இது என்னங்க கூத்து...?

நம்ம ஊர் பக்கம் மொக்கச்சாமி மொக்கச்சாமின்னு ஒரு பையன்
இருக்காங்க..!

அவுக அப்பா பாவம்..ரொம்ப ஏழைப்பட்ட சீக்காளி..
அவன் +2ல நல்லா படிச்சுப்புட்டான்...அப்பா மாதிரி யாருக்கும் சீக்கு வரக்கூடாதுண்ணே..அதுக்காகவே டாக்டருக்குப் படிக்கிறேன்னு அரசாங்க மருத்துவக் கல்லூரில சேந்தாங்க..! படிச்சுட்டு என்னப்பு பண்ணுவன்னு...மேதாவித்தனமா நானும் கேக்க , நம்ம கிராமத்துல ஒரு ஆசுபத்திரி கட்டி சேவை (இடியாப்பம் இல்லங்கோ) செய்வேன்னு சொன்னாங்க..!

நானும் 'அடடா..என்ன ஒரு அக்கறையான புள்ளன்னு அகமகுந்து போயிருந்தேங்க..!

இடையில அவனப்பாக்கும்போது , அவனா வந்து பேசுவாங்க.. எப்புடி போகுது படிப்பெல்லாம்னு கேட்டா.உண்மையிலேயே நான் புண்ணியம் பண்ணிருக்கேண்ணே.பல பேரு லட்சக்கணக்குல செலவழிச்சு படிக்குற படிப்ப எனக்கு செல ஆயிரத்துலயே அரசாங்கம் குடுக்குதுண்ணே..மக்கள் கட்டுற வரிப்பணத்துலதாண்ணே நானெல்லாம் படிக்கிறேன்.. ஆனா..அதே
சலுகையை மார்க் வாங்கின ஒரே காரணத்துக்காகவும் கோட்டாலயும்
,சில டாக்டர் வீட்டு, பெரிய பணக்கார வீட்டு பசங்களும் அனுபவிச்சு
படிக்கிறாங்கண்ணே.. அதாண்ணே கொடுமை..! அப்டின்னு
பொலம்புவான்..!

இப்ப ஒருநாள், என் கெட்டநேரம்.. டிவி பாத்துக்கிட்டிருந்தேன்.. "ஆறரை ஆண்டு கால படிப்பாக மருத்துவப்படிப்பை மாற்றியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..!
ஒரு ஆண்டு கால கிராமப்புற சேவை அநாவசியம் என்று ஆர்ப்பாட்டம்..! "னு அந்த டிவிக்கார அம்மா புதுக்கவிதை மாதிரி சொன்னுச்சா...அப்புடியே ஒரு காலேஜ காட்ட, அதுல மாணவர்களெல்லாம் ஆவேசமா பேட்டி குடுக்க வர, மொதல்ல தாவி வந்தது... அட! நம்ம மொக்கச்சாமி..!
அவன் சொல்றான்....எங்களை வாழவிடாது இந்த அரசாங்கம்..! இத்தனை வருஷம் படிச்சுப்புட்டு கஷ்டப்படணுமா..? கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் உருவாக்கிப்புட்டு எங்க்ளை அனுப்புங்க...இந்த சட்டத்தை வாபஸ் பெறலைன்னா..சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் னு ஒரே சவுண்டு...!

அப்புடியே சாச்சுப்புட்டான்ங்க..!

எனக்கு சில சந்தேகங்கள்..! உங்களை மாதிரி சிந்திக்கிறவுங்கதான் தீத்துவைக்கணும்..

1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா?

2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..?

3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ ?

4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?

5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே  5, 6 வருஷம் ஆகும்ங்க..! அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர..! அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..?

6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க..? அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..?

அதவிட பெருங்கூத்து...நம்ம 'கிழக்குவாசல்' , 'சூர்யவம்ச'மெல்லாம்...ஏதோ காந்திக்கு கொடைபிடிக்கப்போறமாறி போயி..அந்த டாக்டர்..குறிப்பா புள்ளங்ககிட்ட கடலை போடுறது..!பாவம் கிராமத்து ஆளுகளுக்கு எப்புடி தெரியும்? இவங்கள்லாம் நம்ம பயக இல்லின்னு..!

