Posts

செம்மரச் சந்தேகங்கள் !

Image
எத்தனையோ கேள்விகள் இடிக்கிறது !! செம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா? தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்? தாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா? அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...? 20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்? கீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா? பிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.? அதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள்? இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா?  சுட்டது எத்தனை காவலர்கள்?  அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா? ஒரு குற்றம் நடந்தால், அத...

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா ? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில் .. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை ... மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார் .... நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை ? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள் ? என்று !! என் நினைவு சரி என்றால் ... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி , 7 ஆண்டுகளுக்கு முன்னால் , மருத்துவ மாணவர்கள் போராடினார்கள் . . அதுவே போகட்டும் .. எனக்கு ஒரு சந்தேகம் ..!! எஞ்சினியர்கள்தான் .. எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? வக்கீல்கள்தான் ..   சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ? எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை ... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன ? இதைத்தான் நம்ம ஊரில் .. போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !! கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் ..!! சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்… எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்...