Posts

Showing posts from July, 2009

ஒலிப் பதிவு

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் திருச்சிராப்பள்ளி வானொலியில் ,இருபது வாரங்கள், ஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 8 மணிக்கு பேசிய 'தளராதே விழித்தெழு ' நிகழ்ச்சியிலிருந்து ஒரு துளி ! Get this widget | Track details | eSnips Social DNA பிடிச்சிருந்தா அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன். இல்லைன்னா ...விட்ருவோம் ! :)

அஜினோமோட்டோ அரக்கனா? அழகனா?

அஜினோமோட்டோ எனும் அரக்கன் என்ற பதிவில்..உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களைப்பற்றி நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் சொல்வது சரிதான்..! ஆனால்..இவர்கள் (அமெரிக்க உணவுக்கழகம் அல்லது அஜினோமோட்டோ நிறுவனம் ) கூறும் அளவில்தான் விளையாட்டே உள்ளது. ஒரு நாளைக்கு அல்லது, மனிதனின் மொத்த உடலுக்கு MSG எவ்வளவு தேவையென்று இவர்கள் அறுதியிடவில்லை.அப்படியே சில இடங்களில் கூறினாலும்..அந்த அளவை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதில்லை..ஏனெனில் அந்த அளவால் எந்தவொரு சுவை சேர்ப்பும் நடந்துவிடாது. மேலும்..அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் உணவுப்பழக்கம் உள்ள நம் நாட்டிற்கு இந்த வகை உணவுக்கலப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். 'கனியிருப்பக்காய் ஏன் கவருவானேன்' னு தான் சொன்னேன்! அதிகாரப்பூர்வமில்லாத, ஆனால் அரசியல் நிறைந்த ஒரு செய்தி கேள்விப்பட்டேன். சீனாவின் தயாரிப்பாக வரும் MSGக்கள்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றில்தான் நமக்கு சந்தேகமே.. ஏனெனில்..சீனாவிடம் இந்தியா தோற்காமலிருக்கும் ஒரு விஷயம் .மென்பொருட்கள். காரணம் நமது LOGICAL BRAIN..! இதனை அஜினமோட்டோவால் மழுங்கடிக்கமுடியும்...குழந்தையாய் இரு

நாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு

நாஞ்சில் நெஞ்சம் முதல் பாகம் இங்கே! ************************************************************************************* அது, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். நன்றாகப் படித்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று நினைத்த எனக்கு பெண்கள் சகவாசம் காதலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது. வகுப்பில் பலர் கல்யாணி, சுமதி, மஹாலெஷ்மி, ஜெயஸ்ரீ, கற்பகம், ராஜவேணி என்று நினைவில் நிற்கக்கூடியவர்களாக இருந்தனர். இவர்களில் ஒரு சிலர் நன்கு பேச, பழகக்கூடியவர்களாகவும், பணக்காரர்களாகவும், படிப்பைத்தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்குச் செயல்பாடுகளிலும் அதீத நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் ராஜவேணி மட்டும் ஒரு தீர்க்கமான பார்வையுடன், என்னுடைய பெண் வெர்ஷனாக இருந்தாள். எல்லோரிடமும் பழகுவாள். ஆனால் அதில் மிகச்சரியான கண்ணியம் இருக்கும்.! வகுப்பின் முதல் நாளில் ..லட்சியம் என்னவென்று பேராசிரியர் கேட்டதற்கு மிகத்துல்லியமாக பதில் சொன்ன சொற்பமானவர்களில் நாங்கள் இருவரும் இருந்தோம். எனக்கு என் லட்சியத்தைவிட..அவள் சொன்ன கலெக

நாஞ்சில் நெஞ்சம்

நாஞ்சில் நாடனின் எழுத்தைப் போலவே கொஞ்சம் இதமாகவும், இயல்பாகவும் வரவேற்றது நாகர்கோவில்.. அது அதிகாலை ஐந்து மணி. சாதாரணமாக ஏற்படும் வாய் வழுவலையும்..அதிகாலை தாகத்தையும் பின்னுக்குத்தள்ளி இதமான காற்றும் தூரலும்... கொஞ்சம் ரசனைக்கு முன்னிலை கொடுத்தது. சாலைகளின் வளைவுகளும், போக்குவரத்தின்மையும், மலை போல் மேடாகவும்...கீழ் நோக்கியும் செல்லும் பாதைகளும் ரசிக்க வைத்தன. இதற்கு முன்னால் நாஞ்சில் நாட்டிற்கு வந்தபோதெல்லாம்..அனேகமாக பகல் நேரங்களாகவே இருந்தன. மேலும் தங்கியதெல்லாம், கன்னியாகுமரியாக இருக்கும். எப்போது வெளியூர் சென்றாலும்..எனக்குக் கொஞ்சம் திமிர் அதிகம்.. எல்லா ஊரிலும் எனக்காக ஒரு விடுதியின் அறை காத்திருக்கும் என்ற மதர்ப்பில் மண்ணள்ளிப் போட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனோகரனின் மண். முதலில் பேருந்து நிலையத்திலிருந்து தேடல் தொடங்கியது. செல்ல வேண்டிய இடமான காவல்துறை உயர் அலுவலகம் வரை எங்கெங்கிலும் எனக்காகவே ' அறை இல்லை' என்ற சொல்லை அழகாக, வெவ்வேறு முறைகளில் சொன்னார்கள். கொஞ்சம் குளிர்சாதனம்... ஒரு நல்ல தொலைக்காட்சி... அதைவிட மூட்டைப்பூச்சிகளின் ம