அமைச்சர் அன்புமணி பதவிக்கு வந்தது வேணும்னா விமர்சனத்துக்குரியதா இருக்கலாம்..ஆனா அவரு ரொம்ப நல்லதுதாங்க பண்றாரு...
அவர புரிஞ்சுக்காத இந்த எடுபட்ட பயலுக..கிராமத்துக்கு (அட..அதுக்கு ரூபா 8000 சம்பளம் வேறயாம்) போய் வேலை பாக்க மாட்டேன்னா.. காலேஜ விட்டுட்டு ..........க்கு போகட்டுங்க.!  
அதுவும்  முழுசா ஒரு வருஷம் கிராமத்தில்  இருக்க வேண்டாமாம்...
முதல் நான்கு மாதங்கள் - மக்கள் தொடர்பு பயிற்ச்சி.. [கிராமம்]
இரண்டாம் நான்கு மாதங்கள் - மருத்துவ சோதனைப்பயிற்ச்சி [துணை நகரம்]
மூன்றாம் நான்கு மாதங்கள் - இறுதி கட்ட திறனாய்வு பயிற்ச்சி [நகரம்]
இப்பிடித்தான் ஒரு வ்ருஷம் கணக்காம்...!


அய்யா...அத விட பெரிய கூத்து.. அது இன்னும் சட்டமாகலையாம்....அதுக்கப்புறம் வெளில வந்து நின்னாலாவாவது பரவாயில்லயாம்..! அட படிச்ச கிறுக்கங்களா...!

ஆனா.. இந்த விஷயத்துல மட்டும் அரசாங்கம் எறங்கிப்போச்சு...அப்புறம் ஹவுஸ் சர்ஜனாவும் இருக்க மாட்டோம்னு போராட்டம் பண்ணுவாய்ங்க மொக்கச்சாமிங்க..!

ஒன்று மட்டும் நிச்சயம்.... அதிக சலுகைகள் காலப்போக்கில் உரிமைகளாக கையாளப்படும் அவல உலகில் இருக்கிறோம்..!

Comments

  1. நல்லாச் சொன்னீங்க.

    மனிதத்தன்மையோட இருக்க வேண்டிய மருத்துவர்கள், இப்போ அதை பணம் அள்ளும் மனதோடு மட்டுமே பார்க்கிறார்கள்.

    படிக்கும் காலத்திலேயே இப்படி!!

    ReplyDelete
  2. //நல்லாச் சொன்னீங்க.

    மனிதத்தன்மையோட இருக்க வேண்டிய மருத்துவர்கள், இப்போ அதை பணம் அள்ளும் மனதோடு மட்டுமே பார்க்கிறார்கள்.//


    ஆமாங்க.. இன்னும் நிறைய ஆதங்கம் இருக்கு..இப்போதைக்கு இது போதும்னுதான்...

    ReplyDelete
  3. 1)இல்ல
    2) கரீட்.
    3) இருக்கலாம்.
    4) 30 லட்சம் அதிகம். ஒரு 2 லட்சம் அதிக் பட்சம். அரசாங்கம் என்ன செலவு செய்யுது.? ஒரு உளுத்து போன ஹாஸ்டல்..
    5) ஆசை? யாருக்குத்தான் இல்லை.. எனினும், உங்களுக்கு ஒரு நோவு வாந்தால் இவிங்க ஏதாவது ஊசி போட்டாத்தானே சரியாகுது. உங்க வலிய குறைப்பதற்காகவாவது, கொஞ்சூண்டு மரியாதை கொடுத்திருக்கலாம்.(பரவாயில்லை. இதெல்லாம் கேட்டு சகஜம் ஆகிடுச்சு)
    6)கிராமது பக்கம் போகணும். அதுதான் சரி.


    மொக்கைசாமிக்கு ..
    வணக்கமுங்க....

