மும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு!

ரொம்ப லேட்டா வர்றதுக்கு மன்னிக்கணும் ( இப்ப வரலைன்னு யாரு கவலைப்பட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?)

மும்பை மேரி ஜான் - இதுதான் படத்தோட பெயர்!

முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப்படிச்சுடுங்க!


ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சுரேஷாக வரும் கேக்கே மேனன். !

ஒவ்வொரு காட்சியிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கிறார். அதுவும், யூசுப்பை தேடும் காட்சிகளில், அவரது வீட்டுக்குப்போய், யூசுப்பின் அம்மாவிடம் பெயரை மாற்றிச்சொல்வதும், அவர்கள் கொடுக்கும் இனிப்பை வாங்கத்தயங்குவதும், அந்த சந்தின் வழியே செல்லும்போது ஏன் முகம்மது ரபி தான் கேட்பார்களா? கிஷோர்குமார் கேட்கமாட்டார்களா? என்று ஒவ்வொன்றிலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும்போதும், கடைசியாக யூசுப்பின் அன்பை 
மதித்து யதார்த்தமாக மனம் மாறும்போதும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


தாமஸாக வரும் இர்பான் கான்.!

மனிதருக்கு அப்படி ஒரு முகபாவத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. அந்த இயலாமை நிறைந்த குடும்பத்தலைவனாக ஜொலிக்கிறார். பெரிய ஷாப்பிங் மாலில் எஸ்கலேட்டரில் ஏறமுடியாமல் குழந்தையும், மனைவியும் தடுமாறி ஏறும் காட்சி, இன்றும் ஸ்பென்ஸரில் தடுமாறும் சில கிராமக்குடும்பங்களை கண்முன் நிறுத்துகிறது. தன் இயலாமையை மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும் அதே நேரம், வெடிகுண்டுப்புரளியை ஏற்படுத்தி ,அவர்களது அலறலையும், பீதியையும் கண்டு ரசிக்கும் குரூரமும் , என்னையை வெளில தள்ளினீங்கள்ல? இப்ப எப்புடி இந்தக்கட்டடத்தையே ஒரு ரூபாயில் அலறவைச்சேன்? ' என்று கேட்காமல் கேட்கும் முகபாவத்தில் கலக்கியிருக்கிறார்.

ரூபாலியாக வரும் சோஹா அலிகான்!

ரங் தே பஸந்தியில்....அவர் கூறும் 'மார் டாலோ ' எனும் அந்த ஒரு வசனத்தையே திரும்பத்திரும்ப பார்த்த ஆர்வம், இன்னும் என்னைவிட்டுப்போகவில்லை!  இதில் அவருக்கு சோக முகம்தான். ஆனாலும் தானே பேட்டிகொடுக்கவேண்டியிருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டோம் என்று  வெளிப்படுத்தும் அழுகையும், தன்னை நேயர்களுக்கு முன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் முயற்சியும், சோஹா - சோகவாக இருந்தாலும், நன்கு செய்திருக்கிறார்.


சுனிலாக வரும் விஜய் மௌரியா

நேர்மையான போலீஸாக வலம் வர எண்ணும்போதும், போதைப்பொருள் வைத்திருந்தவனைப்பிடித்தும், அவனை மேலதிகாரி விட்டுவிட , கோபத்தில் 
துடிக்கும்போதும் மிளிர்கிறார். தன்னால் ஒரு குற்றவாளியையும் பிடிக்கமுடியவில்லையே என்று கலக்கமடையும்போதும்,மனைவியிடம் பேசும்போதும் அவர் ஒரு மேடை நாடகத்தயாரிப்பு என்பதை வெளிச்சப்படுத்துகிறார். உள்ளத்தில் நேர்மையை மட்டுமே கொண்ட ஒரு 
போலிஸ்காரனுக்கு எப்படிக்கோபம் வரும் என்பதை அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார்.


நிகில் அகர்வாலாக வரும் மாதவன்.

