Posts

Showing posts from August, 2012

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1

Image
சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான்   (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..)  என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.      பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது. ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார். ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார் ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார். சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார். ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார். ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார். ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு ஒளிப்பதிவாளர் , இயல்பாக எல்லோரிடமும் பழகி

வலைப்பதிவர் திருவிழா

Image
சந்திப்போம் வாருங்கள்!

இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !

Image
சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:    கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்

தலைவா, வா! - விமர்சனம்

Image
    தலைவா, வா! என்கிற தலைமைப் பண்புகள் பற்றியதொரு புத்தகத்தை நண்பர் சுரேகா அவர்கள் அண்மையில் எழுதி உள்ளதாகக் கூறி எனக்கொரு பிரதி அன்புப்பரிசாக அளித்தார்.     மதி நிலையம் பதிப்பித்துள்ள இந்த புத்தகம் ரூ.80 மதிப்பு என்றாலும் ரூ.8000 மதிப்பு பெற்று, பயிலரங்கங்களில் பெறக்கூடிய அறிவினை வழங்கும் ஒன்று என்று படிக்கத் தொடங்கியவுடன் புரியவில்லை.    'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்துமுடித்துத்தான் எழுவீர்கள்' என்று நூலாசிரியரே வக்குமூலம் சொல்லிய்ருந்தாலும்..எனது கருத்து வேறு. ஏனெனில் இது ஒன்று சுவாரஸ்யமான காதல், சமூக நூல் அல்ல!    நாம் பார்ப்பது சில படமாக இருக்கும். வெகுசில பாடமாக இருக்கும். ‘அபியும் நானும்’ படம் போல!    நாம் கேட்பது சில பாட்டாக மட்டும் இருக்கும். சில..வெகுசில மீண்டும் மீண்டும் கேட்டு பிரமிக்க வைத்து மனதில் ஓடும் மந்திரமாக மாறும். ‘ ’உயிரும் நீயே உடலும் நீயே’ போல.! சில புத்தகங்களை படித்து ரசிக்கலாம். ரசித்துப் படிக்கலாம் (யவன ராணி)  சில புத்தகங்களை படிக்கலாம். படித்துப் பாதுகாக்கலாம்.(பொன்னியின் செல்வன் போல, மிஸ்டர் வேதாந்தம் போல )