Posts

Showing posts from December, 2009

2010ஏ வருக!

இந்த ஆண்டும் வாழ்வை வளமையாக்கும் இன்னொரு ஆண்டாக அமையட்டும். நல்ல நண்பர்கள் நல்ல குடும்பம் நல்ல வாசிப்பு நல்ல படைப்பு என எல்லாமே நம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்.. “The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.” - Robert Frost. 2 0 1 0 ஏ வருக..! உனக்கும் நிறைய வேலை இருக்கிறது!

நம்புங்க டீச்சர்!

அந்தத்தனியார் பள்ளியில் போய் 9ம் வகுப்பில் சேர்கிறார்கள் இரண்டு சிறுமிகள். முதல் நாள் ! முதல் வகுப்பு! ஆங்கில ஆசிரியை வருகிறார்.. அனேகமாக எல்லோரும் அந்தப்பள்ளியிலேயே 8ம் வகுப்பு படித்துவிட்டு 9ம் வகுப்புக்கு வரும் மாணவிகள். புதிதாகச்சேர்ந்த சொற்ப மாணவிகளை எழுந்து அறிமுகப்படுத்திக்கொள்ளச்சொல்கிறார் ஆசிரியை ! அதில் இந்த இருவரைத்தவிர மீதமுள்ளவர்கள் எல்லோரும் முன்னர் படித்ததாக,ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் முறை வரும்போது..எழுந்து தங்கள் பெயர் சொல்லிவிட்டு...8ம் வகுப்பு படித்தது...அரசு நடுநிலைப்பள்ளி என்று சொல்கிறார்கள். உடனே அந்த ஆசிரியை எகத்தாளமாக சிரிக்கிறார். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்துட்டு...எந்த நம்பிக்கைல இந்த் ஸ்கூல்ல வந்து சேந்த? எங்க ஸ்டாண்டர்ட் என்னன்னு தெரியுமா? இல்ல டீச்சர்..நாங்க நல்லா படிப்போம்.! ஆமா..கிழிச்சீங்க! எங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பாப்போம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்! ஆங்கில உயிரெழுத்துக்கள் எல்லாம் வர்ற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு! EDUCATION என்று பட்டென்று பதில் வருகிறது.. ஆமா.. இது மட்டும் சொல

கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...

கல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது.....! ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! இடையிடையே எனது விளக்கம் மட்டும்.... ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி.... என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல. வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது. இதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்...! :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள். கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது! அடுத்ததாக, நம்முடைய

கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3

கல்விக்கடன் ஏன் ?...கல்வி என்ன ஆச்சுன்னு முதல்ல இங்கயும் ...அடுத்து இங்கயும் இருக்கு.. இப்ப வங்கிகள் பக்கம் வருவோம். ப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு! ஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை! எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்..! அதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலையில் பொறுப்பு விழுந்துச்சு! அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை! அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க! ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க ! இதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக

கல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2

கல்விக்கடன் குடுக்குறதே ஒருவிதமான கடனாளியாக்கும் தன்மைன்னு முதல் பகுதில சொல்லியிருந்தேன். உண்மையிலேயே ஒரு மாணவன் நல்லா படிக்கிறான். அவன் குடும்பமே அவன் படிப்பால் சிறப்படையும்னு தெரியும்போது, அரசாங்கம் அவனுக்கு , இலவசக்கல்வியைத்தான் கொடுக்கணும். கடனை இல்லை. இப்படிக்கொடுக்குறதால , பெரிசா பயனடையப்போறது தனியார் கல்லூரிகள்தான்..! அல்லது.. அவனுக்கு கடன் கொடுக்கும்போதே, பீஸை குறைச்சுக்கச்சொல்லி அந்தக் கல்லூரியை வலியுறுத்தலாம். ஆனா இது ரெண்டுமே பண்ணாம, தனக்குன்னு ஒரு அளவுகோல் வச்சிக்கிட்டு கடன் கொடுத்து , மறுபடியும் மக்களை தள்ளுபடி எதிர்பாக்குறவுங்களா ஆக்குது அரசாங்கம்! சரி...யாராவது ஒருத்தர்தான் இதுக்கு காரணம்னா.. அதுவும் சொல்ல முடியலை! இப்ப முதல்ல...கல்வியை எடுத்துக்குவோம். இந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில்... தனியார் கல்லூரிகள் அதிகமாப்போச்சு! அரசுக்கல்லூரிகள் கொஞ்சமாத்தான் இருக்கு! அதுவும் பாடாவதியா இருக்கு! நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது, எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கலை...தனியாருக்கு போகலாம்னா, எங்க ஏரியாவில் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரிதான்.. அது

கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்

இரு வாரங்களுக்கு முன்பு நீயா? நானா? வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன். மாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க! வங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க! கடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா கொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெல்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' ! அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இ

சுகம் எங்கே? காண்டேகரின் யுக்திகள்!

சுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்... கதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது. கடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர். பல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார். எடுத்துக்காட்டாக... முத்தண்ணா கூறுகிறார்... ' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..! ஆனந்தன் தொடங்குகிறார். ஒன்பது வருஷங்கள் ! ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப

'ஆனந்த' மகிழ்ச்சி!

Image
இன்று ஒரு ஆனந்தம்..! என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது. இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான். அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம். நன்றி நண்பர்களே !

சுகம் எங்கே?

Image
கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம். இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார். ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல். இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார். இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ! சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது. ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சம