மாதவனை ஒரு பொறுப்பில்லாத மனிதனாக, ஜாலியான ஆளாக நாம் இங்கு காட்டிக்கொண்டிருக்க, அங்கு அவரை மிகவும் நன்றாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் ப்ளாஸ்டிக் பையை பயன்படுத்தக்கூடாது என்று கடைக்காரருக்கு புத்தி சொல்வதில் 
இருந்து, ஒவ்வொரு இடத்திலும் அவரது சமூக அக்கறையை மிகவும் எளிமையாக காட்டியிருக்கிறார்கள். மாதவனும் - இதெல்லாம் எனக்கு சகஜம்- 
என்பதுபோல்தான் நடித்திருக்கிறார். அவர் முகத்தில் ஏற்படும் பீதி உண்மை எனவே தோன்றுகிறது. நண்பனிடம் வாதிடும்போதும், வெளிநாட்டு 
வாழ்க்கயைப்பற்றிய தன் பார்வையை வெளிப்படுத்தும்போதும் அழகாக நடித்திருக்கிறார். கடைசியில் மனதில் ஒரு பயமும், வெறுப்பும் கலந்த 
நிலையில் வேறு வழியே தெரியாமல் மீண்டும் ரயிலில் ஏறும் காட்சியில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். 


துக்காராம் பட்டீலாக வரும் பரேஷ் ராவல்

அய்யா! நீர் புலவர் ! என்று தருமி சொல்வதுபோல் ...அய்யா நீர் நடிகர்! என்று கத்த வேண்டும்போல் உள்ளது. உண்மையில் கொஞ்சம் குண்டான பரேஷ் ராவல் இந்தப்படத்துக்காக தன் எடையைக்குறைத்துக்கொண்டாராம்.  தானும் போலீஸில் சேர்ந்தபோது இப்படித்தான் நடந்தது என்று விளக்கிவிட்டு, மேலதிகாரி போதைப்பொருளை, இல்லையென்று மறுத்து அது சர்க்கரை என்று சொன்னதற்கு அப்படியென்றால் டீயில் போட்டுக்குடியுங்கள் என்று கூறிவிட்டு வந்ததை மிகவும் பொறுமையாக சுனிலிடம் விளக்கும்போதும், சுரேஷை வழியில் பார்த்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, அவருக்கு நிதர்சனத்தை உணர்த்தும்போதும் , கடைசியாக ஓய்வு பெறும் நாளில், தன் தந்தை தன்னைப்பற்றி சொன்னதையும், தான் இன்றுவரை போலீஸில் ஒரு பெரிய கேஸையும் பிடித்ததில்லை என்று சொல்லும் போதும் சிம்மாசனம் போட்டு அமர்கிறார். சுனிலிடம் அவர் காட்டும் அன்பில் நம்மையும் சேர்த்து வெல்கிறார்.


இயக்குநர் நிஷிகாந்த் காமத்

நிறைய திரைப்பட பழமைகளை உடைத்திருக்கிறார். முதலில் இயல்பான திரைக்கதை! கதாபாத்திரங்களை கதையின் ஓட்டத்திலேயே உலவ விட்டது. 
நாம் படத்தில் சந்திக்கும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எந்தத்தொடர்பும் இல்லாமல் இருப்பதை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டது- கதையின் 
தேவைக்கேற்ப பட்டீல், சுனில்,சுரேஷ், தாமஸ் இவர்களை ஒரு காட்சியில் மட்டும் ஒன்றாகக் காட்டிவிட்டு அந்தத்தொடர்பையும் எளிமையாக்கியது. 
குண்டுவைத்தவனை தேடுகிறேன் பேர்வழி என்று துப்பறியும் கதையாக மாற்றாமல் இருந்தது. பேரிடர் நேரும்போது இப்படித்தான் இருக்கவேண்டும் 
என்று கருத்துச்சொல்லி கலாய்க்காமல் இருந்தது. இயல்பாக சில மனிதர்களின் வாழ்க்கையை அவர்களது மனநிலையுடனே பார்த்து அதை எங்களையும் போகிறபோக்கில் பார்க்கவைத்தது.அனைத்து டப்பாத்தனங்களையும் ஓரங்கட்டியது ( டான்ஸ், சண்டை, பாட்டு ) வெல்டன் டைரக்டர் !இப்படிப்படமெடுங்கள் சார் ! எங்கள் ரசனையும் காலப்போக்கில் மாற்றிக்கொண்டு நாங்களும் இம்மாதிரிப்படங்களை ஆதரிக்கிறோம். இசை, 
ஒளிப்பதிவு என்று எல்லாமே உறுத்தலில்லாமல் இருப்பது அழகு!

