Posts

Showing posts from December, 2008

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100!

Image
உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே இந்திய வரைபடத்தை எந்த  மாநிலத்துக்காரர் பார்த்தாலும், அண்டை மாநிலத்தின் மீது சின்ன சினமாவது ஏற்படுவது தவிர்க்கமுடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆளவந்தானில் கமல் சொல்லுவார். ' அவ ரொம்ப நல்லவ' - அதை, உன் மனசாட்சிய விட்டு சொல்லச்சொல்லிப்பாருன்னு அவலட்சணமும்,அவ நம்பிக்கையும் நிறைந்த முகத்தை வைத்துக்கொண்டு! அதே மனநிலைதான் நம் தேசத்தைப்பற்றி  நினைக்கும்போதும் வரும் இயல்புக்கு இன்றைய சூழலில், நாம் வந்துவிட்டோம். வெள்ளையர்களை எதிர்த்தவரை தெரியாத மாநில நிறங்கள், இப்போது தெரிய ஆரம்பித்ததற்கு அடிப்படைக்காரணம் நமது இனவாத, மொழிவாத, பிரிவினைவாத அரசியல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பக்கத்து மாநிலக்காரன் வந்தால் , இங்கு இடம் கிடையாது என்று அடித்து விரட்டும் ஆட்களை வளர்த்துவிடும் வரைக்கும் எதுவும் தெரியாததுபோல் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசின் செயலில் இருக்கும் அஹிம்சை எத்தனை சதவீதம் ? அணையின் உயரத்தை கொஞ்சம் கூட உயர்த்திக்கொள்ளக்கூடாது என்றும

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் !

Image
உண்மையில், மனதில் உறுத்திக்கொண்டிருந்தவற்றை கொட்டிவிடும் அவசரத்தை குறைத்து, நிதானமாக எழுத யத்தனித்து இன்று வெளிப்படுகிறது. இதுவுமே அவசரமோ என்றுதான் மனம் நினைக்கிறது. (இந்திய அரசைவிட மெத்தனம் இல்லை!) ஆனாலும் தெகா கொடுத்த கொக்கி இத்துப்போய்விடக்கூடாது என்பதால்.....இதோ..! இந்தியாவில் ஏன் இந்தத்தீவிரவாதம்..? இதை நான் உலக அரசியல், தேச அரசியல், அரசு, தனிமனிதன் என்ற வகையில் அலச விரும்புகிறேன். (இடையில் துளசி டீச்சர் கேட்டிருந்த இயல்பான கேள்விகளையும் உள்ளம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.) உலகளாவிய அளவில், எங்குமே ஒரு உள்ளார்ந்த வெறுப்பு புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு தேசமும் அதனதன் வழியில் வெளிப்படுத்தவே செய்கின்றன. ஆப்கனில் ஒசாமா இருக்கிறார். அவரைப்பிடிக்கவேண்டுமென்று தான் வளர்த்த தாலிபனிடம் கேட்டுப்பிடிக்காமல், தன் நாட்டில் அவன் ஆட்கள் நுழைந்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவும், வீறுகொண்டு எழுந்து இன்றுவரை வேட்டையாடும் அமெரிக்காவின் செயலில் எந்த வகை மிதவாதம் இருந்தது?  உலகத்தை அழிக்கும் ரசாயன ஆயுதத்தை- "ஒளிச்சுவச்சிருக்கான்..நான் பாத்தேன்" என்று கூறும் மூன்றாம் வகுப்பு மாணவனைப்போல், உலக

