Posts

Showing posts from August, 2013

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..!

ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு , அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு! திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். ! அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும் ? இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். முகத்திற்கு முகம் , இரக்கமே இல்லாமல் , நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும் , கூறலாம். ஆனால் , கண் எதிரே , ஆள் இல்லாத பொழுது , ஒருவரைப் பற்றி மட்டும் , இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார். மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல , ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்த