இவ்வளவு அழகாக படைத்திருக்கும் ஒரு படைப்பின்மேல் அன்புதான் மேலிடுகிறது. குறைகளோட ஏத்துக்கிறதுதான் அன்பாமே! அப்புறம் என்னங்க!
சிறு சிறு குறைகள் இருந்தாலும், அதோட ஏத்துக்கிட்டு, பாராட்டுவோம்.

ஒரு நல்ல படைப்பைப்பார்த்த திருப்தியுடன்.....


Comments

  1. அருமையான பிறவி நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படத்திற்கான அழகான விமர்சனம்.. நன்றி சுரேகா!

    ReplyDelete
  2. மிக நேர்த்தியான விமர்சனம்.. ஆழ்ந்த பார்வை..

    இருமுறை படிக்கத்தூண்டிய வார்த்தைகள்!

    நர்சிம்

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த படம்...
    மிக அழகாக இயக்கி இருக்கிறார்...கடைசியில் "பாம்பே மேரி ஜான்" என்று வரும் பழைய பாடல் மிக அருமை ..முடிவில் மும்பை மக்களை பெருமை படுத்தும் ஒரு படம்...நாம் எப்போது நம் சென்னையை பெருமை படுத்தும் ஒரு படம் எடுக்கப்போகிறோம்????

    ReplyDelete
  4. //தமிழ் பிரியன் said...
    அருமையான பிறவி நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படத்திற்கான அழகான விமர்சனம்.. நன்றி சுரேகா!//


    வாங்க தமிழ்பிரியன்!
    மிக்க ந்ன்றிங்க!
    வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  5. // narsim said...
    மிக நேர்த்தியான விமர்சனம்.. ஆழ்ந்த பார்வை..

    இருமுறை படிக்கத்தூண்டிய வார்த்தைகள்! //

    வாங்க நர்சிம் சார்!

    மிக்க நன்றிகள்!
    எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்!

    ReplyDelete
  6. // kamal said...
    எனக்கு மிகவும் பிடித்த படம்...
    மிக அழகாக இயக்கி இருக்கிறார்...கடைசியில் "பாம்பே மேரி ஜான்" என்று வரும் பழைய பாடல் மிக அருமை ..முடிவில் மும்பை மக்களை பெருமை படுத்தும் ஒரு படம்...நாம் எப்போது நம் சென்னையை பெருமை படுத்தும் ஒரு படம் எடுக்கப்போகிறோம்????//


    வாங்க கமல்!
    முதல் வருகைக்கு நன்றி!
    ஆமாங்க...நல்ல வேளை! அந்தப்பாடலை குறிப்பிட மறந்துவிட்டேன்.
    சரியா நினைவுபடுத்தினீர்கள்.

    சென்னையைத்தானே .....பெருமைப்படுத்திடுவோம்.
    முதல்ல எல்லா இடத்திலும் மும்பை மாதிரி வரிசை முறையைக்கடைப்பிடித்துவிட்டு !

    :)

    ReplyDelete
  7. பதிவ படிக்கிறப்பவே ரொம்ப அருமையா இருக்கு சுரேகா கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்.

    ReplyDelete
  8. பதிவ படிக்கிறப்பவே ரொம்ப அருமையா இருக்கு சுரேகா கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்.

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  9. வாங்க கல்யாண மாப்பிளை !

    கண்டிப்பா மனைவியோட போய் பாருங்க!

    ReplyDelete
  10. // புதுகைத் தென்றல் said...
    பதிவ படிக்கிறப்பவே ரொம்ப அருமையா இருக்கு சுரேகா கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்.

    வழிமொழிகிறேன்//


    வாங்க...

    கண்டிப்பா பாத்துட்டு
    ஒரு பதிவும்
    போட்டுருங்க!
    :)

    ReplyDelete
  11. கண்டிப்பாக இந்த படத்தை பார்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !