Posts

Showing posts from February, 2010

நன்றி நவிலல்!

இந்த வாரம் முழுமையும் எது எழுதினாலும் ரசித்து குறைகளோடு ஏற்று, வந்திருந்து வாழ்த்தி, அன்புகாட்டி அசத்தி, என்னுள்ளம் கொள்ளை கொண்ட பதிவுலக நண்பர்களுக்கு பணிவான நன்றிகள்! திடீரென்று இன்பம் தந்து திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு தலைவணங்கி நன்றிகள்! இனியென் எழுத்தில் ஏதேனும் மாற்றத்தை இயன்றவரை கொண்டுவந்து எடுத்திருக்கும் நற்பெயரை எப்போதும் தக்கவைப்பேன்.! வாசிப்பில் வளர்ந்தாலும் வாசிக்கும்படி வளர்வது பதிவுலகம் எனக்குத்தந்த பரிசாக எண்ணுகிறேன்! சென்ற ஏழுநாட்களும் எனக்கு வாரமல்ல! வரம்!

புதுக்கோட்டை

Image
புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள் மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று! இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்! நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டா

யான்பு அல் சினைய்யா

ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.! சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன். அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது. சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்

அறந்தாங்கி

என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :) என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்! காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும். அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும். நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி! வாணி தியேட்டர

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவைத்திருக்கும் ஊர்! என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர். நான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு! தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார்.! சிறிய கோவில்.! தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை! அங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.! அதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது! தென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு! கிரிக்கெட் ஆடக்கற்றுக்க

பொருள் ஒழுங்கு!

நம்ம மொத்த வாழ்நாள், சராசரியா 80 ஆண்டுகள்ன்னு வச்சுக்கிட்டா தூங்குறதில் சுமார் 30 ஆண்டுகள் போயிடும்! மீதமிருக்கும் 50 ஆண்டுகளில் நம்ப வேலை நேரமா சுமார் 15 ஆண்டுகள் போயிடும். அப்புறம் குளிக்க, சாப்பிட, சொந்த வேலைகள் பார்க்கன்னு தனித்தனியா கணக்குப்போட்டுக்கிட்டே வந்தா ஒவ்வொண்ணும் ஒரு கணிசமான இடத்தைப்பிடிச்சுக்கும். இந்த பட்டியலில் மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க! அது எது தெரியுமா? நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்! மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம். ஏன் இப்படி நடக்குது? ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை! ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு! செய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது! இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோ

அய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்குறிப்பு!

ஒரு சிறுகதைத்தொகுதியிலோ, ஒரு மாத, வாரப்பத்திரிக்கையிலோ புரட்டிக்கொண்டே வரும்போது ஒரு கதையைப்படிக்கிறோம். அது மிகவும் சுவையாக இருக்கிறது. உடனே அந்த எழுத்தாளர் யார் என்று பார்ப்போம். அவரைப்பற்றி நண்பர்களிடம் கேட்போம். அவர்களுக்கும் அவரைப்பற்றித்தெரிந்திருந்தால், அவர் எழுதிய மற்ற கதைகளைப்பற்றி தெரியவரும். அவற்றைத்தேடிப் படிக்க ஆரம்பிப்போம். பின்னர் அவர் எந்தப்புத்தகத்தில் எழுதினாலும், எதைப்புத்தகமாக எழுதினாலும் விரும்பி வாங்குவோம். அவரது படைப்புகளின் நடையைப்பற்றி சிலாகிப்போம். அவரை ஒரு நாள் சந்தித்து அவரது படைப்புகளைப்பற்றி பாராட்டியும் , கொஞ்சமாக விமர்சித்தும் பேசவேண்டும் என்று திட்டமிட்டு, அதே போல் ஒரு நாள் அவரைச் சந்தித்து, சிந்தித்ததில் பாதியளவாவது அவரிடம் பேசிவிட்டு, அந்த எழுத்தாளரை நேரில் சந்தித்தேன் என்று நண்பர்களிடம் கூறுவோம். பின்னர் (அவருக்கோ, நமக்கோ) பிடித்திருந்தால் அந்தச் சந்திப்பு நட்பாகத்தொடரும். இதுதான் பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் நடப்பது! பதிவுலகில் அது அப்படியே வேறு கோணம்! முதலில் ஒரு பதிவைப்படித்து, அது பிடித்ததால், அந்தப்பதிவருடன் நட்புக்கொண்டு, அந்த அன்பின் வெளிப்பா

சாராள் இல்லம்

அன்று குழந்தைகள் தினம்..! நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார். புதுக்கோட்டையில் இருக்கீங்களா? ஆமாம்! அப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா? பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்! சரி! பண்ணிட்டா போச்சு! ************************************************* தினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை! அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும்! ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட... அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று! தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்

கை கொடுக்கும் கை!

இலுப்பூர் பள்ளியில் என்னால் முடிந்தவரை படித்து இரண்டாவது அல்லது முதல் ரேங்க் எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ( ஆமாம்ப்பா ரொம்ப நல்லவன்ன்! னு ஓட்டப்புடாது! எனக்கு முதல் ரேங்க் குடுக்குறாங்கன்னா, கூட இருந்த பயபுள்ளைக எந்த லட்சணத்துல படிச்சிருக்குனு பாருங்க! ) எனக்கு அறிமுகமான நண்பன் சந்திரன். கெச்சலாக என்னைப்போலவே கொஞ்சம் டகால்ட்டி பேர்வழியாக இருந்ததால் ஒட்டிக்கொண்டோம். இருவரும், சேர்ந்தே திரிவோம். பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவேன். அவன் வீடு அருகில் இருந்தாலும், எனக்காக அவனும் சோறு கட்டிக்கொண்டு வருவான். நல்ல பேச்சாளன். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இருவரும் ஊர்க்கடைசியில் உள்ள ஊரணிக்கு சென்று சரி ஆட்டம் போட்டுவிட்டுபள்ளிக்குத் திரும்புவோம். சட்டையை மட்டும் கழட்டிவிட்டு குளிப்பதால்,டவுசர் ஈரம் நடந்து வரும்போதே காய்ந்துவிடும். அவர்களுக்கு பெரிய கல்லுப்பட்டறை இருந்தது. அங்கு சென்று அவன் முதலாளியாக நடந்துகொள்வதிலும், சின்ன முதலாளியின் நண்பனாக நான் நடந்துகொள்வதிலும் அல்ப சந்தோஷம் இருந்தது. அவனிடம்தான் செயற்கை வைரம் பட்

இலுப்பூர்

புதுக்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர்! இதுவும் நான் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஊர்! அப்போது தேர்வுநிலை பேரூராட்சி. இப்போது தாலுக்கா! (என்னமோ நம்ப வந்துட்டுப்போனாலே தாலுக்காவாக்கிடுறாங்க! :-) ) புதுக்கோட்டை, அன்னவாசல் வழியே ஊருக்குள் நுழையும்போது அரசு மருத்துவமனை, வலதுபுறம் அரசு மேல்நிலைப்பள்ளி, பின்னர் கடைவீதி. அதைத்தாண்டி இரண்டு ' ட ' வளைவுகளுக்குப்பிறகு நேரே சென்றால் விராலிமலை செல்லும் சாலையில் சிறிய பேருந்து நிலையம். அதன் பின்புறம் மிக நீளமான உடமான் குளம். பேருந்துநிலையம் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் ஊரின் கடைசி ஏரியாவான கோட்டைத்தெரு. அதை அடுத்து பிடாரி அம்மன் கோவில். அப்படியே சாலை மேடேறி விராலிமலை நோக்கிச் சென்றுவிடும். இலுப்பூரில் பள்ளிப்படிப்பு 3ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு வரை... அந்த நான்கு ஆண்டுகளும் மிகச்சிறந்த படிமங்களை ஞாபக அடுக்குகளில் விட்டுச்சென்றிருக்கின்றன. ஏனெனில் எனக்கு நூலகம் அறிமுகமானது அப்போதுதான்.! ஊரின் மிக முக்கியத்தொழில் செயற்கை வைரம் பட்டை தீட்டுவது...! 80களில் இலுப்பூர் இந்தத்தொழிலில் சக்கை போடு போட

ஞானாலயா

Image
புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது. அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :) அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வ

எனக்கு ஏன் இந்த தண்டனை?

Image
சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம். அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா? அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு! சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான். நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ? அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு! அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது! சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத! ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா? கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா! இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ! அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல! ஏய

மறைக்கிறான் சார்!

கறம்பக்குடி டி இ எல் சி தொடக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரேடியோவில், காலை 11.40க்கு கல்வி ஒலிபரப்பில் ஒவ்வொரு வகுப்புக்கும் பாடம் எடுப்பார்கள். அந்தப்பாடத்தை , அந்தந்த வகுப்புக்கு போட்டுக்காட்டுவதில், எங்கள் தலைமை ஆசிரியருக்கு அலாதி விருப்பம். அந்த கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்றுவரை ரேடியோவில் வந்துகொண்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நானே பலமுறை அந்த ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறேன். ரேடியோ இருந்தது தலைமை ஆசிரியர் அறையில். அது ஒரு மரப்பெட்டிபோல் இருக்கும் வால்வு ரேடியோ! தலைமை ஆசிரியர் அறை வாசலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். எந்த வகுப்புக்கு ரேடியோவில் பாடம் வருகிறதோ, அந்த வகுப்பு 11:30 மணிக்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர வேண்டும். அவர்களில் ஒரு பெரிய மாணவன் தான் சட்டாம்பிள்ளை.! ரேடியோ மெதுவாக தன் முனகலை ஆரம்பித்து...கனைத்து.. ' ஆல் இண்டியா ரேடியோ' என்று ஆரம்பிக்கும்போது நாங்கள் ஹோ வென்று கூச்சல் போட்டு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத

கறம்பக்குடி

புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்! விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தேர்வுநிலைப்பேரூராட்சியாக இருந்து, இப்போது தாலுகா தலைமையிடமாக மாறியிருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று! இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும் சிறிய நரியாற்றுப்பாலம்! அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில்! இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்! அவர் பெயர் சின்னக்கருப்பர்! இந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில்! அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.! புதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான்

எதிர்(ரி)வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. ஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது. இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும். அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும். தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்ல

போட்டுக்கொடுத்த பொடிப்பையன்

கலியாப்பட்டியிலிருந்து தினசரி மலையடிப்பட்டிக்கு பள்ளி செல்லும் நான் ஏதாவது கற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று நினைத்தேனா.. வீட்டுக்கு வந்தவுடன் என்னடா சொல்லிக்குடுத்தார்கள் என்று வீட்டில் கேட்கும் கேள்விக்கு பயந்தேனா.. என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஆசிரியரின் மீது கடுப்பு அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் எனக்கென்று எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை. ஒரே கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவாவும், ஒரு சிங்கம் நாலு மாடு கதையும் எனக்கு அலுப்புத்தட்டியிருக்கவேண்டும். அவரைப்பொறுத்தவரைக்கும் நான் லிஸ்ட்டிலேயே வராத பையன். ச்சும்மானாச்சுக்கும் பள்ளி வந்து செல்பவன். முக்கியமாக கிராம சேவக் மகன்! அவர் கொடுத்த மரியாதை, சக மாணவர்களிடத்திலிருந்தும் எனக்குக்கிட்டிய மமதையில் நான் திரிந்துகொண்டிருந்தேன். இப்படியாகப்பட்ட காலத்தில்தான், அந்த நாளில் பள்ளிக்கு Inspection என்ற பெயரில் ஒரு அதிகாரி வந்தார். அவரும் எல்லோரிடத்திலும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார். என்னிடத்தில் என்ன கேட்டார் என்று நினைவில்லை. ஆனால் நான் சொன்ன பதில்தான் இங்கே முக்கியம்..! ' சார்! இந்த

கலியாப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம். கலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர்! இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..! என் அப்பா ஒரு கிராம நல அலுவலர்! அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு! வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை! ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா...! வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring..! உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை! வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒர

ஓடுமீன் ஓட...

ஒரு நல்ல களம்.... முழுமையாக ஏழு நாட்கள். நீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும். கொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும். உங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும். இப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு! நண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன். சில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன். இல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன். ( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு! ) :-) எழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்.... உறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன். (ரொம்ப பெரிசா எதிர்பார்க்காதீங்க! சட்டியில இருக்குறதுதான் வரும் :) ) ஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் ! கலியாப்பட்டி ! போட்டுக்கொடுத்த பொடிப்பையன்! எதிர்(ரி)

ஆணாதிக்க மிச்சம்!

Image
பட்டுப்பாவாடையுடன் விளையாடிய போதும், தாவணியில் தாவி வந்த போதும், கணவனின் கைப்பிடித்து சுற்றி வந்த போதும் ஆனந்தமாய்ப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றாய்! அவன் போய்ச் சேர்ந்ததற்கும், அடுத்தடுத்து நடந்ததற்கும் நானும் வந்து உன்னுடன் அடுத்த தூணில் நின்றிருக்கலாம்! இது ஆணாதிக்க உச்சம்! நான் அதன் மிச்சம்! டிஸ்கி: இது நான் நேற்று ஒரு பிரபலமான கோவிலில் எடுத்த புகைப்படம். அந்தப் பாட்டியின் முகத்தை மறைக்கலாமென்று பார்த்தேன். ஆனால் செய்யவில்லை.இதைப்பார்த்து யாரவது அவள் சந்ததியிடம் சொல்லி, இனியாவது அவளை இயல்பான பெண்ணாக ஆக்குவார்கள் என்ற நப்பாசையுடன்...

மீண்டும் நரி!

Image
காலையிலிருந்து கிடைக்காத உணவுக்காக காடெங்கும் தேடிவிட்டு நிழலுக்கு நின்றிருந்த மரத்துக்கு காகமொன்று வந்தது. வாயினில் வடை! பாடச்சொல்லி நான் கேட்க, வடை எனக்கு அருகில்விழ, தயவு செய்து கொடுத்துவிடு! கேட்ட காகத்திடம் வந்து எடுத்துக்கொள் என்றேன். கீழே வந்த காகத்தை வினாடி பிசகாமல் அடித்து உண்டேன். எவன் தின்பான் வடையை? அதுவும் காகத்தின் எச்சிலை! டிஸ்கி: கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை, கவிதையா அரைச்சுப்பாத்தேன்...ஹி..ஹி..

பரிசலுக்கும்...கேபிளுக்கும்....!!

Image
சூப்பரா ஆரம்பிச்சிருக்கு பிப்ரவரி! எனக்கு பல வித மகிழ்ச்சிகள்! அதுக்கு பல காரணங்கள்! முதல் காரணம், ! நண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்! இதுதான் புத்தகங்கள்! மற்ற விபரங்களுக்கு.... இங்கே போய் கட்டாயம் பாருங்க! புத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! இது.. பரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்! கூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க! :)