இயற்கை கொடையினைக்காப்போம் -3

Image
நிலத்திலெல்லாம் நோயே விஞ்சும்! நீருக்கெல்லாம் உயிர்கள் கெஞ்சும்! காற்றுக்காட்டில் கனலே மிஞ்சும் வான் மண்டலம் வழியின்றி அஞ்சும்! சுவாசத்தில் விஷமே துஞ்சும்! நெருப்பு மட்டுமே உடலைக் கொஞ்சும் ! சூடு அதிகம் ஆகுமென்று கொஞ்சம்கூடக் கலங்கவேண்டாம்.! கடல்மட்டம் உயர்ந்துவந்து நீருக்குள்ளே வெதுவெதுப்பாய் மூச்சுத்திணறி மூழ்கிச்சாவோம்.! நம் வீட்டுப்பெரியவர்  ஒருவர் நலமாக இருக்கின்றார் நல்வாழ்க்கை நமக்காக நயமாகத்தருகின்றார். அவருக்கும் அகவைகள் ஆக ஆக அவர் சதை பிய்த்தெடுத்து ஆசைமகனுக்குக்கொடுப்போமா? அவர் கண்கள் கொய்தெடுத்து கல்லாங்காய் ஆடுவோமா? அவர் கால்கள் கொண்டுவந்து கட்டில் கால் ஆக்குவோமா? அவர் கைகள் ஆய்ந்துவந்து அரிவாள்கள் செய்வோமா? நல்லவேளை இன்றுவரை நாம் அதனைச்செய்யவில்லை! என்று மட்டும் பூரிக்காதீர்கள்! எப்போதோ அச்செயலை செய்ய நாம் தொடங்கிவிட்டோம். இத்தனை கோடி ஆண்டுகளாய் எடுத்து வளர்த்த இயற்கையை கந்தலாக்கிக் காயவிட்டு கண்களையும் நோண்டிவிட்டு கர்ப்பப்பையை பொசுக்கிவிட்டு சிந்தையில்லாம நாமும் சில்லறைகள் சேர்க்கின்றோம் ! என்னதான் செய்வதிங்கே! இப்படியே உலகம் நிற்க? நிலம் காக்கும் யோசனைக்காய் நெருடுவதைச

இயற்கை கொடையினைக்காப்போம் -2

Image
வளரும் வரை இவனும் வானம் பார்த்து மகிழ்ந்தான் மழையைக்கண்டு முகிழ்ந்தான். கிடைத்த உணவை பயிரிட்டு காட்டுக்குள்ளே திரிந்தான். வயிற்றுக்குஎல்லாம் கிடைக்கும்  இவனுக்கு மூளைக்குக் கிடைக்காமல் மோதி மோதித் திமிர்ந்தான். ஆரம்பமானது வேட்டை! தேவைகள் போக இவன் சேர்க்க நினைத்த பண்டங்கள் இயற்கையின் உறுப்புக்கள்! வேட்டையாடும் விலங்கினத்தின் தோலுக்கும், கொம்புக்கும், தோற்றத்தில் பொலிவு கொண்ட மேல் கடைவாய்ப்பல்லுக்கும் ஆசைகள் அதிகமாகி, அளவுக்கும் மீறி வந்து அறுத்தெரிந்தான் இவன் வளர்ந்த பரிணாமத்தின் சங்கிலியை! இயற்கைக்கு அப்போதே இதயவலி கண்டது. நிலத்தின் ஆழம் தோண்டி, கனிமங்கள் கண்டெடுத்து, ஆயுதம் செய்து, வீடுகட்டி,  ஆபரணம் அழகுறப்பூட்டி, எரிபொருளும் கண்டெடுத்து எடுப்பாக ஊர்வலம் போய் பூமியின் உடலெங்கும்  பொறுப்பின்றிப் பொத்தலாக்கி  உவகையுடன் மெத்தையிட்டான். நீரினில் கழிவு சேர்த்து, நெடுந்தூரம் ஓடவிட்டு பாரெங்கும் அதனை ஆறென்று சொல்லவைத்து மீன்கள் செத்து மிதந்ததை மட்டும் மிச்சமின்றி துடைத்துவிட்டான். மரங்களைக் கொன்றுவிட்டு மழையில்லை என்று வேண்டி பெரும்பொருள் செலவு செய்து வேள்விகள் மூலம் மட்டும்  புகைக்கூட்டம்

இயற்கை கொடையினைக் காப்போம் !

Image
இயற்கையில் இழந்ததையும் இழந்ததில் இருப்பதையும் இருப்பதில் காப்பதையும் காப்பதில் வாழ்வதையும், வாழ்வதில் மடிவதையும் மடிவதில் முடிவதையும் பயத்துடன் பகிர்கின்றேன். அண்டத்தின் பெருவெடிப்பும் பூகோளப்பிறப்பெடுப்பும் புவியியல் புத்தகத்தில் எப்போதோ கண்டதுண்டு! பிறந்தபின் பூமியும்  தன்னைத்தானே செதுக்கியது. நெருப்புடனே பிறந்துவந்து காற்று கண்டு நிலத்தைக் கண்டு காலம் கடந்து நீரைக்கண்டு உயிரினங்கள் ஒன்றிரண்டை ஓடியாட வைப்பதற்குள் களைத்துப்போன  இயற்கைக்கு அப்போதே வயது எழுபது கோடி! வாழ்வியல் ஓட்டத்தில் இருப்பியலின் தாக்கத்தில் தேவைகளின் மாற்றத்தில் ஒன்றையொன்று சார்ந்துவந்து உயிரினங்கள் பெருகின! பெருகிய உயிரினங்களில் நடந்து வந்து பேசி நின்று மூளையெனும் ஆயுதத்தை முழுமையாகக் கண்டுணர்ந்து சிந்தித்து செயல்புரிந்து சிறப்பாக நம்மைக்காப்பான் என்றெண்ணி இயற்கையும் மனிதனென்ற உயிரினத்தை மமதையுடன் படைத்துவிட்டு மார்தட்டி நின்றது! வந்திறங்கியவன் வஞ்சகன் என்றறியா பித்துமனம் கொண்ட பேதைத்தாய் இயற்கையும் பெருஞ்செல்வம் அவனுக்கு பூமியெங்கும் தந்துவிட்டு பொறுமை காத்து வந்தது  ! (வழக்கம்போல தொடரும்..!)

இப்படியும் நடக்கலாம் ...!

Image
அது ஒரு தொடர்வண்டி நிலையம்! அவன் எங்கோ போகவேண்டும் அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப! திருமணம் ஆன புதிது! விட்டுச்செல்ல மனமில்லை! விலகி இருக்கவும் திறனில்லை! கண்கள் கலங்கவும், கைகள் நடுங்கவும், ஒருவரை ஒருவர்  உயிராய் உருகி ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள். அந்தச்சிறு அணைப்பிலேயே அழுத்தம் கொடுத்து சொல்லுகிறான். கவலைப்படாதே! நிறைய நாட்களில்லை! சீக்கிரம் வந்துவிடுவேன்.! நீங்கள் செல்வதே எனக்கு நரகம்தான்! அப்புறம் என்ன  கொஞ்சம் ,நிறைய ? கண்ணீர் உகுத்து கரைகிறாள் அவள்! வண்டி புறப்படும் நேரம் வர மனமின்றி அவனும் ஏறி விட புறப்பட்ட வண்டியையே நீர் படரப் பார்க்கிறாள்! அவ்விடத்திலேயே நின்று ஆசுவாசப்படுத்த, வண்டியும் சென்றுவிட.. அதிசயமாய் எதிரில் பெட்டியுடன் அவன்! ஓடிப்போய் முத்துகிறாள்! என்னவனே! இவ்வளவு காதலா? என்னைவிட மனமிலையா? நான் என்ன தவம் செய்தேன்? இப்படி நீ இருப்பதால்தான் இதயம் முழுதும் நிறைகின்றாய் ! இறுக்கமான முகத்துடன் அவன் சொன்னான்..! அதெல்லாம் சரி! வண்டியின் டிக்கெட்டை உன் பைக்குள் வைத்திருக்கிறாய் ! இனியெப்படி போவது?