சாராள் இல்லம் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.
அதன் நிர்வாகி டைசன் மிகவும் சிரமத்துக்கிடையில் ஒரு வாடகை வீட்டில் அந்த இல்லத்தை நடத்திவருகிறார்.
இதற்கிடையில் சமூகநலத்துறையின் அங்கீகாரத்துக்காக , மற்ற துறைகளில் சான்றிதழ் வாங்கவேண்டும் என்று அவரிடம் அதிகாரிகள் கூற, ஒவ்வொரு துறையாக சுற்றிவந்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் லஞ்சம்!
அது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு தனிமனிதரிடம் வாடகைக்கு இருக்கும் பலமாக உள்ள கட்டிடம் - இது உண்மை
' பலமாக உள்ளது ' என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சான்றிதழ் தர, ரூபாய் 1500/-
ஒரே ஒரு கழிவறை உள்ளது. அனேகமாக எல்லாக்குழந்தைகளும் பக்கத்திலேயே உள்ள ஏரியைச்சுற்றியுள்ள கருவேலங்காட்டில் இயற்கை உபாதையைக்கழிக்கிறார்கள். - இது உண்மை!
, இருபது கழிவறை உள்ளது. நான் பார்த்தேன் என்று சுகாதாரத்துறை அதிகாரி சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000/-
ஆறு வாளிகளில் மண்ணும், நீரும் வைத்திருக்கிறார்கள் - இது உண்மை!
தீயணைப்பு வசதிகள் அனைத்தும் உள்ளன. fire extinguisher இரண்டு உள்ளது என்று சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000/-
அங்கு போர் வைத்து நீர் எடுத்து செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். - இது உண்மை!
அது நல்ல நீர்தான் , நீர் ஆதாரம் சிறப்பாக உள்ளது என்று சான்றிதழ் கொடுக்க ரூபாய் 500/-
இன்று நானும் ஊரில் இருந்ததால், அவர் என்னிடம் வந்து புலம்பினார். இவரை நீண்டநேரம் வலியுறுத்தி, நான் எப்போதும் எடுக்கும் லஞ்ச ஒழிப்பு ஆயுதத்தை, எடுத்து நாளை சுகாதார அதிகாரி பிடிபடப்போகிறார்.
என் முன்னிலையில், அவர் சுகாதார அதிகாரியிடம் பேசியது ...
0331182000.wav |
லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் பேசியது
0331185500.wav |
நாளைய செய்தி? - சுகாதாரத்துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது ! - அப்புறம் என்ன ஆகும்?.....
போலி மருந்துகளையும், மாத்திரைகளையும் உண்டு உயிரிழந்த எண்ணற்ற மனிதர்களுக்கு இவர்கள் செய்த துரோகத்துக்கு முன்னால்........ :(