    ReplyDelete
  4. நியாயமான கோபமாகத்தான் எனக்குப் படுது. கட்டாயமாக இந்த திட்டம் அமுல் படுத்தப்பட்டு, பணத்தோடு கொஞ்சம் ஈவிரக்கத்துடணும் நடந்து கொள்ள கற்றுக் கொடுப்பது பின்னாலில் நாட்டுக்கும், வீட்டுக்கும் நலம் பயக்கலாம்.

    குறைந்த பட்ச இரண்டு வருட முதுகலை பட்டப் படிப்புகளூக்கே ஒரு ஆறு மாதகால ஃபீல்ட் வொர்க் ஒரு சில படிப்புகளுக்கு இருக்கும் பொழுது இது போன்று உயிர் காக்கும் படிப்புகளுக்கு எவ்வளவு அனுபவம் கிட்ட வைக்க முடியுமோ அவ்வளவு கிட்டவைத்து வெளியேற்றுவது மிக்க நலம் எல்லோருக்கும்.

    ReplyDelete
  5. delphine said...

    //1)இல்ல
    2)கரீட்.
    3) இருக்கலாம்
    4) 30 லட்சம் அதிகமுங்க. ஒரு 2 லட்சம் ரூவா போதுமுங்க.. அப்படி என்னங்க அதிசயமா சலுகை கொடுக்குதுங்க இல்ல செலவு செய்யுதுங்க? ஒரு யுத்துப்போன ஆஸ்டலுங்கோ!//

    நன்றிங்க..(முதலில் இங்க வந்ததுக்கு..)
    வெளிப்படையா பேசுனதுக்கு...

    அதுக்கும் ஆசைப்பட்டுத்தானே இந்த பசங்க வாராங்க...!

    //கேட்பது அவங்க உரிமைதானுங்க.//

    அதைத்தான் நானும் சொல்றேன்.. அவுங்களை படிக்க அனுப்புன, எங்களை பாக்க வரச்சொல்லி கேக்கறதும் நம்ம உரிமைதானுங்களே..


    //ரொம்ப திட்டாதிங்கங்க... என்ன இருந்தாலும் உங்க வலிகளை போக்க நாங்க ஒரு அனாசின் மாதிரி செயல் படுகிறோமுங்க.//

    நம்ப புள்ளங்கங்கறதாலதான் இப்புடி..இல்லன்னா நாம ஏன் திட்டப்போறோம்..

    ReplyDelete
  6. //எனக்கென்னவோ அளவுக்கு அதிகமாக அவங்களை விமர்சிப்பதாக தோணுது.

    I think we can keep arguing for the sake of arguing. You will feel the pain of doing a medical course only when you go through it.//

    கடினம்தாங்க.. ஆனா.. கிராமத்துக்கு வர மறுப்பது ஏன்..? அதுதான் நான் கேட்டேன்.
    மேலும் இது எந்த விதத்திலும் யாரையும் சாடணும்னு போடலைங்க..
    என் ஆதங்கத்தைத்தான் போட்டேன்.

    ReplyDelete
  7. நேத்து எம்மா கஷ்டப்பட்டு நொட்டு நொட்டுன்னு கடினமா யோசிச்சு ஒரு பின்னூட்டம் எழுதி அனுப்பிருந்தேன் எங்கப்பா அது போனுச்சு...

    இனிமே தொலைஞ்சு போன அந்த எண்ணத்தை நான் எங்கேன்னு தேடி திரும்ப நான் இங்ஙன சொல்லி வைக்கிறது...

    ஞாபகம் வந்தா கண்டிப்பா தட்டி விடுறேன்... கருத்தை பரிமாறிக்கங்க ஆனா, மனஸ்தாபம் வேண்டாம்...

    ReplyDelete
  8. ஆங்ங்... ஞாபகம் வந்துருச்சு, அதனாலதான் ஓடியாந்தேன்....

    இதில சொல்லப்பட்டிருக்க கோபமான ஆனா நியாயமான வேண்டுதல்கள் சரியே ...இது போன்ற தியாரிடிகளாக மருத்துவப் படிப்பு படிச்சு வராவங்களுக்கு இந்த கட்டாய கிராம சேவைங்கிற பங்களிப்பு அவசியமின்னுதான் எனக்கும் தோணுது...

    பாருங்க ஒரு சில முதுகலை பட்டப் படிப்புகளுக்கே இரண்டு வருடங்களில் ஒரு ஆறு மாத காலம் ஃபீல்டு வொர்க் பண்ண வேண்டுமென காட்டாய முறை இருக்கும் பொழுது இது போன்ற உயிர் காக்கும் பொருப்பில் இருக்கும் படிப்புகளுக்கு கண்டிப்பாக ஃபீல்ட் அறிவு அவசியம்... அதுக்காக கிராமத்தாய்ங்களா லாப் எலியா சோதனை பண்ணி தொழில் கத்துக்கங்கன்னு சொல்ல வரலை, சேவை மனப்பான்மைய வளர்த்துக்கவும், பொறுமையின் மகத்துவம் அறியவும் இந்த இடைப்பட்ட காலம் உதவலாம்...

    ReplyDelete
  9. தெகாவிடமிருந்து மின்னஞ்சலில்...

    இந்தப் பதிவில் நியாயமானதொரு கோபம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த கிராம சேவைக்கென ஓதுக்கப்படும் ஒட்டு
    மொத்த ஒண்ணரை வருடங்கள் அவசியமானதொன்றுதானே? ஏன்
    செய்வதற்கு மறுக்கிறார்கள்?
    சதாரண ஒரு சில முதுகலை பட்டப் படிப்புகளூக்கே குறைந்தப் பட்சம் ஆறு மாதங்கள் ஃபீல்ட் வொர்க்குக்கு ஒதுக்கப் பட்டு தீதிஸ்
    சமர்பிக்கப் படும் சூழலில் இது போன்ற உயிர் காக்கும் படிப்பிற்கென
    எவ்வளவு ஃபீல்ட் சார்ந்த அனுபவம் சேகரிக்கப் படுகிறதோ அந்தளவிற்கு பின்னாலிள் அவருக்கு உதவலாமில்லையா? குறைந்த
    பட்சம் இந்த காலக் கட்டத்தில் நிதானமும், பொறுமையின் மாண்பும்
    விளங்கிக் கொள்ளவாவது இந்த கிராம சேவை உதவலாமென்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. எதுக்கு அவசரம்.

    அன்புடன்,

    தெகா.

    ReplyDelete
  10. //சதாரண ஒரு சில முதுகலை பட்டப் படிப்புகளூக்கே குறைந்தப் பட்சம் ஆறு மாதங்கள் ஃபீல்ட் வொர்க்குக்கு ஒதுக்கப் பட்டு தீதிஸ்
    சமர்பிக்கப் படும் சூழலில் இது போன்ற உயிர் காக்கும் படிப்பிற்கென
    எவ்வளவு ஃபீல்ட் சார்ந்த அனுபவம் சேகரிக்கப் படுகிறதோ அந்தளவிற்கு பின்னாலிள் அவருக்கு உதவலாமில்லையா? //

    ரொம்ப நன்றிங்க தெகா..

    நீங்க சொல்ற கோணம் நிரம்ப நியாயமாக உள்ளது..

    ReplyDelete
  11. Delphine says...
    //a doctors profession is still the noblest one,
    no matter how people take it. A healing can be done only by a physician.
    The doctors should be provided with basic amenities to work in the village. no, doubt money plays a BIG part!!//

    I agree with your view
    thats why i am telling this.!
    Really i am havin good sense on doctors. Normal Human being can do wrong. But the DOCTOR must not.
    becoz they are 2nd GOD.

    ReplyDelete
  12. Please see the following posts

    http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html
    http://bruno.penandscale.com/2007/11/compulsary-rural-service-for-doctors.html
    http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
    http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html
    http://osaichella.blogspot.com/2007/12/blog-post_13.html


    If you have any queries or doubts, leave a comment in http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

    and I am ready to explain
    ---
    Also Please tell how you find this scheme better than the scheme being followed by Tamil Nadu Government

    ReplyDelete
  13. நியாயமான கேள்விதான்!
    ஆனா இந்த கேள்விக்கான விடைகளா அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

    ReplyDelete
  14. சுரேகா,
    யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. மருத்துவ மாணவர்கள் பக்கம் நியாயம் இருக்குனு சொல்வது என்னனு தெளிவா சொல்லலாம்ல, சம்பளம் குறைவு, அங்கே வசதி இல்லை. இது தானா?

    2000-3000 த்துக்கு எல்லாம் சர்வ சிக்ஷா அபியான் என்ற திட்டத்தின் படி பல ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள் கிராமப்புறத்தில், அவர்கள் இப்படிக்கேட்டால் , அங்கே இருக்கும் பிள்ளைகள் படிப்பு என்னாகும்,அந்த ஆசிரியர்கள், குறைந்த சம்பளத்தில் ஒரு சேவையாக நினைத்து தானே பாடம் நடத்துகிறார்கள். நாளைக்கு இதே சிறுவர்கள் படித்து டாக்டர்கள் கூட ஆவார்கள்.அப்போது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பின் அருமை தெரியுமா? ஆனால் அதிகம் சம்பளம், கிராமத்தில் வசதி வேண்டும் என்பார்களா?

    அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.

    பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது பதிவில் சொல்லி இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. 1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா?

    No Idea

    2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..?

    No one is refusing to work in Villages. The problem is permanent job and proper pay

    3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ ?

    If they work for low pay, how can they repay their educational loans and feed their family. Did you ever think about this for a moment

    4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?

    Do that.....

    5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே 5, 6 வருஷம் ஆகும்ங்க..! அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர..! அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..?

    Why are you comparing cinema director with this.

    6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க..? அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..?

    Every one is ready. They are asking for a permanent job and proper training
    ---
    It seems that you are totally ignorant of the problem

    ReplyDelete
  16. //கடினம்தாங்க.. ஆனா.. கிராமத்துக்கு வர மறுப்பது ஏன்..? அதுதான் நான் கேட்டேன்.
    மேலும் இது எந்த விதத்திலும் யாரையும் சாடணும்னு போடலைங்க..
    என் ஆதங்கத்தைத்தான் போட்டேன்.
    //

    No one is refusing to come to villages

    You do not even know the basic problem, but just because you have a computer and net connection you think you have right to call others names.. Shame on you !!!

    ReplyDelete
  17. தம்பி சொன்னது....

    //அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.//

    அவுங்க சொல்றதுக்குத்தானே இத்தனை கூத்தும்..!
    நம்ம என்ன சொல்றோம்னுதாங்க அவுங்க கவனிக்கனும்.! :-)))

    ReplyDelete
  18. I'd like to mention one point very clearly, forget humanity or duty. No one, even this author could not(should not) work for the sake of others, but PRACTICING in a village is not for PUNISHING the students. Not even to SERVE the villagers.
    Look at it as a Profession, a Money earning PROFESSION, but, Doctors, you can do it for yourself, to develop your perfection.

    The reason for arguing is really an insane...
    How the hell could one accept that an EXPERIENCED doctor will be paid very less than a FRESHER!!!

    Another comment from one of the Comments...
    If every facility available in URBAN is provided in Village, then "WE"(doctors!!!) are ready to "SERVE" in Village... I don't know what to say about it. A comedy? An insane? A Serious Comment? Or just a Comment in Sake of Commenting?
    Rgd Mr. Mani, this is the only good, in his 4 yrs of Cabinet Ministry!!! Lets wish it to happen...

    ReplyDelete
  19. //பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது பதிவில் சொல்லி இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்.//

    வவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளார்

    WRONG FACT 1. The entire DME budget is for Students
    CORRECT FACT 1. The expenses of Anatomy, Physiology, Pharmac are for students (Education Subsidy). The rest are for patients (Health Subsidy). Proof --> http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html

    WRONG FACT 2. Duration of Medical Course in Russia is more
    CORRECT FACT 2. Duration of UG in Russia is same as in India. Duration of UG+PG in Russia is shorter than in India. Proof --> The same article cited by the blog author

    FACT 3. Cost of studying MBBS in Russia is More
    Clarification 3. Cost of studying any course in Russia (even LKG or 8th standard) is more because of the currency conversion and travel expenses
    ----
    No answers for my questions. This itself proves the hollowness of voval's claims. !!!!

    ReplyDelete
  20. //அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.//

    If you can answer my questions, you will understand the foolishness of this statements

    ReplyDelete
  21. 1.இல்லைதான்
    2.அதானே
    3.அப்படித்தான்போல
    4.அதுதான் சரி.நான் முதலில் ஒரு தனியார் நிறுவத்தில் பயிற்சியாளரா வேலைக்குச் சேர்ந்தபோது 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடச்சொன்னார்கள் - இடையில் வேலையிலிருந்து விலகிச்சென்றால் இவ்வளவு பணம் நிறுவனத்துகுத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று.
    5.அநியாயம்தான்
    6.அதானே.

    ReplyDelete
  22. Bruno said...

    //வவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளார்//


    அதுதான் அவர் பதிவில் உங்களுக்கு விளக்கமா பதில் சொல்லிட்டாரே..

    நீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.!

    ReplyDelete
  23. வவ்வால் said...


    //யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. //

    நன்றிங்க..!

    //அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.//

    அதுதான் சரி..! ஆனா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே..!

    தங்கள் வரவுக்கு நன்றிங்க..!

    ReplyDelete
  24. //நீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.!//
    Because he is also typing here.
    I want to correct his false propaganda.

    ReplyDelete
  25. சாமான்யன் சொன்னது..

    //அதுதான் சரி.நான் முதலில் ஒரு தனியார் நிறுவத்தில் பயிற்சியாளரா வேலைக்குச் சேர்ந்தபோது 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடச்சொன்னார்கள் - இடையில் வேலையிலிருந்து விலகிச்சென்றால் இவ்வளவு பணம் நிறுவனத்துகுத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று.//

    வாங்க..வருகைக்கு நன்றி !
    இவுங்க கிராமத்துக்கு போயிட்டு...நிரந்தரமாக்குன்னு போராடினா பரவாயில்ல!


    அடிக்கடி வந்து போங்க !

    ReplyDelete
  26. You seem to only scold others and call others names....

    SColding others is the easiest (and most indecent) thing to do on net ??

    Also Please tell how you find this scheme better than the scheme being followed by Tamil Nadu Government

    Why no answer for this ???

    ReplyDelete
  27. bruno said

    //Every one is ready. They are asking for a permanent job and proper training//

    அப்ப 5 1/2 வருசம் என்னத்த படிச்சாங்களாம்? நல்லா இருக்குங்க ???
    :-)))0)))

    It seems that you are totally ignorant of the problem

    அதுக்கு நான் இதப்பத்தி பதிவே போடாம இருந்திருப்பேனே..!

    ReplyDelete
  28. bruno said...

    //You do not even know the basic problem, but just because you have a computer and net connection you think you have right to call others names.. Shame on you !!!//


    //You seem to only scold others and call others names....

    SColding others is the easiest (and most indecent) thing to do on net ??//

    அய்யா..
    இதுதான் நீங்க...!

    ஒருத்தரோட கருத்துக்களை விமர்சிப்பதற்கு பதிலா, அவரையே விமர்சிப்பது..

    அப்புறம் அதைச் செய்யக்கூடாதுன்னு
    அவருக்கே சொல்றது..!

    முதலில் தமிழில் எழுதுங்க..!(ஆங்கிலத்தில் எழுதினா உங்க கோபம் கருத்தைமீறி, மனிதர்களிடத்தில் திரும்புவது தெரியாமலா போய்விடும்?)

    அப்புறம் அடுத்தவுங்களிடம் உங்க கருத்தை திணிக்காதீங்க..!
    உங்க கருத்துக்கள்தான் முடிவுன்னு நினைக்காதீங்க.!
    உங்கள் பக்க வாதங்கள் வைக்கப்படலாம்..அதுதான் சரின்னு
    முடிவெடுக்காதீங்க.!
    ஒரே விஷயத்துக்கு வெவ்வேற பதில்களை வற்புறுத்தாதீங்க!

    கொஞ்சம் மனிதாபிமானமா சிந்திங்க..!
    மருத்துவரபிமானியாவே இருக்காதீங்க..!

    தனி மனித விமர்சனத்தை நிறுத்துங்க.!

    நான் சொன்னது ஒரு கற்பனை பாத்திரம்..யாரையும் குறிப்பிட்டு தாக்கவே இல்லை.

    மேலும், முழுசா தெரிஞ்சாத்தான் ஒரு பிரச்னையில் இறங்கணும்னா.யாருமே எதுவுமே பேச முடியாது.அதுக்காக கிராமத்தானெல்லாம் 'டாக்டரய்யா' வாங்க எங்க ஊருக்குன்னு கெஞ்சும்போது இப்படி விளக்கம் கொடுக்காதீங்க..!

    பதில்சொல்லலைன்னா ஒண்ணும் தெரியலன்னு அவசரப்பட்டு திட்ட நினைக்காதீங்க!

    நானெல்லாம் சாதாரண ஆளு!

    உங்களைமாதிரி ருபீமெயில்ல எப்புடி சம்பாதிக்கிறதுன்னுல்லாம் தெரியாத தற்குறி.!

    நீங்கதான் ஆரம்பிக்கிறீங்க..!

    நல்லா இருங்க..!

    (மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க ! மனசு வலிச்சா மன்னிச்சுக்குங்க !)

    ReplyDelete
  29. சுரேகா,

    நான் எங்கேயும் இவரை குறையாக சொன்னதே இல்லை , ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கிறார் என்பார், சரி நீங்களாவது சரியா சொல்லுங்கனு திருப்பி கேட்டா இவரோட பதிவில இவர் எழுதிய பதிவே ஆதாரம் என்பார்! என்ன கொடுமை சார் இது.

    சரி இப்போ ஆதாரம்னு "we the people " பதிவை கொடுத்தாரா Proof --> http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.htmlஅங்கே போய் பார்த்தா இவர் போட்ட பின்னூட்டம் தான் ஆதாரம், அதை அங்கேவே தப்புனு நான் சொல்லியாச்சு, அங்கே அவர், இவர் பதிவையே ஆதாரமா காட்டி இருப்பார். சுத்தி சுத்தி அவர் சொன்னதே ஆதாரம்னு சொல்லிக்கிறார் :-))

    நீங்களே சொல்லுங்க இதுலாம் சின்னப்புள்ளத்தனமா இல்லை:-))

    இவர் சொன்னதில் இருந்த பலத்தவறான தகவல்களை நான் சுட்டிக்காட்டியதும், என்னை பொய்யர், இவர் பின்னூட்டங்களை நீக்க வேண்டும் .இனிமேல் வெளியிடக்கூடாது என்றே "we the people" இடம் சொல்கிறார். இப்படி தனி மனித தாக்குதல் செய்வது இவர் ஆனால் அடுத்தவர்களை நிறுத்த சொல்கிறார். என்னால் சிரிக்க முடியலை :-))

    நீங்க வேற தமிழில் எழுத சொல்லாதிங்க, நான் அப்படி தமிழில் எழுதுங்களேன், படிக்கவே முடியலை, அதுவும் எல்லாம் காபி ,பேஸ்ட், நாங்கலாம் கஷ்டப்பட்டு தமிழில் டைப் பண்ணலையானு கேட்டா, அவரோட "facts" க்கு பதில் சொல்ல முடியாம இப்படி சொல்றோம்னு சொல்றார்! :-)) சரி எப்படியோ எழுதி தொலைக்கட்டும்னு விட்டாச்சு அந்த மொழி பிரச்சினையை!

    ReplyDelete
  30. //(மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க ! மனசு வலிச்சா மன்னிச்சுக்குங்க !)//

    Same to you also.

    //மேலும், முழுசா தெரிஞ்சாத்தான் ஒரு பிரச்னையில் இறங்கணும்னா.யாருமே எதுவுமே பேச முடியாது.//
    முழுசா தெரியாமலேயே தப்பா பெசலாமா ??

    ஒருவர் ஆதாரத்துடன் அந்த தவறை சுட்டிக்காட்டும்போது ஏன் திருத்தக்கூடாது

    ReplyDelete
  31. Why is surekha permitting vovval's personal attacks over me in this blog, while not allowing my replies.

    This is clearly one sided.

    I have given proof for everything

    ReplyDelete
  32. //ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கிறார் என்பார், சரி நீங்களாவது சரியா சொல்லுங்கனு திருப்பி கேட்டா இவரோட பதிவில இவர் எழுதிய பதிவே ஆதாரம் என்பார்!//

    வவ்வால் அவர்கள் எனது சவாலை ஏற்றுக் கோண்டால், 714 கோடியில் நோயாளிககுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும், மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும் சரியான அளவு அளிக்க தயார்.

    அப்படி நான் ஆதாரம் அளித்தால், அதாவது DME Budget allotmentல் இருந்துதான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அதன் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து செலவு செய்யப்படுகிறது என்று ஆதாரம் அளித்தால், வவ்வால் மன்னிப்பு கேட்பாரா

    ஏன் அவர் இந்த சவாலிற்கு ஒத்துக்கொள்ளாமல் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்புகிறார்

    ReplyDelete
  33. The Eagle said..

    //but PRACTICING in a village is not for PUNISHING the students. Not even to SERVE the villagers.
    Look at it as a Profession, a Money earning PROFESSION, but, Doctors, you can do it for yourself, to develop your perfection.//

    thanks eagle.

    this what we are telling that,
    why these students are very much worried about the villages will be get affected by this scheme.?

    why dont they come to villages (accept to come is ????)and then ask for their rigths.(because still they are students)at this points even village people also stand behind them to fight.

    Even they are trying to make up anything., clearly visible that their selfishness.( Why the priveat college students are not ready to support them?)

    ReplyDelete
  34. வவ்வால் சொன்னது..

    //நீங்களே சொல்லுங்க இதுலாம் சின்னப்புள்ளத்தனமா இல்லை:-))//

    ஆமா..ஆமா..!

    //இப்படி தனி மனித தாக்குதல் செய்வது இவர் ஆனால் அடுத்தவர்களை நிறுத்த சொல்கிறார். என்னால் சிரிக்க முடியலை :-))//

    என்னால சிரிக்காம இருக்க முடியலை.!

    //நீங்க வேற தமிழில் எழுத சொல்லாதிங்க, //

    :-))))))))))
    தமிழ்நாட்டுல தமிழ்ல எழுதச்சொல்றது ஒரு குத்தமா..?


    அவர் விளக்கம் கொடுக்கறதை விட்டுட்டு..நம்ம பின்னூட்டங்களுக்கு பதில் எழுத ஆரம்பிச்சுட்டார்.
    என்ன பண்றது..
    இது ஆரோக்கியமா போற மாதிரி தெரியல.

    மேலும்..

    என் டாக்டர் நண்பர்கள் அனைவரும்.,
    இந்த முறையை ஆதரிக்கிறாங்க.!
    இந்த பதிவை அவர்களிடம்தான் முதலில் காட்டினேன்.

    ReplyDelete
  35. மருத்துவ மாணவர்களின் மனிதாபிமானபோர்வையை மட்டும்தான் நான் விமர்சனம் செய்தேன்.

    அதை ஏற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக யோசிப்பார்கள் என்றுதான்!

    இதை ஒட்டி பலப்பல கேள்விகள் மனதில்! ஆனால் இந்த கடுமை ஓயட்டும் என்று காத்திருக்கிறேன்.

    நன்றி!

    ReplyDelete
  36. //கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?//

    இது மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லா வெளினாடு செல்லும் இந்தியர்களுக்கும் கட்டாயப்ப்டுத்தப்படவேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !