Posts

Showing posts from 2014

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா ? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில் .. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை ... மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார் .... நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை ? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள் ? என்று !! என் நினைவு சரி என்றால் ... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி , 7 ஆண்டுகளுக்கு முன்னால் , மருத்துவ மாணவர்கள் போராடினார்கள் . . அதுவே போகட்டும் .. எனக்கு ஒரு சந்தேகம் ..!! எஞ்சினியர்கள்தான் .. எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? வக்கீல்கள்தான் ..   சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை ... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன ? இதைத்தான் நம்ம ஊரில் .. போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !! கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் ..!! சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்… எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

தொலையாமல் பேசுவோம்!

Image
இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பேசியில், எதிர்முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு! ‘ டாக்டர் !  எனக்கு ….   னு ஆரம்பிக்கும்போது ,   டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…         டாக்டர் !  எனக்கு   தினமும் …   கிறார்..! மறுபடியும்