிருக்க வேண்டியது ! ) ஆனா ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சுச்

ஒரு பண்ணையின் மரணப்படுக்கை

Image
   மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே   இருக்குன்னா   கன்னா   பின்னான்னு  வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு   முன்னாடி   தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு  பல்வேறு  பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட  குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு! (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி)  அது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு!  இனிமே இது வரண்ட மாவட்டமில்லை! வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க!  அண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.!  விவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது !  இங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட

இதோ வந்துட்டேன்...!

பதிவுலகத்துக்கு வணக்கம். இவ்வளவு இடைவெளி விழும்ன்னு நான் நினைக்கவே இல்லை! (நல்லவேளை தப்பிச்சீங்க) இந்தமாசம் பதிவு மாசம்தான்..! வாழ்வின் ஒரு மாத நிகழ்வுகள் நிறையவே ஆகிவிட்டது. பல்வேறு சந்திப்புகள் சில வெற்றிகள் பல நகைச்சுவைகள் கொஞ்சம் குமுறல்கள் நிறைய கருத்துக்களங்கள் குறைய தட்டிக்கேட்டல்கள் அதிலும் சில உடனடி வெற்றிகள் இரு ஜனனங்கள் பல மகிழ்ச்சிகள் என ஜூன்மாதம் உணர்வுகளால் நிறம்பி வழிந்தது. அது தந்த மயக்கமும், அயர்ச்சியும் எழுத விடவில்லை..! எல்லாம் முடிச்சு.... இதோ வந்துட்டேன்.