Posts

Showing posts from May, 2011

ஓமப்பொடி

Image
ஆச்சர்யம் # 1 கோ படத்தில், அஜ்மல் நடத்தும் அமைப்பின் பெயர் சிறகுகள், அது மாணவர்களை ஒருங்கிணைத்து நன்மை செய்வதாகச் சொல்லியிருப்பார்கள். உண்மையிலேயே, 2003ஆம் ஆண்டு புதுக்கோட்டையில், சிறகுகள் (WINGS – Winners and Ignitors of New Generation Society) என்ற அமைப்பைத் துவக்கி, மாணவர்களை ஒருங்கிணைத்து, நேர்மைதான் தாரகமந்திரம் என்ற நோக்கத்தில் ஒரு இயக்கமாக மாற்றி கிட்டத்தட்ட 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தேன். அதன் தலைமைப்பொறுப்பில் நாங்கள் 3 இளைஞர்கள் இருந்தோம். பள்ளிகளில் என் எஸ் எஸ், ரெட் ரிப்பன் கிளப் போல, சிறகுகள் அமைப்பையும் உருவாக்கினோம். அதற்கு வலைப்பூ கூட உருவாக்கினேன். இதோ  அதன் சுட்டி!  இரு வாரங்களுக்கு ஒருமுறை கூட்டம் கூடும். அதுவும், மாதிரி பாராளுமன்றமாக இருக்கும். மாதம் ஒருமுறை வங்கி, அஞ்சலகம், தாலுகா அலுவலகம் போன்ற அரசு நிறுவனங்களின் நடைமுறைகள் அந்தந்த அதிகாரிகளின் துணையோடு பயிற்றுவிக்கப்படும். நேர்மையான அரசியல் என்றால் என்ன? என்று கற்பிக்கப்படும். அரசியல் எவ்வளவு முக்கியம் என்று நாடகம் நடித்துக்காண்பிக்கப்படும். லஞ்சம் கொடுக

நாடா நினைவுகள் - தொடர்ச்சி....

Image
பின்னர் முதன்முறையாக வீட்டிற்கு ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டரை சித்தப்பா வாங்கி வந்தார்..,எம்.எஸ்ஸின் சுப்ரபாதம்,கந்தர் சஷ்டி கவசமும், ஒரு டி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் கலெக்‌ஷனும் , நினைவே ஒரு சங்கீதம், வேலைக்காரன் படப்பாடல்களையும் கேசட்டாக வாங்கி வந்திருந்தார். அதற்கு ஒரு துண்டைப்போட்டு மூடி ஒரு மேசையில் வைத்தபின் வீட்டுக்கே அழகு வந்தது. ஆஹா! நம் வீட்டிலும் கேசட் வந்துவிட்டது என்று புளகாங்கிதமடைந்தேன். வேலைக்காரன் படப்பாடல்கள் மொட்டை மனப்பாடம் ஆனது.! ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் –திருச்சி வானொலியில் – சூரியகாந்தி என்ற தலைப்பில் வரும் நாடகங்களைக் கேட்டுவிட்டு, சித்தப்பாவின் ஏற்பாட்டின்படி ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் பவ்யத்தோடு, ஒவ்வொருவரும் உள்ளறைக்குச் சென்று அந்த டேப் ரெக்கார்டரில் எங்கள் குரல் வளத்தைக்காட்டி பாட்டுப்பாடி பதிந்துவிட்டு வந்தோம். நண்டு சிண்டுகள் வரை அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் என் தங்கை பாடிய ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே….! ‘ சூப்பர் ஹிட்! பின்னர், வீட்டில் கேசட் புழக்கம் என்னால் அதிகரித்துவிட்டது. நண்பன் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து, ‘சம

நாடா நினைவுகள்

Image
     வீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட! என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்!” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது. பாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்! ஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை