Posts

Showing posts from August, 2008

கொள்(கை)ளைக் கோமான்கள்

வீட்டுக்குள் நுழைந்தபோது, தொலைக்காட்சியில் கலைஞர் அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது. அது விளம்பர இடைவேளை... ஒரு அறிவிப்பு பரபரப்பாக.....நமது கலைஞர் தொலைக்காட்சியில்.. செப்டம்பர் 3 விடுமுறையை முன்னிட்டு.... ப்ளா ப்ளா என்று பல்வேறு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பட்டியலிட்டார்கள். அது என்ன..செப்டம்பர் 3 விடுமுறைக்கு என்று ஒரு சிறப்புக்கொண்டாட்டம் என்று பார்த்தால் அன்று விநாயகர் சதுர்த்தியாம்..! அடேயப்பா என்ன ஒரு கலை(ஞர்) சாமர்த்தியம்! கடவுள் இல்லை எனும் இவர்களது கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்களாம்.ஆனால் அதே சமயம், சன் ட்டிவி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று பகிரங்கமாக அறிவித்து நிகழ்ச்சி நடத்தி சம்பாதிப்பதை தாங்கவும் முடியாது. அதனால் அன்று வரும் வருமானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாதாம். உண்மையில் கொள்கைவாதியாக இருந்தால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு நாள் நடப்பதைப்பற்றியே அலட்டிக்கொள்ளாமல் எப்பவும்போல கேவலமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுபோகவேண்டியதுதானே? இல்லை..! எங்க கட்சிக்கு மட்டும்தான் கடவுள் இல்லை ! ஹி.ஹி.அது எங்க அரசியல் ஓட்டுப்பிச்சைக்காரத்தனம்...எங்க ட்டிவிக்கு எல்லா சா

கால ஓட்டத்தில் காணாமல் போனவை !

அகில இந்திய வானொலி திருச்சிராப்பள்ளி ரெயின்போ பண்பலை 102.1 ல் தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை 'வசந்த அழைப்பு' ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றோம். ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து நேயர்களை அது சம்பந்தமா பேசச் சொல்றது. அழைக்கும் நேயர், அந்தத்தலைப்புக்கு ஏற்றார்ப்போல் பேசவேண்டும். இரண்டு மணிநேரம் போவதே தெரியாது. சரியா கலாய்க்கலாம். அப்படி நான் கொடுத்த தலைப்புகளில் சிலவற்றின்... என் துவக்க அறிமுகத்தை மட்டும் கொஞ்சம் பதிவா போடலாமேன்னு.. (வேற மேட்டரே இல்லையோ?) கால ஓட்டத்தில் காணாமல் போனவை ! அதெல்லாம் அந்தக்காலம்’ என்று அங்கலாய்க்கும் மனோபாவம் அனேகமாய் எல்லோருக்கும் ஆங்காங்கே வருவதுண்டு! அடிப்படைக்காரணமாய் சிறுவயதில் சிறப்பாக நீங்கள் பார்த்த ஒரு விஷயம் மாறிப்போய் வந்திருக்கும்! கால ஓட்டம் அதன் காரணமாய் கட்டாயம் இருந்திருக்கும்! எத்தனையோ ஆண்டுகள் உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு இப்போது திடீரெனறு இல்லாமல் போய்விட்ட அவ்விஷயம் உங்களுக்குள் தாக்கங்கள் தந்திருக்கும்! மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் மாறியவை என்னவென்று மறக்காமல் இருப்போம் ! வேப்பங்குச்சிகள் செய்துவந்த பல்விளக்கும் வேலைதன்னை பிரஷ்கள் தட்டிப

அதுக்காக இப்புடியா சுருங்கணும்? - பாகம் 2

முதல் பாகத்துல இதுதான் நடந்தது...! ம்..சொல்லு...நைன் ...செவன்...எய்ட்....நைன்....போர்......ம் அட...இந்த நம்பரோட ஆரம்ப நம்பரெல்லாம் நம்ப நம்பர் மாதிரியே இருக்கே...!ன்னு நினைச்சு வியக்க ஆரம்பிச்சேன். அடுத்த நம்பர் என்னவா இருக்கும்ன்னு லேசா .ஆரம்பிச்ச ஆர்வம் தீப்பிடிக்க ஆரம்பிச்சது... சொல்லு..கேக்குது கேக்குது...! பீப்...பீப்...பீப்... சார் சார்....ஒரு ரூபா காயின் இருக்குமா? ட்டொய்ங்க்! லைன் கட்டாயிடுச்சு! அடக்கடவுளேன்னு சொல்லிக்கிட்டே...எக்ஸ்க்யூஸ்மீ சார்..ன்னு பக்கத்து ஜூஸ் கடைக்காரரிடம் அஞ்சு ரூபாய்க்கு ஒன் ருப்பீ காயின் குடுங்கன்னு கேட்டு வாங்கி... மறுபடியும் முயற்சியைத்தொடர்ந்தார்...! ம்..மறுபடியும் சொல்லுப்பா... 97894....அப்புறம்..நைன்...மறுபடியும் நைனா..? சரி..சரி...செவன்.. அட...நம்ப சீரீஸ்லயே உள்ள ஆளா இருப்பார் போல இருக்கே...நமக்கும் இந்த நம்பர்லதானே வருது...கடைசி மூணு நம்பர் வேறவா இருக்கும்! ன்னு நினைச்சுக்கிட்டே கவனிக்க... ஓ...பைவ்...த்ரீ...ஒன் னா....சரிப்பா..ரொம்ப தேங்ஸ்ப்பா...! (இந்த இடத்தில் ஒண்ணு நினைச்சேன்...அதான் கடைசி பாரா...) சார்.. ரொம்ப தேங்ஸ்ன்னாரு! அது கெடக்கட்டும்

அதுக்காக இப்புடியா சுருங்கணும்?

அன்னிக்கு ஒரு வேலையா அந்த மாநகரத்தின் பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன். எல்லாரும் ஆளுக்கொரு செல்போன வச்சுக்கிட்டு அப்புடி என்னத்தத்தான் பேசுவாங்களோ.....பேசிக்கிட்டே இருந்தாங்க! ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு புக்குல படிச்ச விஷயம் ஞாபகத்துக்கு வந்தது..! அதாவது நாம பேசுற எல்லா ஒலிகளும் காத்துலதான் அலைஞ்சுக்கிட்டிருக்கு.. அந்த ஒலி அலைகளைத் தேடினா...ஏசுநாதர் பேசின விஷயங்களைக்கூட கண்டுபிடிச்சுடலாம்ன்னு போட்டிருந்தது.   ஆனா இப்ப காலம் போற போக்கப்பாத்தா...இந்த செல்போன் வந்தப்புறம் மக்கள் ஓவரா பேசித்தள்ளி...இந்த பிரபஞ்சம் , வான்வெளி...சூரியக்குடும்பம்ன்னு எங்கெல்லாம் ஒலி போகமுடியுமோ அங்கெல்லாமே போய் நம்ம பேசின பேச்செல்லாம் போய் அடைச்சுத்தள்ளியிருக்கும். அதிலயும்,   அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினா... அப்புறம்.... அப்புறம். ங்கிற வார்த்தை மட்டுமே எல்லாத்தையும் விட ஜாஸ்தியா இருக்கும்.   நம்மகிட்டயும் செல்போன் வச்சிருக்கோமே...! அதுவும் ஒரு நம்பருக்கு ரெண்டு நம்பரா...நாமளும் ஓவராத்தான் பேசித்தள்றோம்.. ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்குறவன்கிட்ட கூட இந்தப்பக்கத்திலேருந்து பத்து பைசா கால் தைரியத்துல எவ்வ

என் இனிய அந்தோணி முத்து..!

நீங்கள் சாதாரணமாகச் சொல்லிப்போன இந்தப்பதிவை என்னால்  இவ்வளவு நேரமாகியும் மறக்கமுடியவில்லை..! உங்கள் வலிகள் வாங்கவில்லை நான்! உங்கள் வரிகளை வாங்கி  அமர்ந்திருக்கிறேன்.! இந்தச்சிந்தனைக்கு எத்தனை மனிதம்  வேண்டுமென்று.. எண்ணி எண்ணி  மாய்ந்திருக்கிறேன். இவ்வளவு ஆழமாக வாழ்க்கை பார்த்த  உங்களுக்கு வாழ்வியல்  உதவிகளைச்செய்யவைத்து  மனிதம் வளர்க்கும் பெரியவர்களை  மனதில் வாங்கிக் கசிந்திருக்கிறேன். எறும்புகள் இப்படி ஒரு மனிதரை எப்போதும் சந்திக்கப்போவதில்லை! இனிமேலும் அவை கடிக்கும் இடம் அதற்கு கோவிலென்றுதான் வந்துபோகும்! வலிக்காக வலிகொடுக்கும் வாழ்க்கையை வலியற்ற வலியாக மாற்றிவிட்டீர்கள் அய்யா! யார் சொன்னார்கள் நீங்கள்  வாங்கப்பிறந்தவர் என்று...! நிறைய அள்ளிக்  கொடுக்கப்பிறந்தவர் நீங்கள் ! எறும்புகளுக்கு உணவையும்... எங்களுக்கு  தன்னம்பிக்கையையும்! நாங்கள்தான் வாங்கப்பிறந்திருக்கிறோம்..! வாழ்வின் நிதர்சனத்தையும் வலிகளின் ஏற்றலையும், எதிர்காலப்பிரகாசத்தையும் இதயமெல்லாம் உறுதியையும் அள்ளி அள்ளிக்கொடுங்கள் ! அசராமல் கொடுங்கள் ! வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று மார்தட்டிச்சொல்லுகிறோம் கொடுப்பது அந்தோணிமு