ஓமப்பொடி # 3



சென்ற மாதம் திரையுலகப் பிரபலங்களை , கிரண்பேடியுடன் சந்திக்கவைத்து , யதார்த்தமான நிகழ்ச்சி ஒன்று இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. அதன்படி, சுவாரஸ்யமான, விளையாட்டான, அழுத்தமான சில கேள்விகள் அவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து, அன்புடன் கிரண்பேடி என்று பெயரிட்டு, ‘விஜய் டிவி’யில் இரு பாகங்களாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தோம். அதன்படி முதல் பாகம் சென்ற ஞாயிறு (13.11.2011) அன்று ஒளிபரப்பானது. அடுத்த பாகம் வரும் ஞாயிறு (20.11.2011) அன்று காலை 9:30க்கு வருகிறது. கிரண்பேடியைப்பற்றிய வித்தியாசமான தகவல்கள் ,அவர் மூலமாகவே, கேட்கும் வாய்ப்பிருக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
அதன் முன்னோட்டம்….இதோ!

 இந்நிகழ்ச்சியின் தலைப்புக் கணிணி வரைகலையை (TITLE GRAPHICS)  நமது பதிவர் சுகுமார் சுவாமிநாதன் செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!
                           ***

 சவால் சிறுகதைப்போட்டி -2011 முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். போட்டி நடுவர்களால், என் கதைக்குக் கொடுக்கப்பட்ட விமர்சனம் கீழே!

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   
வித்தியாசமான கதைக்களன்கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்நல்ல முயற்சிஆனால் முழுமையடையவில்லை.


மிக அழகாக, நேர்மையாக விமர்சித்திருக்கும் நடுவர் குழுவுக்கு உளமார்ந்த நன்றிகள்!,

போட்டியை நடத்திய பரிசல்காரனின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார்!, ஆதியின் பெயர் ஆதிமூலகிருஷ்ணன். இருவர் பெயரிலும் கிருஷ்ணன் இருப்பது ஒரு எதேச்சையான , ஆனால், அழகான ஒற்றுமை! அதைத்தான் ’கண்ணன்’ என்று எடுத்துக்கொண்டேன். அதேபோல், ஒரு கதையில், ஒரே பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பதும் வித்யாசமாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.  துப்பறிவதாகத்தான் கதை இருக்கவேண்டுமா என்று எண்ணியதின் விளைவு….. இப்படி வந்து நின்றது.!
’ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித் தோற்பது எவ்வளவோ மேல்’ என்ற நினைப்பில் கலந்துகொண்டதால்…...(சரி..சரி.. மீசையில் மண் ஒட்டலை..விடு! )
வெற்றிகரமாக போட்டியை நடத்திய நண்பர்கள் ஆதி மற்றும் பரிசலுக்கு வளமான வாழ்த்துக்கள்!!   
                         
                          ***

’அன்னா கரீனா’, -    டால்ஸ்டாய் - தமிழில் – தர்மராஜன். (Dharmarajan)

தமிழ் இலக்கிய வரலாறு, - டாக்டர் பூவண்ணன்

உயிர்த்தெழு! -             டாக்டர் தமிழ்நாகை

அகிலத்திற்கோர் அருட்கொடை (முகம்மது நபி) – டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானி

The Descent of Man, and Selection in Relation to Sex.  – டார்வின்


இவையெல்லாம் நான் கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்கள்… பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அனைத்து புத்தகங்களின் ஆசிரியர் பெயர்களும் தமிழில் ‘டா’ என்ற எழுத்தில் துவங்குகின்றன. இதை என்னவென்பது?  ஆங்கிலத்தில் ‘D’ என்று துவங்குவதாகவும் கொள்ளலாம். முதல் புத்தகத்தை எழுதியது தர்மராஜன் எனக்கொண்டால்…!

இவற்றில், அன்னா கரீனா – காட்சிகளும், சம்பவங்களும் புனைவுடன் பிணைத்து எழுதப்பட்ட பிரபலமான கதை!

தமிழ் இலக்கிய வரலாறு – ஒரு அதிவேக ராக்கெட்டில் , தமிழ் இலக்கியங்களைச் சுற்றிய அனுபவம்.!

உயிர்த்தெழு ! – இலங்கை இனவெறியையும், போராட்ட நிலைகளையும் புகைப்படங்களுடன், வரலாறாக முன்வைக்கும் ஆவணம்.

அகிலத்திற்கோர் அருட்கொடை – முகம்மது நபி அவர்களைப் புரிந்துகொள்ள, இயல்பான நடையில் எழுதப்பட்ட சிறந்த நூல்.!

டார்வினின் புத்தகம் , மனித இன வளர்ச்சிநிலைகள், பாலினக் கவர் சாகசங்கள், அது தொடர்பான மனநிலைகள் பற்றிய அவரது 2வது நூல்..! பின்னியிருக்கிறார் மனிதர்!
                     ***

கடந்த ஆறு மாதங்களாக, என் எண்ணுக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன.
‘சாமி நிகழ்ச்சி பாத்தேன்!. சாமி அப்பாயிண்ட்மெண்ட் வேணும்!’
‘இல்லீங்க அது நான் இல்லை!’
இது பொதுவான உரையாடல்… என்ன குழப்பமென்றால், ஒரு சாமியார், தனது தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் தொடர்புகொள்ளச் சொல்லும் எண்ணாக , என் எண் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடரத்தொடர, ஒரு அழைப்பின்போது நான்..

‘சாமிக்கிட்ட எதுக்கு உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணும்?

’நல்லா ஜாதகம் பாப்பாரு! அதான்! – எதிர்முனை.

ஓஹோ..அவரை நேர்ல பாத்து, முதல்ல தன் செல்போன் நம்பரை ஒழுங்கா பாக்கச்சொல்லுங்க! அப்புறம் ஜாதகம் பாக்கலாம்..!!

-    கட் -

”காசு செலவழித்து, அடுத்தவர் எண்ணைப் போடும் இவர்களையெல்லாம் சீக்கிரம் கூட்டிக்கொண்டுபோய் பக்கத்துல வச்சுக்க கறம்பக்குடி பெரிய கருப்பு சாமியோவ்!!”

                    ***

Comments

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !