Posts

Showing posts from July, 2012

நிட்டாலே புத்தி சொன்னார்..

Image
      எழுதி வைத்திருக்கும் கதையையோ, சில நிகழ்வுகளையோ, படித்த புத்தகத்தையோ பதிவாக்கலாம் என்றுதான் நானும் நினைப்பேன். ஆனால், அவற்றை முந்திக்கொண்டு இந்த விஷயங்கள் முன்னிலை பெறுகின்றன. ஏன் இதையே எழுத நினைக்கிறாய்? என்றபோது மனசாட்சி ஒரு நியாய தர்க்கத்தை எடுத்துவைத்தது. மற்றவை எல்லாம் ஒரு பகிர்தல்தான். ஆனால் இதை எழுதினால் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். ஆகவே இதையே எழுது…! உன்னையும்(!) நம்பி படிக்க வருபவர்களுக்கு ஒரு நியாயம் செய் என்றது. அது எனக்கும் சரியாகப் பட்டது.  ஆகவே… கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன். கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார். Dear All, I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a

பில்லா 2 – முதல் காட்சி!

Image
திடீரென்று அதிகாலை 7 மணி ஷோ பார்க்கும் வாய்ப்பு… ! கிளம்பு!…ஓடு…! பட்டாசை வேடிக்கை பார்..! பாலாபிஷேகத்தை போட்டோ எடு! ரசிகர்களின் ஆர்வம் கவனி! அவர்களின் சந்தோஷத்தை இரசி! என்று குதூகலமாக விடிந்தது இன்றைய காலை! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால், ஜாலியாகச் சென்று அமர்ந்தேன். ஹிந்தியிலிருந்து, தமிழுக்கு சூப்பர் ஸ்டாராக வந்து, மீண்டும் தமிழில் அஜீத்தால் மெருகேற்றப்பட்டு, பலமுறை கல்லா கட்டியவன் தான் இந்த பில்லா! இதுவரை, அந்த பில்லா எவ்வளவு மோசமானவன்…அவன் இறந்தபின் மற்றவர்களைப் பிடிக்க போலீஸ் என்ன யுக்தியைக் கையாணடது என்றுதான் பார்த்திருக்கிறோம். ஆனால்..யார் இந்த பில்லா? இவன் எங்கிருந்து வந்தான்? அவன் என்னன்னவெல்லாம் செய்து இவ்வளவு பெரிய டான் ஆனான்.. என்று பின்னோக்கிச் சென்றிருக்கும் கதைதான் இந்த பில்லா2 . டெக்னிக்கலி ஸ்பீக்கிங் இதற்கு பில்லா0 என்றோ பில்லா-1 (மைனஸ் ஒன்று) என்றோதான் பெயர் வைத்திருக்கவேண்டும். J முதல் காட்சியின், முதல் ஃப்ரேமிலேயே அஜீத் வந்துவிடுகிறார்.( என் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கைகளை விரித்துக்கொண்டு ‘

Why ஜி?

Image
கல்வியை வியாபாரமாக்கியது இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு. ஆனால் சாபத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நகரங்களில், நல்ல பள்ளிகள் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் பத்து பள்ளிகளில்தான் தன் குழந்தைகள் சேரவேண்டும் என்று எல்லோரும் போராடுகிறார்கள்.(றோம்.) (றேன்). அந்தப் பள்ளிகள் எந்த அளவுக்கு கல்வியைக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஐ.ஐ.டி கனவுடன் வளர்க்கப்பட்டு, அதற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டதாய் நினைத்துக்கொண்டு, அடுத்த தெரு போஸ்ட் ஆபீஸில் மணி ஆர்டர் அனுப்பத்தெரியாதவனாய் வளர்கிறான். அமிஞ்சிக்கரைக்கு ஆட்டோக்காரரிடம் பேரம் பேசி போகத்தெரியாதவனாய் வளர்கிறான். வெண்டைக்காயை தரம்பார்த்து வாங்கத்தெரியாதவனாய், உறவினர்களில், யாரை என்ன சொந்தம் சொல்லி அழைப்பது என்பது தெரியாதவனாய் வளர்கிறான். இதெல்லாம் தேவையே இல்லை. அவன் படிப்பான், பணம் சம்பாதிப்பான். அவன் எதற்கு வெண்டைக்காயை உடைத்துப்பார்க்கவேண்டும் என்று நினைத்தால், அது இன்னும் ஈனம்.! அவன் வீட்டு வேலைக்காரன் வாங்கிவரும் முற்றல் வெண்டைக்காயைக் கூட கண்டுபிடிக்கமுடியாத வெண்டைக்காய் ஆகிவிடுவான்

தலைவா, வா!

Image
             நீண்ட நாட்களாகவே நண்பர்கள் கேபிள் சங்கர், கே ஆர் பி செந்தில் ஆகியோர், நீங்கதான் சாவிக்குப் பிறகு, அடுத்து மேலாண்மை சம்பந்தமாக மிகவும் எளிமையான நடையில் ஒரு புத்தகம் எழுதுங்கள் என்று வலியுறுத்தினார்கள். சரியான விஷயம் கிடைக்காமல் தேடிக்கொண்டே இருந்தேன்.          சென்ற மார்ச் மாதம், என் விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்த அன்று, அன்பு எழுத்தாளரும், இளைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய ஆசானுமான பா.ராகவன் அவர்கள் ‘லீடர்ஷிப் பற்றி ஒரு புத்தகம் எழுது! ஒரு மாசம் டைம் தரேன் என்று ஆணையிட்டார். சில குறிப்புகளும் கொடுத்தார்.    தலைவனுக்குரிய தகுதிகளை பல்வேறு புத்தகங்கள் பிரித்து மேய்ந்து விட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளிவந்த சில புத்தகங்கள் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவற்றிலிருந்து அடி நாதத்தை எடுத்துக்கொண்டு, நம் சூழலுக்கேற்ப ஒரு கதையாக வடிவமைத்து மெதுவாக ஆனால் சீரியஸாக எழுத ஆரம்பித்தேன். தலைமைப்பண்புகளை தனித்தனி கட்டுரைகளாகப் படிக்காமல், ஒரு கதையாக, நாவலாகப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்க விழைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் இதனை Business Novel என்பார்கள். மு