Posts

Showing posts from January, 2010

சூப்பரா கீதுபா 2010!

சின்னச்சின்ன நிகழ்வுகளால் நிறைந்தது வாழ்நாள்! 2009 வெளியே போய்....அழகான 2010 ஐ அனுப்பி வைத்திருக்கிறது! போகும்போது அது பல விஷயங்களைச் செய்துவிட்டுச்சென்றிருக்கிறது. அதுவும் டிசம்பரில் ஆரம்பித்த ஆட்டம் இன்னும் முடியவில்லை. நட்பு விறுவிறுவென்று தன் எல்லையை பிரம்மாண்டமாக விரிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த கிறிஸ்துமஸுக்கு இரண்டாம் நாள், திருப்பூரில் பரிசல் கிருஷ்ணாவைச்சந்திக்க.. கூடவே ஈரவெங்காயம் சுவாமி, பேரரசன் செந்தில், முரளிகுமார் பத்மநாபன்,.நிகழ்காலத்தில் சிவா என அன்புசால் நண்பர் கூட்டம்!. அது மிகச்சிறந்த சந்திப்பாக அமைந்துவிட..அன்று நடந்த கூத்து யூ ட்யூபில்... சுரேகா என்றோ பரிசல் என்றோ தேடினாலே... வந்து நின்று லந்து செய்கிறது. நன்றி : பேரரசன் செந்தில் அடுத்து சென்னை புத்தகக்காட்சி.. வாசலிலேயே எனக்காகக் காத்திருந்து, இதை வாங்கலாம்.. இது வேண்டாம் என்று உரிமையுடன் அன்பு காட்டிய அப்துல்லாவை விட சிறந்த நட்பை யாரால் கொடுக்கமுடியும்? நண்பர் நர்சிம்முடன் செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் மிகவும் அன்பு பொருந்தியதாக இருந்தது. அதுவும் கார்னர் ஸ்டாலில் குடித்தோமே? அது பேரு என்ன பாஸு? சிறிது நேரமே இரு

நம்புங்க டீச்சர்! - 2

8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்.. தங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு..! அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி.. நம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார்! ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா? ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்.. நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போங்க! நான் பாத்துக்குறேன் என்றார். அடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார். தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று .. 'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு !' என்றார். அந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார். மேடம்..! நீங்க அந்த ரெண்

முதல் நாள்!

Image
காலப்பெட்டியின் ஒரு அடுக்கை திரும்பிப்பார்க்கவும் அடுத்த அடுக்குக்குள் நுழைந்து கொண்டு ஏதாவதுகளை அடைப்பதற்கும் எல்லோருக்கும் ஒரு நாள் தேவைப்படுகிறது! சென்ற ஆண்டின் தவறுகளுக்கும் வாழ்நாள் தவறுகளுக்கும் மூடுவிழா நடத்த எண்ணி முழுமூச்சாய் முடிவெடுக்க எல்லோருக்கும் ஒரு நாள் தேவைப்படுகிறது. இனிவரப்போகும் வாழ்க்கையின் வரையறைகளை நோக்கத்தோடு ஏற்றுக்கொள்ளவும் நோக்கத்தை மாற்றிக்கொள்ளவும் எல்லோருக்கும் ஒரு நாள் தேவைப்படுகிறது. நடு இரவை நாளின் முதலாய் நிறைய நாட்கள் பார்த்தாலும் உள்ளம் கவர்ந்தோரின் பிறந்தநாள் தவிர கொண்டாட்டம் நிறைந்த இரவாக்க எல்லோருக்கும் ஒரு நாள் தேவைப்படுகிறது. அந்த நாள் இந்த நாளாய் இந்த நாள் நம் சொந்த நாளாய் அமைந்திருத்தல் அன்பு காட்டவே! அன்புகாட்டிய அனைவருக்கும் நன்றியால் அன்பு சொல்லி.. அழகான ஆண்டு ஒன்று நம் மடியில் தவழ்கிறது. அன்புகொண்டு ஆராதிப்போம் அத்தனையும் வெற்றியாக!