Posts

Showing posts from March, 2010

சுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி!

கடந்த சில நாட்களாக, மருந்துகள் கண்காணிப்புத்துறையும், சுகாதாரத்துறையும் மண்டை பிய்த்துக்கொண்டும், பிய்த்துக்கொள்ள வைத்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதற்குப்பின்னணியில் இவர்களது லஞ்ச ஆட்டம் இருப்பது வசதியாக மறைந்துவிடுகிறது. அந்த ஆற்றாமையுடன் திரியும்போது இன்று ஒரு விஷயம் வினையாற்றவைத்திருக்கிறது. சாராள் இல்லம் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். அதன் நிர்வாகி டைசன் மிகவும் சிரமத்துக்கிடையில் ஒரு வாடகை வீட்டில் அந்த இல்லத்தை நடத்திவருகிறார். இதற்கிடையில் சமூகநலத்துறையின் அங்கீகாரத்துக்காக , மற்ற துறைகளில் சான்றிதழ் வாங்கவேண்டும் என்று அவரிடம் அதிகாரிகள் கூற, ஒவ்வொரு துறையாக சுற்றிவந்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் லஞ்சம்! அது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு தனிமனிதரிடம் வாடகைக்கு இருக்கும் பலமாக உள்ள கட்டிடம் - இது உண்மை ' பலமாக உள்ளது ' என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சான்றிதழ் தர, ரூபாய் 1500/- ஒரே ஒரு கழிவறை உள்ளது. அனேகமாக எல்லாக்குழந்தைகளும் பக்கத்திலேயே உள்ள ஏரியைச்சுற்றியுள்ள கருவேலங்காட்டில் இயற்கை உபாதையைக்கழிக்கிறார்கள். - இது உண்மை! , இருபது கழிவறை உள்ளது

புன்னகைத் தூக்கு!

Image
ஊரோரப் புளியமரத்தில் தூக்கில் தொங்குவேன் நான் ! அழுதரற்றிக் கால்பிடித்து கழுத்திறுகல் உறுதிசெய்து என் இறப்பில் மகிழ்வான் அவன்! பக்கத்தில் கண்ணீருடன் பதைபதைப்பாள் அவள்! பத்தாம் நாள் காரியத்திற்கு பத்துநாள் இருக்கிறதே? அதுவரை அவள் வீட்டில் ராத்தங்க விடாமல் செய்துவிட்ட மகிழ்வொன்று புன்னகையாய் வெளிவந்து என் நாக்கை நீட்டும்!

'ஆனந்தி'யில் எதிரி!

Image
ஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தி யில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. படத்தை க்ளிக்கி பெரிதாகப்பார்க்கலாம். நான் எழுதி அனுப்பிய கட்டுரை: எதிரி மேலாண்மை நம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான்! அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான்.! ஒரு நாளின் அதிக நேரத்தை அவுங்களைப்பத்தின நினைப்புதான் எடுத்துக்கும்! ஆனா உண்மையா எதிரிங்கிறது யார்? உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம். ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க,

பொட்டண வட்டி

'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.'' நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்திலிருந்த டெடில் மிஷினை வைத்து அச்சகம் நடத்தி ,இன்றைய தேதிக்கு பிழைப்பது என்பது , பேப்பர் வெட்டும் இயந்திரத்தில் தலையைக்கொடுப்பதற்குச் சமம் என்று தெரிந்து போனது. சரி..இருக்கும் பொருட்களை விற்கலாம் என்றால், அதுவும் முடியாது, வேண்டுமானால் அச்சு எழுத்துக்களின் ஈயத்தையும் இரும்பையும் எடைக்கும், படக்கட்டைகளை குப்பைக்கும். எழுத்துக்களை வைத்திருந்த சிறு அறைகளாகப்பிரிக்கப்பட்ட பெட்டிகளை உடைப்பதற்கும்,அந்த பிரம்மாண்டமான லண்டனில் செய்யப்பட்ட , ராயல் சிம்பல் பொறித்த அச்சடிக்கும் எந்திரத்தை பழைய இரும்பு விற்கும் சுரேஷ் அண்ணனிடமும் கொடுக்கலாம். அதில் ஒரே மிச்சம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் , பெடலால் மிதித்து ஓட்ட முடியவில்லை என்பதற்காக பொருத்திய மோட்டார்.! அதையும் ஆயிரம்கூடப்பெறாது அண்ணே என்று எலக்ட்ரீஷியன் பாலு சொல்லிவிட்டான். நானும் பல்லைக்கடித்து இத்தனை ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். யாராவது ஒருவர் சிக்கினாலும் அவர்கள் கடன் சொல்லுவார்கள். அல்லது ஆப்செட்

பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!

காடுகளுக்குள் கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த எங்களினத்திற்கு கனிவுகாட்டி முரட்டுத்தனம் நீக்கி மென்மையாக்கி பாட்டிகளாய் தாயாய் சகோதரிகளாய் நண்பர்களாய் உறவினர்களாய் மகள்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் 2008ல் இருந்த பட்டியல் மற்றும் 2009 ம் ஆண்டு பட்டியல் போக.. நண்பர்கள் லாவண்யா கவிதாமோகன் ப்ரீத்தா லாரன் க்ரஹாம் ஆண்ட்ரியா கேத்தி தன்யாலா மஞ்சரி அனிதா சித்ரா ராமகிருஷ்ணன் டாக்டர் ஷர்மிளா கீர்த்தி சாவ்லா சுஹாஸினி பாரதி ஜோதி பதிவர்கள் தேனம்மை லக்‌ஷ்மணன் சாந்தி ல்க்‌ஷ்மணன் என வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்.. பெண்களே... பெண்மையே..! வாழ்க நீங்கள்!

நித்யானந்தாவும், நானும்..!

இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!