Posts

Showing posts from November, 2007

வடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....

கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி கணிசமாய் வெங்காயம் சேர்த்து கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...! கவனமாய் உண்பீரே.! எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..! சமைக்கிறோமோ இல்லையோ நக்கல் நல்லா வருதுங்கோ...

தலை வெட்றதை பாக்குறீங்களா..?

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். நான் ஏதாவது காய் வாங்கி வரலாம்னு யான்பு அல் பஹாருக்குப் போனேன். காரை ஒரு மசூதிக்கிட்ட நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா ஒரே கூட்டம். எல்லாம் கச முசன்னு பேசிக்கிட்டிருந்தாங்க! நம்ம ஆள் ஒருத்தரிடம் கேட்டேன்: "என்னங்க கூட்டம்?" "தல வெட்டப் போறாங்களாம்" (என்னவோ முடி வெட்டப்போறது மாதிரி சொன்னார்). கொஞ்சம் அரண்டாலும், உள்ளே எட்டிப் பார்த்தேன்... ரெண்டு ஆட்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டி போட்டு வைக்கப்பட்டிருந்தாங்க.. மொத ஆள் கொஞ்சம் வயசானவர்...40-45ருக்கும். ரெண்டாவது ஆள் 30-35 வயசுள்ள வாலிபர். ஒரு குள்ளமான சௌதி ஒரு கடுதாசியை வச்சுப் படிச்சார்.. (என் ஒடைஞ்ச அரபை வச்சு புரிஞ்சிக்கிட்டேன்) "மொத ஆள் ஒரு பாகிஸ்தானி... பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு போதைப் பொருள் விற்கும்போது பிடிச்சோம். குற்றத்தை ஒத்துக்கிட்டான். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்துக்கு புதன்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப்போறோம். ஏதாவது ஆட்சேபனை உண்டா?" கூட்டம் உடனே, "இல்லை! இல்லை!" னு சத்தம் போட்டது! அடுத்து - குள்ளமான சௌதி ம

'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?

நமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல! சினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது ! (இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி ) மொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு.."மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு.. இவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே ! அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..! பிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க! நடக்குமா..? ஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க! குமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (ந