Posts

Showing posts from March, 2012

குதிரை(க்கொம்பு) யாவாரம்

Image
      சென்னையில் பள்ளிகள் தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!! தங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ, மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில், அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம். அது நாமாகக்கூட இருக்கலாம். ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க! உங்கள் நினைப்பு சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.       ஒரு தனியார் பள்ளியில், அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய் நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொட

ஓமப்பொடி # 4

Image
                         மின்வெட்டின் தாக்கம் காரணமாக,  ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.           எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :         சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.         அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.         முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.         போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !         எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!         கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வின

பெண்களே.. பெண்மையே! வாழ்க நீங்கள்!

Image
  எங்கள் வாழ்வில் அர்த்தம் சேர்த்து, எண்ணங்களில் ஏற்றம் சேர்க்கும் பெண்மையே , பெண்களே வாழ்க நீங்கள்…!! ஒவ்வொரு ஆண்டும் ( 2008 , 2009 , 2010 , 2011 ) பட்டியலில் உள்ளவர்களுக்கும்.... இந்த ஆண்டு நட்புகளாய் வந்த, லஷ்மி ராமகிருஷ்ணன் ஷாரதா ஷ்ருதி ஷ்ரயா கவிஞர் பத்மாவதி ஸ்ரீ புவனா ரேவதி மணிமேகலை ப்ரியா சௌம்யா கீர்த்தனா சத்யா சங்கீதா கல்பனா உமா பத்மநாபன் ராஜி ஆகியோருக்கும்.. இணைய நட்பாய்ப் பூத்த கயல்விழி ப்ரியா முரளி ஆகியோர் எந்நாளும் இன்பமாய், ஆரோக்கியமாய், இனிமையாய் வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !!  ( பதிவை… முன்னரே பதிவேற்றி தேதி மாற்றி schedule செய்ததின் விளைவு!! ஒரு நாள் தாமதமாக வெளியாகிறது…)